Headlines

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு!

வாழைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஒன்பதாவது வருடாந்த இப்தார் நிகழ்வு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயலில் இடம்பெற்றது. விளையாட்டுக் கழகத் தலைவர் எம்.எப்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்துகொண்டார் மேலும், அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், சட்டத்தரணி எச்.எம்.றாசிக், வாழைச்சேனை ஹைராத்…

Read More

“பின்கதவால் சென்று அரசியல் செயற்பாடுகளை நாம் ஒருபோதும் மேற்கொள்வதில்லை” அம்பாறை கட்சி முக்கியஸ்தர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!

முஸ்லிம்களின் பாரிய பங்களிப்புடனும், எமது கட்சியின் முதன்மைப் பங்களிப்புடனும் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இந்த மூன்று வருட காலப் பகுதியில் நமது சமூகத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு எந்தவொரு நன்மையையும் மேற்கொள்ளாத போது, நாங்கள் அரசாங்கத்துக்குள்ளேயே இருந்து, முடிந்தளவு சமூகத்தின் நன்மைக்காக போராடி வருகின்றோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள்…

Read More

வெள்ளிமலை பொது மையவாடிக்கு சுற்றுவேலி அமைக்க நிதி ஒதிக்கீடு!

மன்னார், முசலி, வெள்ளிமலை அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கையினை அடுத்து, கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், வெள்ளிமலை மையவாடிக்குப் பாதை அமைக்க நிதி ஒதிக்கீடு செய்தார். பாதைக்கான வேலைகள் முடிவடைந்த நிலையில், மீண்டும் பொது மையவாடியினை அடையாளப்படுத்தும் நோக்குடன், கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுவேலி அமைப்பதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்களிடம், அபிவிருத்திக் குழுவினர் முன்வைத்த நிலையில், தற்போது மாகாண சபையின் ஊடாக சுமார் இரண்டு இலட்சம் ரூபா…

Read More

வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்!

இலங்கையில் 45 வயதுக்குட்பட்ட 20,௦௦௦  வேலையில்லாப் பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தினை கருத்திற் கொண்டு, விண்ணப்பித்த 45 வயதுக்குட்பட்ட அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018 ஆம் ஆண்டு ஜுலை மாதத்திலும், 15,000 பட்டதாரிகளை 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு ரூபா 20,000 கொடுப்பனவை மாதாந்தம்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் இலங்கை சீனி நிறுவனத்தை மீண்டும் கையளிக்க வேண்டுமென தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு!

-ஊடகப்பிரிவு- பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை, இலாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சர், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்தில் அவரது அமைச்சின் கீழ் இந்த நிறுவனம் இருந்த போது, உற்பத்திச் செயற்பாடுகள் அதலபாதாளத்துக்குச் சென்றதாகவும், கரும்பு உற்பத்தியின் வீழ்ச்சி குறைவடைந்து, வருமானம் வீழ்ச்சி கண்டதாகவும் அவர்கள்…

Read More

விஷேட தேவையுடையோருக்கான ஆடை உற்பத்தி நிலையத் திறப்பு விழா!

செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஏர்முனை விசேட தேவையுடையவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆடை உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று முன்தினம் மாலை (29) வந்தாறுமூலை விஷன் வளாகத்தில் இடம்பெற்றது. அமைப்பின் தலைவர் எஸ்.கங்கேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியவள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார். மேலும், அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருண்மொழி, மாவட்ட செயலக சமூக சேவை உத்தியோகத்தர்…

Read More

முசலி வேப்பங்குள வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலிப் பிரதேசபை உறுப்பினருமான எஸ்.எம்.பைரூஸின் முயற்சியினால், முசலி, வேப்பங்குளம் கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது. (ஐ)      

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More

களுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கி வைப்பு!

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் தொழில்சார் ஊக்குவிப்பு பொருட்கள் செயலகத்தில் (28) வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஊக்குவிப்பு பொருட்களை வழங்கி வைத்தார். பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.கண்ணன், பிரத்தியேக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்…

Read More

இரணை இலுப்பைக்குளம் வட்டார மக்களை சந்தித்த மாந்தை மேற்கு தவிசாளர்!

மன்னார், இரணை இலுப்பைக்குளம் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் (குலம்) ஐயாவின் அழைப்பின் பேரில், அங்கு சென்ற மாந்தை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் செல்லத்தம்பு  மற்றும்  உறுப்பினர் நந்தன் ஆகியோர் அவ் வட்டார மக்களுடன் கலந்துரையாடினார்கள். அத்துடன், அவ்வட்டாரத்தில் அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்தி குழுக்களின் நிர்வாகத்தினரை சந்தித்துப் பேசினர். பின்னர் பரசன்குளம், சின்னவலையன்கட்டு பகுதிக்கு சென்று அங்கு மழை மற்றும் காற்றால் சேதமாகிய வீடுகளை பார்வையிட்டனர். அத்துடன், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை விரைவில் பெற்றுத் தருவதாகவும்…

Read More

‘நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகத்தை இடமாற்றக்கூடாது’ அமைச்சா் ரிஷாட், ஐ.ம.கூ. தலைவா் ஹசன்அலி வலியுறுத்தல்!

-ஊடகப்பிரிவு- நிந்தவூரில் உள்ள தொழிற்பயிற்சி அதிகார சபையின் மாவட்ட அலுவலகத்தை வேறெந்த பிரதேசத்திற்கும் இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சா் கலாநிதி சரத் அமுனுகமவிடம் எழுத்துமூலம் முன்வைத்துள்ள கோரிக்கையிலேயே அமைச்சா் இவ் வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலியும் நிந்தவூரிலேயே மாவட்ட தொழிற்பயிற்சி அலுவலகம்…

Read More

“இலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் பங்களிக்கின்றது” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பல்கலைக்கழகம் செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத மாணவர்களின் அறிவுத் தாகத்தை தீர்த்து வைத்து அவர்களை கல்விச்சமூக அந்தஸ்துக்குக் கொண்டுவர தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பெரிதும் துணைபுரிகின்றது என்று அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமேசன் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் (30) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கையின் கல்வித்துறை முறைமையின் காரணமாக வருடம் தோறும் சுமார் 5 தொடக்கம் 6 சதவீதமான…

Read More