Headlines

எலுமிச்சையின் விலை அதிகரிப்பு!

எலுமிச்சையின் பற்றாகுறை காரணமாக தற்போது சந்தைகளில் எலுமிச்சையின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் எலுமிச்சை 700 ரூபாய் தொடக்கம் 750 ரூபாய் இற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேவேளை, ஒரு எலுமிச்சையின் விலை 20 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Read More

புஸ்ஸலாவை இளைஞர் மரண வழக்கு ஒத்திவைப்பு

புஸ்ஸலாவை – ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் ரவிசந்திரனின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணையை எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, கம்பளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் சாந்தனி மீகொட, நேற்று உத்தரவிட்டார். மேலும், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் புஸ்ஸலாவை பொலிஸ் நிலையத்தின் சிறைசாலையை பார்வையிட நீதவான்,  எதிர்வரும் 30ஆம் திகதி விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

Read More

சலாவ சம்பவம் : மூன்று காலத்திற்கு நட்ட ஈடு

சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தமது அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து சமர்ப்பிக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்…

Read More

கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்பு

இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும் 10 சிவப்பு வர்ண புல்புல் குருவிகள் என்பன கைப்பற்றப்பட்டன. இந்த பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் குறித்த பறவைக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டபோது 10கிளிகளும் 4 லவ்பேட்ஸூம் இறந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலைத்தீவை சேர்ந்த இரண்டுபேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கு…

Read More

குவைத்தில் சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்

-ஆர்.கோகுலன் – குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்­ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது. இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்­தி­ய சாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­ துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்…

Read More

ஆட்பதிவுத் திணைக்களமும் இடமாற்றம்

கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.

Read More

அதிபர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு

நாடு முழுவதுமுள்ள அதிபர்களின் பிரச்சினைகளின் நியாயப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெரிவிப்பதுடன் மேற்கொள்ளப்படக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று அறிவிப்பதாகவும், விரைவில் கல்வி அமைச்சருடனான பேச்சுவார்த்தையை ஏற்படுத்தி இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முயல்வதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுனந்த காரியப் பெரும உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், அதிபர் சேவையின் முரண்பாடுகளின் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நேற்று புதன்கிழமை (21.09.2016) காலை 10.30 மணியளவில் கொழும்பு கோட்டைப்…

Read More

யோசித்தவின் மனு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்காக தாக்கல் செய்திருந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சீ.எஸ்.என் தொலை காட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி தொடர்பாக யோசித்தவின் வெளிநாட்டு பயணம் தடை செய்யப்பட்டிருந்தது. எனவே,மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த இந்த மனுவை அவரது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார். யோசித்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி…

Read More

கெஹலிய ரம்புக்வெலவின் மகன் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல பொலிஸாரால் இன்று (22) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பிலே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

வட மாகாண தமிழ் மொழிச் சேவைக்கு புதிய பொலிஸ் அவசர இலக்கங்கள்

தமிழ் மொழியில் தகவல்களைப் பெறுவதற்காகவும் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் புதிய பொலிஸ் அவசர அலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக இந்தப் புதிய இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 0766 224949 மற்றும் 0766 226363 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்வதன் மூலம் தமிழில் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்நடவடிக்கை வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read More

சரத் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (21) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக சரத் வீரவன்ச நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு கடந்த முதலாம் திகதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

இம்மாதம் 27ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும். நுளம்புகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார். நுளம்பு ஒழிப்பு வாரத்தில் வீடுகள், நிறுவனங்கள் என்பனவற்றின் சுற்றுச் சூழல்கள் பரிசோதிக்கப்படவிருக்கின்றன. நான்காயிரத்து 500 பேரை உள்ளடக்கிய குழுக்கள் இந்தப்பணியில் ஈடுபடும்.

Read More