Headlines

“தலைமன்னார் வைத்தயசாலையின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” தவிசாளர் முஜாஹிர்!

தலைமன்னார் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திப்பது தொடர்பில் முன்னாள் வடமாகாண சபை அமைச்சரும், தற்போதைய வட மாகாண சபை உறுப்பினருமான டெனீஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினருமான ஸ்டாயு அவர்களுடனும் இன்று தலைமன்னார் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர், மேற்படி வைத்தியசாலையில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஆளணிப்பற்றாக் குறை சம்பந்தமான விடையங்களினை கேட்டறிந்துகொண்டார் நீண்டகாலமாக நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்தியரினால் எடுத்துக் கூறப்பட்டதுடன் அதற்கான தீர்வினை உடனுக்குடன் பெற்றுத்தருமாறும்…

Read More

ஹெக்டர் அபுஹாமி எம்.பி – பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் சந்திப்பு!

கல்பிட்டி விவசாயிகளுக்கான மானியம் மற்றும் பாடசாலைக் கட்டிடம், மைதான புனரமைப்பு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத்தருமாறு ஹெக்டர் அப்புஹாமி எம்.பிக்கு கடிதம், அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைப்பு! -ஊடகப்பிரிவு- ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளரும், புத்தள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹெக்டர் அபுஹாமி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் ஆகியோரிக்கிடையிலான சந்திப்பு ஹெக்ட்டர் அபுஹாமி அவர்களின் இல்லத்தில் இடம் பெற்றது. இதன்…

Read More

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

-சுஐப் எம்.காசிம்- நாட்டின் துறைசார் நிபுணர்களையும் பாராளுமன்றத்துக்குள் உள்ளீர்க்கும் தேசியப்பட்டியல் திட்டம் இன்று பலரையும் தொற்று நோய்க்குள்ளாக்கியுள்ளது. இப்பட்டியலுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் எட்டாப்பொருத்தம். முன்னாள் ஜனாதிபதி ஜேஆரின் இத்திட்டம் அமுலான 1978 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற ஏழு தேர்தல்களில் (1989, 1994, 2000, 2002, 2004, 2010, 2015) இந்தத் தேசியப் பட்டியலுக்காக அதிகம் முண்டியடித்ததும், முரண்பட்டதும் முஸ்லிம் கட்சிகளே. முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தலில் (1989) கிடைத்த ஒரே ஒரு தேசியப் பட்டியலும் பல…

Read More

மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பிலான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் நகரில் மாடிவீட்டுத் தொகுதியை விஸ்தரித்தல் தொடர்பில், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க தலைமையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. 15 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புடன் கூடிய வணிக வளாகக் கட்டடத் தொகுதியை  அமைப்பதற்க்கான இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர பிதா துஷார சன்ஜீவ, மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன், மாகாண முதலமைச்சின் செயலாளர், மாநகர சபை ஆணையாளர் மற்றும் அரச நிருவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் உட்பட பலர்…

Read More

ரமழான் கிரிக்கெட் லீக் போட்டியில் விஷேட அதிதியாக இஷாக் ரஹுமான் எம்.பி!

பவர் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 9வது ரமழான் கிரிக்கெட் லீக் கிரிக்கெட் போட்டி கலாவவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் (26) இடம்பெற்றது. இந்நிகழ்வில்  விஷேட அதியாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார்  அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  இப்பலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் உட்பட பலரும்  கலந்துகொண்டனர். (ஸ)  

Read More

பொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி!

பொத்துவில் பிரதேசத்துகான தனியான கல்வி வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும், பொத்துவில் பிரதேசத்தின் அபிவிருத்திகள் குறித்தும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25) கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகால வெற்றிடமாக உள்ள தனியான கல்வி வலயம் ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும், பொத்துவில் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சிற்றூழியர்களை சீராக நியமிக்குமாறும், பொதுமைதானம் ஒன்றை அமைத்தல், கல்வியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் மற்றும் பொதுச்சந்தை…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் முயற்சியில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை!

கிண்ணியாவில் பெய்து வரும் கணமழையினைத் தொடர்ந்து ஜாயா வீதி, ஆலிம் வீதி, ஹிஜ்ரா வீதி, அண்ணல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் நேற்று இரவு (24) ஊர்மக்களுடன் இணைந்து களத்தில் நின்று இரவோடிரவாக நடவடிக்கை மேற்கொண்டார்.      

Read More

 பிரதேச சபை உறுப்பினர் ஜலீலினால் மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலின் கீழ், மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபையின் மாவடிப்பள்ளி வட்டார பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் சொந்த நிதியொதுக்கீட்டில், மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு ஒரு தொகுதி தளபாடங்கள்  இன்று (25) அமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் தலைவியிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட்- மட்டக்களப்பு மாவட்டம் கடந்த ஆட்சிக் காலத்தில் வறுமையில் மூன்றாவதாக காணப்பட்டது. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் தற்போது வறுமை ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சு பதவி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தின் வறுமை நிலையை இரண்டு வருடத்தில் 8.3 வீதமாக குறைப்பதற்கு குறித்த அமைச்சின் பங்களிப்பு அதிகம் உள்ளது. கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி…

Read More

திருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!

இன விகிதாசாரப்படி, திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர், குறிஞ்சாக்கேணி, புல்மோட்டை ஆகிய மூன்று புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டுமென, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கோரிக்கை விடுத்தார். மூதூர் பிரதேச செயலகத்தின் புதிய கட்டடத்தை, கடந்த திங்கட்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது, “திருகோணமலை மாவட்டம், அதிக சனநெரிசலைக் கொண்ட மாவட்டமாகும். அதிக குடும்பங்கள்…

Read More

லங்கா சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான லங்கா சதொச நிறுவனமும், யூ லீட் நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் இன்று (24) கைச்சாத்திட்டன. லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் மனித வலு மற்றும் ஊழியர்களின் திறன்களை விருத்தி செய்வதற்கான பயிற்சி நெறிகளுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம் மையப்படுத்துகின்றது. USAID நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூ லீட் (You Lead) நிறுவனம் இந்தப் பயிற்சிகளை வழங்குகின்றது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் யூ…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- வெள்ள அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த வரை உதவுமாறு அகில மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள அனர்த்தம் மற்றும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களிலும் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை இழந்தும் பரிதவிக்கின்றனர். இவர்களுக்கு முடிந்தவரை தனவந்தர்களும் வசதிபடைத்தவர்களும் உதவிக்கரம் நீட்டுமாறு அவர் வேண்டியுள்ளார். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் புனித ரமழான்…

Read More