Headlines

ஆட்பதிவுத் திணைக்களமும் இடமாற்றம்




கொழும்பு, ஜாவத்தையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு, நாளை வெள்ளிக்கிழமை (13) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை, இத்திணைக்களத்தில் எந்தவொரு சேவையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

27ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாய புதிய கட்டடத்தொகுதியில் வழமையான சேவைகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *