Headlines

வத்தளையில் நாளை 24 மணித்தியாலம் நீர்வெட்டு

வத்தளையில் நாளை 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Read More

மவுசாகலையில் மண்சரிவு அபாயம்: 249 பேரை வேறு பிரதேசங்களில் குடியமர்த்த நடவடிக்கை

அப்புத்தளை மவுசாகலை பெருந்தோட்டத்தின் 63 தொழிலாளர் குடும்பத்தினரைக் கொண்ட 249 பேரை மண்சரிவு அபாய நிலையற்ற டியகலை, பண்டாரயெலிய, பிட்டரத்மலை ஆகிய இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரப்பத்தனை பிளான் டேசன் பொறுப்பிலுள்ள மவுசாகலை பெருந்தோட்டம் மண்சரிவு அபாயம் ஏற்பாடும் பகுதியாக தேசிய கட்டட ஆய்வகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அத் தோட்டத்தின் தொழிலாளர் குடும்பங்களை அத் தோட்டத்திலிருந்து உடன் வெளியேற்ற வேண்டுமென்று ஆய்வகத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேசமூர்த்தி, ஏ….

Read More

நீண்டநாள் கொள்ளையர்கள் அகப்பட்டனர்

ஆனமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் இராணுவத்திலிருந்து தப்பி வந்து மறைந்திருக்கும் 26 வயது இளைஞனையும் கைது செய்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் எனவும், கடந்த பல வருடங்களாக மிகத் தந்திரமான முறையில் இவ்விருவரும் ஆனமடு, புத்தளம், கல்கமுவ, நிக்கவெரட்டி, வாரியபொல போன்ற பிரதேசங்களில் வீடுகள்…

Read More

புத்தளத்தில் முஸ்லிம் சிறுமி மீது பாலியல் சேட்டை; ஆட்டோ சாரதி கைது

– பாறுக் சிகான் – புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் சேட்டை செய்த ஆட்டோ சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று(8) மதியம் புத்தளம் நகரப்பகுதியில் நடைபெற்றுள்ளது. வழமை போன்று பாடசாலைக்கு சிறுமியை ஏற்றி இறக்கும் ஆட்டோ சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் ஆட்டோ சாரதியை தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்க வில்லை. பின்னர்…

Read More

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 இலட்சம் ரூபா கொள்ளை

த்தள – யுதகனாவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கொள்ளையர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மார்க்க அறிஞராக வரவேண்டுமென்ற, சிறுவனின் உயிரை குடித்த புல்டோசர் (படங்கள்)

– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு  நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும்  கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது. தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015)  சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப்…

Read More

வத்தளையில் இரவு வேளையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள்

வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு…

Read More

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடி­வுகள் நேற்று வெளியா­கி­யுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்­பு­ப­வர்கள் எதிர்­வரும் 23 ஆம் திக­திக்கு முன்­ன­தாக விண்­ணப்­பிக்­கு­மாறு பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட மாண­வர்கள் பாட­சாலை அதிபர் ஊடாக குறித்த விண்­ணப்­பங்­களை அனுப்ப முடியும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது குறித்த மேல­திக விப­ரங்கள் பாட­சாலை அதி­பர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பரீட்­சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

மாணவன் எச்.எஸ்; முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தி

– பி.எம்.எம்.ஏ.காதர் – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறு பேறுகளில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மருதமுனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற துறைமுக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹூமைதுஸ் ஸமீர்,ஆசிரியை எம்.எம்.ஹிஸ்வத்துல் அறபா தம்பதியின் புதல்வராவார்.மாணவன் முகம்மது முறைஸ்; பெரிய நீலாவணை ‘அல்-மஹதுல் இஸ்லாமி’அல்குர்ஆன் மனனக்கற்கை நிலையத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

இச்சிறுவனுக்கு உதவுங்கள்

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி ரூ பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் நாவிதன்வெளிக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் எனும் 4 வயது சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உள்ள நிலையில் இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக தலா 5 லச்சம் ரூபாய் தேவைபட்டது. இப்பணத்தொகையை இவ் வறிய குடும்பத்தினரால் ஈட்டிக்கொள்ள முடியாத தருணத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…

Read More

மத்தியமுகாம் அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் மூன்று மாணவர்கள் சித்தி

– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி கோட்டக் கல்வி பிரதேசத்தில் மத்தியமுகாம், 12 ஆம் கொளனி சது/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் நேற்று காலை வெளியான 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீச்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஏ.எச்.எப்.றிஸ்தா பெற்ற புள்ளி-165, எம்.ஜெ.ஹூனைப் முஹம்மட் பெற்ற புள்ளி-159, ஜெ.எப்.யாஸ்மின் பெற்ற புள்ளி-155 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப், கற்பித்த ஆசிரியர் எம்.எம்.அமிறூல் ஹக் ஆகியோர்களும், மாணவர்களும் பிரதேச அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.

Read More