Headlines

இலங்கையருக்காக அபராத பணம் வழங்கிய சவூதி

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்ட முறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த…

Read More

குவைத்தில் இலங்கையர் கைது

குவைத் நாட்டில் தனது தங்குமிடத்தில் கள்ளச்சாரயம் (கசிப்பு) காய்ச்சினார் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தொழிலாளி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளி சல்மியா என்ற பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி வீடமைப்பு தொகுதியில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வசித்து வந்த தொடர்மாடி குடியிருப்பில் உள்ள வசிப்பிடத்தில் கள்ளச்சாரயம் காய்ச்சும் போது திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீ தொடர்மாடியில் பரவியதை அடுத்து, அவர் கள்ளச்சாரயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது.

Read More

குவைத்தில் சிலிண்டர் வெடிப்பில் இலங்கையர் மரணம்

-ஆர்.கோகுலன் – குவைத்தின் கைதான் நகரில் இடம்­பெற்ற சமையல் எரி­வாவு சிலிண்டர் வெடிப்பு சம்­ப­வத்தில் இலங்கை பிரஜை ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­படு­கி­றது. இந்தச் சம்­பவம் இலங்கை பிர­ஜைகள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யொன்றில் கடந்த 18 ஆம் திகதி இடம்­பெற்­றுள்­ளது. இதில் இலங்கை பிர­ஜைகள் இருவர் பலத்த காயங்­க­ளுக்குள்­ளாகி வைத்­தி­ய சாலையில் சிகிச்சை பெற்று வந்­துள்ள நிலையில் இவர்­களுள் ஒருவர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. வெலி­மடை குருத்­த­லாவை பிர­தே­சத்தை சேர்ந்த நபர் ஒரு­வரே உயி­ரி­ழந்­ துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்…

Read More

கட்டாரில் பொதுமன்னிப்பு  காலம் அறிவிப்பு!

கத்தார் நாட்­டுக்கு சென்று  சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக 3 மாத பொது­மன்­னிப்பு காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது. செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலaை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று வீஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை,…

Read More

134 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்

சவுதி அரேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பணிப்பெண்களாக தொழில்புரிந்த 134 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று காலை (05) நாடு திரும்பியுள்ளனர். நாடு திரும்பிய பெண்கள் இலங்கை தூதரங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு திரும்பிய இரண்டு பெண்கள் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

Qatar விமான நிலையத்தில் பயணிகளுக்கு 35 ரியால் நுழைவு வரி

எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் ஒன்று கத்தார். இதன் தலைநகர் DOHAவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு வருகை தரும் விமான பயணிகளுக்கு 35 ரியால் அதாவது ரூ.1400 நுழைவு வரி வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் டிக்கெட் எடுப்பவர்களிடம் கட்டணத்துடன் சேர்த்து நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால் அது டிசம்பர் 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதில் 2 வயதுக்கு கீழ் டிக்கெட் இன்றி பயணம் செய்யும் குழந்தைகளுக்கு அது…

Read More

குழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

Read More

சவூதியில் விபத்துக்களை படமெடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை !

துபாயில் விபத்துக்களை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் குறைந்தபட்சம் 3 மாதத்திலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சவூதியிலும் அதைவிட கடும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சவூதியில் நடைபெறும் சாலை விபத்துக்கள், கடல், காற்று, நெருப்பு மற்றும் இதர வகை விபத்துக்கள் அனைத்தையும் படமெடுத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தனிமனித அந்தரங்க பாதுகாப்பு…

Read More

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு உதவ புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் சென்றுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் விசேடமாக வீட்டுப்பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், இதன் காரணமாக அங்கிருந்து தப்பி தூதரகத்தில்…

Read More

இலங்கை பணிப்பெண் குவைத்தில் மரணம்

குவைத்துக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் ணாக தொழி­லுக்கு சென்று அங்கு மர­ண­ம­டைந்த இலங்கை பெண்­தொ­டர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. இது­தொ­டர்­பாக வெளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத்தில் உள்ள இலங்கை தூத­ர­கத்­தினால் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சின் கொன்­சி­யூலர் பிரி­வுக்கு இலங்கை பணிப்­பெண்­ணொ­ருவர் இறந்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. என்­றாலும் அவர்­தொ­டர்­பான வி­ப­ரங்­களை உறு­தி­செய்­து­கொள்ள முடி­யாமல் இருக்­கின்­றது. எனினும் அவர் வெள்­ளத்­தம்பி சித்தி ஷகீரா எனும் பெயரில் N…

Read More

தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய இஸா முஹம்மத்

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.  இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.

Read More

குவைத்தில் தீவிபத்து: 9 வெளிநாட்டு தொழிலாளர்கள் பலி

குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 9 பேர் பலியாகினர். 23 பேர் காயம் அடைந்தனர். குவைத் தென் பகுதியில் 15 கி.மீட்டர் தொலைவில் பர்வானியா என்ற இடத்தில் புறநகர் உள்ளது. அங்கு வெளிநாடுகளில் இருந்து சென்று குடும்பத்துடன் தொழிலாளர்கள் பலர் தங்கியுள்ளனர். அவர்களில் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. முதலில் ஒரு வீட்டில் பிடித்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும்…

Read More