‘ரமழானின் இறுதிப் பத்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில், பள்ளிவாயலுடன் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்’ அமைச்சர் ரிஷாட்!
ரமழானின் இறுதிப் பத்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில், பள்ளிவாயலுடன் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முஸ்லிம் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாம் மிகவும் ஆவலுடன் எதிர் பார்த்த இந்த வருட ரமழான் எம்மை அடைந்து அல்ஹம்துலில்லாஹ்! இப்போது மிகவும் மகத்துவம் பொருந்திய இறுதிப்பத்தை அடைந்துள்ளோம். அதில் நாம் மிகவும் ஈடுபாட்டுடன் இறைவனோடு நம்மை இணைத்துக் கொள்வது அவசியமாகும்….
