Headlines

கல்முனை மாநகர சபை நிதிக்குழு மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி வசம்!

கல்முனை மாநகர சபை நிதிக்குழுவின்  உறுப்பினர்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் கல்முனை மாநகர சபை இரண்டாவது அமர்வு  மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் தலைமையில் இன்று காலை (30) 10.30 மணிக்கு  நடை பெற்றது. கல்முனை மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பில் இருந்துவந்த  இழுபறி நிலைக்கு இன்று முடிவுகட்டப்படுள்ளது . நிதிக்குழுவில் முதல்வர் உட்பட ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். அதன் அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி…

Read More

மன்னார் சொர்ணபுரி கிராமத்துக்கான பஸ் சேவை ஆரம்பம்!

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட அடம்பன் வட்டாரம், சொர்ணபுரி கிராமத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்களது முயற்சியினால் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று முதல் (30) சொர்ணபுரி ஜும்ஆ பள்ளிவாசல் வரையிலான பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. (ன)  

Read More

ஓட்டமாவடி கோட்டத்தில் கல்வி மட்டத்தை அதிகரிக்க செயற்றிட்டம்

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில், 9 ஏ(A) செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு நேற்று மாலை (29) பிரதியமைச்சர் அமீர் அலியின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதித் தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அல்தாப் அலி மற்றும்…

Read More

விடத்தல் தீவு மற்றும் பெரிய மடு பிரதேசங்களுக்கு தவிசாளர் செல்லத்தம்பு விஜயம்!

மன்னார் மாவட்டத்தின் விடத்தல் தீவு மற்றும் பெரியமடு ஆகிய பிரதேசங்களுக்கு மன்னார், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை மேற்கு பிரதேசபையின் தவிசாளர் செல்லத்தம்பு ஐயா நேற்று (29) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். விடத்தல்தீவு கிராமத்திற்கு விஜயம் செய்த தவிசாளர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சனூஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான ஆதிர், பேடினற் ஆகியோரைச் சந்தித்து, கிராமத்தின் உள்ளக  வீதிகளின் புனரமைப்பு பணிகள்  தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின்…

Read More

சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!

காலம்சென்ற சோபித்த தேரரை நினைவுகூறும் முகமாக, அனுராதபுரம் விலச்சி பிரதேசத்தில் சோபித்த ஹிமிகம கிராமத்தில் 153 வீடுகள் அமைத்து ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக   அடிக்கல் நாட்டும் வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் (27) இடம்பெற்றது. இவ் வீட்டுத்திட்டத்துக்காக   இந்திய அரசு சுமார் 300 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.    இந்நிகழ்வு அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் பி.ஹெரிசன், அமைச்சர் கயந்த கருணாதிலக, அமைச்சர் தயா கமகே  பாராளுமன்ற உறுப்பினர்   சந்திம கமகே, அகில இலங்கை மக்கள்…

Read More

வாழைச்சேனை பிரதேச மு.கா ஆதரவாளர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

(முர்ஷிட் கல்குடா) வாழைச்சேனைப் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் நேற்று மாலை (29) இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து இணைந்துள்ளனர். இதன்போது கல்குடாத் தொகுதியின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பாளர் ஏ.எல்.எம்.லியாப்தீன், கட்சியின் போராளிகள் மற்றும் வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல்…

Read More

மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தின் இப்தார்! பிரதி அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு!

(முர்ஷிட் கல்குடா) மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மருதமுனை அல்/மதினா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.நபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்…

Read More

காத்தான்குடி நகரசபை தேசிய பட்டியல் பிரிப்பு!

(முர்ஷிட்  கல்குடா) காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் ஆசனத்தை போட்டியிட்ட வேட்பாளருக்கு தலா ஒவ்வொரு வருடம் என்ற அடிப்படையில் வழங்கும் வகையில், ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (28) காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எஸ்.மாஹிர் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, எஸ்.மாஹிர் (தாறுஸ்ஸலாம் வட்டாரம்), எம்.ஜௌபர்கான் (மீராபள்ளி வட்டாரம்), முகைதீன் சாலி (அல்-அக்ஸா வட்டாரம்), எஸ்.சப்ரி (நூறாணியா வட்டாரம்) ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். அகில இலங்கை மக்கள்…

Read More

தலைமன்னாரில் புதிதாக அமைக்கப்பட்ட பாலம் திறந்து வைப்பு!

வட மாகாண சபையினால் அமுல்படுத்தப்பட்ட கிராமிய பாலத்திட்டத்தின் கீழ் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட தலைமன்னார் கிராமத்திற்கான புதிய பாலம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(27-05-2018) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சுமார் 22 மீற்றர் பாலம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கில் 87 கிராமிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் 16 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் போது விருந்தினர்களான அருட்தந்தை நவரெட்ணம் அடிகளார்,…

Read More

தாருல் ஹிகம் அனாதை இல்லத்தின் இப்தார் நிகழ்வு.. இஷாக் எம்.பி பங்கேற்பு!

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபைக்குட்பட்ட இஹலஹல்மில்லாவ கிராமத்தில் அமையப்பெற்றுள்ள தாருல் ஹிகம்  அனாதைகள் இல்லத்தின் அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலும், இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) இடம்பெற்றது. அதிபரின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், விஷேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும், அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமான்  கலந்து கொண்டார். சுமார் 55 க்கும் அதிகமான பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் வளரும் இவ் அனாதைகள் இல்லம், பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கிய வண்ணம்…

Read More

தர்கா நகரில் வடிகான்கள் தோண்டும் பணி ஆரம்பம்!

பேருவளை, தர்கா நகர், ஷெய்க் பாஸி மாவத்தையின் இருபுற வடிகான்களையும் தோண்டும் பணிகள்,  மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் தலைமையில்  (26) ஆரம்பமானது. ஏறத்தால 20 வருடங்களுக்குப் பிறகு பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் முயற்சியினால் இவ்வடிகான்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. (ன)    

Read More

கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரம் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில், கொழும்பு மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. கொழும்பு மாவட்ட மக்கள் காங்கிரஸின் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் பங்கேற்று தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார். (ன)

Read More