மண் மேடு சரிந்து விழுந்ததில் மாணவன் பலி : நாவலப்பிட்டியில் சம்பவம்
– க.கிஷாந்தன் – நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பௌவாகம பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயத்தில் தரம் 4இல் கல்வி பயிலும் 09 வயதுடைய திருச்சந்திரன் கோஷிகன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். குறித்த மாணவன் பாடசாலை விட்டு வீடு திரும்பிய போது, வீட்டுக்கு அருகில் உள்ள மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேடுக்குள் புதையுண்டு உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத…
