Headlines

சுயாதீன தொலைக்காட்சியின் இப்தார் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் சுயாதீன தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தொலைக்காட்சியின் தலைமையகத்தில் அங்கு கடமையாற்றும் 12 முஸ்லீம் ஊழியா்கள் சோ்ந்து பிரமான்ட முறையில் இப்தாா் நிகழ்வை நடாத்தினாா். இந் நிகழ்வு ஜ.ரீ.என். 7 மணி சிங்கள செய்தியில் நேரடி ஒலிபரப்பட்டது. இந் நிகழ்வுக்கு சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சியின் பணிப்பாளா்கள் பொதுமுகாமையாளா்கள் ஊடகவியலாளா்கள் அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டனா். இந் நிகழ்வுக்கு மொலவி தாசீம் அனுசரனை வழங்கியிருந்தாா். அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, அசாத்  சாலி மற்றும் முன்னாள்…

Read More

சுவரொட்டிகள் அகற்றப்பட்டன

பாதுக்க பகுதியில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரவு அகற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாடு முழுவதிலும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பணித்துள்ளார்.

Read More

கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட  பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது 33) என்கின்ற நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் இளைஞர் கடந்த 8ஆம் திகதி இரவு இப்பாழடைந்த கிணற்றிற்கு அருகாமையால் நடந்து செல்கையில் தற்செயலாக வீழ்ந்துள்ளார். இரண்டு தினங்களும் நீராகரம் இன்றி மிகவும் கஷ்டமான நிலையை அடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். இரண்டு தினங்களாக குறித்த நபர் காணாமல்போனதையடுத்து…

Read More

“கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்” நுால் வெளியீடு

– அஷ்ரப் . ஏ. சமத் – பி.அமல்ராஜின் “கருகிய காலத்தின் நாட்குறிப்புக்கள்”  தமிழ் தந்தியியல் வெளியான நீள் தொடாின் தொகுப்பு) நுால் வெளியீடு 12.07.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 05.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும். காப்பியக்கோ டாக்டா் ஜின்னா சரிப்தீன் (துனைத் தலைவா்) கொழும்பு தமிழ்ச்சங்கம் அவா்கள் தலைமையில் நடைபெறும்.  வெளியீட்டுரை  கவிஞா் அஷ்ரப் ஷிகாப்தீன், புத்தக வெளியீடு முதல் பிரதி திரு. திருமதி பிரான்சீஸ்,  நுால் விமா்சனம்,  மு.தயாபரன்,  வரவேற்புரை கவிஞா்…

Read More

இந்த இருவரும், அவசர உதவி கேட்கின்றனர்

ஜின்னாபுரம் ஆலங்குடா ஏத்தாளையில் வசித்துவரும் ஏ.எஸ்.கபூர் என்பவரின் இரு மகள்களான பாத்திமா றிகாஸா வயது 12, பாத்திமா றிமாஸா வயது 02 ஆகிய இருவரும் லியுகோமியா நோயினால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள 25 இலட்சம் ரூபா செலவாகும் என மதுரை வைத்திய  நிபுணர் சிபார்சு செய்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன் இப்பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், வறுமைக் கோட்டில் வாழும் இவர்களின் தந்தை முச்சக்கரவண்டி ஓட்டி தனது குடும்பத்தை…

Read More

கல்பிட்டி பகுதியில் கிணற்றில் விழுந்து குழந்தை பலி

புத்தளம் – கல்பிட்டி  பகுதியில் குழந்தை ஒன்று வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றில் தவறுதலாக விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் 5 வயதுடைய குழந்தை  உயிரிழந்துள்ளது.  சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

அ.இ.ம.கா.வின் இறுதித் தீர்மானம் நாளை

-எம்.எஸ்.எம். ஹனீபா எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவது தொடர்பாக ஆராயும் அரசியல் அதியுயர் பீடம், அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் நாளை வியாழக்கிழமை (09) கூடி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய…

Read More

உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்­று­விட்டு தங்கநகைக்கடையில் கொள்ளை

மினு­வாங்­கொடை – கொழும்பு வீதியில் உள்ள பழைய சந்தை கட்­ட­டத்­தொ­கு­தி யின் கீழ் மாடியில் அமைந்­துள்ள தங்க நகை கடையில் நேற்று மாலை பாரிய கொள் ளைச் சம்­பவம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. நகைக்­க­டையின் உரி­மை­யா­ளரை சுட்­டுக்­கொன்று விட்டு பெருந்தொகை­யான நகை­களை கொள்­ளை­யர்கள் கொள்­ளை­யிட்டு சென்­றுள்­ள­தா­கவும் இதன் போது கொள்­ளை­யர்­களின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி கடையின் சேவை­யாளர் ஒருவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார். கொள்­ளை­யர்கள் நால்வர் இந்த கொள்­ளைக்­காக இரு…

Read More

நீதிமன்றில் சரணடைந்த தேனுகவிற்கு விளக்கமறியல்

முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகம இன்று மஹியங்கனை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றில் சரணடைந்த தேனுக விதானகமவை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஊவா மாகாணசபை தேர்தலின் போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை யுத்தத்தால் பிரிந்த குடும்பத்தை 36 வருடங்களின் பின் சேர்த்து வைத்த வாட்ஸ்-ஆப்

இலங்கையில் போரினால் பிரிந்த குடும்பத்தினர் சுமார் 36 ஆண்டுகளுக்கு பின் வாட்ஸ்-ஆப் தகவலால் திருச்சியில் மீண்டும் ஒன்றாக இணைந்த உணர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. திருச்சி சுப்ரமணியபுரத்தில் யோவான் தேவாலயத்தின் அருகே வசித்து வருபவர் சாமுவேல் (72). இவருக்கு சலோமி என்ற மனைவியும், யேசுதாஸ் என்ற மகனும் உள்ளனர். சாமுவேலின் பூர்வீகம் இலங்கையில் உள்ள கண்டி ஆகும். கடந்த 1982ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் போர் தீவிரம் அடைந்ததால், சாமுவேல் தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு…

Read More

வித்தியா படுகொலை ; பதட்டம் குறித்தும் அறிக்கை தயார்

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் குறித்த பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலமைகள்  தொடர்பிலான விசாரணை அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம்  கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 13 ஆம் திகதி  காணாமல் போன வித்தியா 14 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து புங்குடுதீவில் பதற்ற நிலை நீடித்தது. இது குறித்த அறிக்கையினை பெற விசேட குழுவொன்று பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டிருந்தது. மேலும் படுகொலையுடன்  தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில்…

Read More

திருட்டு வானுடன் மூவர் கைது

வான் ஒன்றை கொள்ளையிட்டு கொண்டு சென்ற சந்தேகநபர்கள் மூவரை புத்தள குடாஓய பிரதேசத்தில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தள உணாவட்டுன பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வானை, குறித்த சந்தேகநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள், வெல்லவாய மற்றும் பெல்வத்த பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸர் கூறினர்.

Read More