Headlines

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்




மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று  ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்பம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த. உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படுவதோடு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பாடசாலைகள் செப்டம்பர் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வியமைச்சு தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *