Headlines

‘ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும்’ அமைச்சர் ரிஷாட்!

ர‌ம‌ழானின் இறுதிப் ப‌த்தில் இருக்கும் நாம் நோன்பின் மாண்புக‌ளை பெற்றுக்கொள்ளும் வ‌கையில், ப‌ள்ளிவாய‌லுட‌ன் ந‌ம்மை இணைத்துக்கொள்ள‌ வேண்டும் என‌ அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் முஸ்லிம் ச‌மூக‌த்திட‌ம் கோரிக்கை விடுத்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து, நாம் மிக‌வும் ஆவ‌லுட‌ன் எதிர் பார்த்த‌ இந்த‌ வ‌ருட‌ ர‌ம‌ழான் எம்மை அடைந்து அல்ஹ‌ம்துலில்லாஹ்! இப்போது மிக‌வும் ம‌க‌த்துவ‌ம் பொருந்திய‌ இறுதிப்ப‌த்தை அடைந்துள்ளோம். அதில் நாம் மிக‌வும் ஈடுபாட்டுட‌ன் இறைவ‌னோடு ந‌ம்மை இணைத்துக் கொள்வ‌து அவ‌சிய‌மாகும்….

Read More

மக்கள் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினராக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் நியமனம்!

சம்மாந்துறையைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றுள்ளார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான எம்.எச்.எம். நவவி தனது பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமாச் செய்ததை அடுத்து ஏற்பட்ட குறித்த பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் முன்னாள் உபவேந்தர் கலாநிதி, எஸ்.எம். இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (06) முதல் அமுலாகும்…

Read More

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி.அப்துல் கபூர் நியமனம்!

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ்வரும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் (CO-OPERATIVE EMPLOYEES COMMISSION) தலைவராக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (ன)

Read More

“வில்கொட தமிழ் தொழிலாளர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன்!

பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார். குருணாகல் மாநகரசபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன், இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் முன்வைத்தார். மேலும், இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப்…

Read More

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான கலந்துரையாடல்!

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான மேலதிக கலந்துரையாடல் நேற்று (05) பேருவளை பிரதேச சபையின் அழுத்கமை காரியாலயத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர் மேனக விமலரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தர்கா நகர் சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், களுத்துறை மாவட்ட தொகை மதிப்பு அதிகரி (District Valuer – Kalutara District) பண்டார கலந்துகொண்டதுடன், அவரிடம் தர்கா நகர்…

Read More

மக்கள் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தந்த மாவட்டங்களில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு பற்றிய கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.    

Read More

கொழும்பு, காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று, கட்சியின் தலைவரும், அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடனான இச்சந்திப்பின் போது, மன்னார், மட்டக்களப்பு இன்னும் பிற மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்குளி, காக்கை தீவில் வாழும் சுமார் 130 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழ்வதாகவும், நீண்டகாலமாக பெரும் அசௌகரியங்களை…

Read More

அக்குரணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், நீண்டகால அரசியல்வாதியும் பிரபல சமுக சேவகருமான அல்ஹாஜ் ஷகூர் மற்றும் பிரபல சமுக சேவையாளரும், முன்னணி அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளருமான சப்வான்  நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர். மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் அக்குரனை கிளை அமைப்பாளர் இல்யாஸ், அக்குரனை பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஆகியோர் முன்னிலையிலேயே,…

Read More

இப்தார் நிகழ்வு!

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சும், மன்னார் நகர பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் முசலி பிரதேச சபைத்  தவிசாளர் சுபியான் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

Read More

“முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு 10ஆம் திகதிக்கு முன்னர் சம்பளம் வழங்கவும்” அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்!

புனித ரமழான் நோன்பு பெருநாளை முன்னிட்டு, முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தினை இம்மாதம் 10 ஆம் திகதியோ, அல்லது அதற்கு முன்னரோ வழங்குவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை  அரச திணைக்களங்களுக்கு சுற்று நிருபம் மூலம் உடன் அறிவிக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்தனவிடம் வேண்டியுள்ளார். இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மற்றும் அரச முஸ்லிம் ஊழியர் ஒன்றியம் உட்பட பல அமைப்புக்கள்…

Read More

“செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிங்கள கிராமமான கெவிலியாமடு கிராமத்தில் “செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதியமைச்சரின் இணைப்பாளர் எஸ்.நிமால் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்டார, பிரதியமைச்சரின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின், வீடமைப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து…

Read More

டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி!

இன்று (4)டெங்கு விழிப்புணர்வு மற்றும் சிரமதானப் பணி முசலி முத்துரிப்புத்துறை கிராமத்தில் இன்று இடம்பெற்றது. முசலி பிரதேச சபை தவிசாளர் கலீபத் சுபிஹான் தலைமையில் PHI முசலி பிரதேச சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து, முசலி பிரதேச சபை ஊழியர்கள் மூலமாக இந்த சிரமதானப் பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் முசலி பிரதேச சபை பிரதி தவிசாளர் முகுசீன் றைசுத்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் J.பாயிஸ் அவர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More