Headlines

ரியோ டி ஜெனீரோவில் பதற்றம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று (10) டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது  சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி…

Read More

ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா  5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்  என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன. இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான…

Read More

பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி

பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 25 பேர் பலியாகினர். 35 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று (8) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். மன்னோ சாலையில் மங்கள் சவுக் அருகில் சென்றபோது அவரது காரை குறிவைத்து மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சக வழக்கறிஞர்கள் குவெட்டா…

Read More

தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு!

தாய்லாந்தில் பொது வாக்கெடுப்பு நடந்ததில் புதிய அரசியல் அமைப்புக்கு ஆதரவாக 61 சதவீதம் பேர் புதிய அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டு இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. தாய்லாந்தில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டுவரும் விதமாக ராணுவ ஆட்சிக்குழு உருவாக்கிய புதிய அரசியல் அமைப்பின் மீது நேற்று நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடந்தது. அதில், வரைவு அரசியல் அமைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லையா? என்றும் துணைக் கேள்வியாக பிரதமரை தேர்வு செய்வதில் நியமிக்கப்பட்ட…

Read More

துருக்கில் மாபெரும் பேரணி: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

துருக்கியில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. துருக்கியில் கடந்த மாதம் 15-ம்தேதி இரவு ராணுவத்தின் ஒரு பிரிவினர் அதிபர் எர்டோகனின் ஆட்சியை அகற்ற முயன்றனர். ஆனால் அந்த ராணுவ புரட்சியை எர்டோகனின் ஆதரவாளர்கள் முறியடித்தனர். இதில் புரட்சிப்படையைச் சேர்ந்த 100 வீரர்களும் எர்டோகனின் ஆதரவாளர்கள் 208 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக மாபெரும் பேரணி…

Read More

பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ள ஜப்பான் மன்னர்

உலகின் பெரும்பாலான நாடுகளில் மன்னராட்சி முடிந்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் மக்களாட்சி நடைபெறத் தொடங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. இருப்பினும் தங்களை ஆண்ட மன்னர்கள் மீது குடிமக்கள் பற்றும் பாசமும் வைத்திருக்கின்றனர். குறிப்பாக நிர்வாக பொறுப்பில் இல்லாதபோதிலும், பிரிட்டனில் மன்னர் குடும்பத்தினர், அந்நாட்டு அரசியலிலும், மக்கள் மனங்களிலும் முக்கியத்துவம் மிகுந்தவர்களாகவே காணப்படுகிறார்கள். அதேபோல், ஜப்பான் நாட்டிலும் மன்னர் குடும்பத்தினர் மீது மக்கள் மிகுந்த மரியாதைக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 82 வயதான ஜப்பான் பேரரசர் அகிஹிட்டோ, தனது அரியணையில் இருந்து…

Read More

பூமியை போன்று புதிய 20 கிரகங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் “நாசா” மையம் விண்வெளியில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டறிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளனர். அதில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அதுபோன்று இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த ஆய்வுகளை நாசா விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைகளில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய…

Read More

மியான்மரில் மர்ம நோய்க்கு

மியான்மர் நாட்டில் பரவிவரும் பரவிவரும் மர்ம நோய்க்கு 30 குழந்தைகள் பலியானதாக தெரியவந்துள்ளது. மியான்மர் நாட்டின் வடமேற்கில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஒருவகையான மர்ம நோய் பரவி வருகிறது. குறிப்பாக, நாகா பகுதியில் வேகமாக பரவிவரும் இந்த மர்ம நோய்க்கு கடந்த இரு மாதங்களில் 30 குழந்தைகள் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் 5 வயதுக்கு குறைந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை உண்டாக்கும் இந்த மர்ம நோய்க்கு இந்தியாவின் நாகலாந்தை ஒட்டியுள்ள…

Read More

ரியோ 2016 ஒலிம்பிக் விழா இன்று ஆரம்பம்

சர்­வ­தேச விளை­யாட்டு அரங்கில் உய­ரி­யதும் உன்­னதம் வாய்ந்­த­து­மான கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் 31 ஆவது அத்­தி­யாயம் பிரேஸில் நாட்டின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் கோலா­கல ஆரம்ப வைப­வத்­துடன் இன்று தொடங்­கு­கின்­றது. நான்கு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை லீப் வரு­டத்தில் நடை­பெறும் நவீன கோடைக்­கால ஒலிம்பிக் விளை­யாட்டு விழா, அதன் 120 வருட வர­லாற்றில் தென் அமெ­ரிக்க நாடொன்றில் அரங்­கேற்­றப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். ஒற்­றுமை, நட்­பு­றவு, சகோ­த­ரத்­துவம், புரிந்­து­ணர்வு ஆகி­ய­வற்றின் சின்­ன­மாக ஒலிம்பிக் விளை­யாட்டு…

Read More

ஒலிம்பிக் கிராமத்தில் கைவரிசை: டென்மார்க் வீரர்களின் பொருட்கள் திருட்டு

ரியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகி ஒருவரின் லேப்-டாப் மற்றும் வீரர்களின் சீருடைகள் சில தினங்களுக்கு முன்பு மாயமானது. இந்த நிலையில் டென்மார்க் அணியை சேர்ந்த வீரர்களின் செல்போன், ஐபேர்டு மற்றும் துணிகள் திருட்டு போய் இருக்கிறது. இதனை டென்மார்க் அணியின் தலைமை நிர்வாகி மொர்டென் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களின் உடமைக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

ஹிலாரி வெற்றி பெறுவதற்­கான சாத்­தியம்; கருத்து கணிப்பு

அமெ­ரிக்க ஜனா­தி­­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்சி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ள­தாக கருத்துக் கணிப்­பொன்று தெரி­வித்­­துள்­ளது. எதிர்­வரும் நவம்­பரில் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி தேர்தல் நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­றது. இந்­த­நி­லையில் ஜன­நா­யக மற்றும் குடி­ய­ரசு கட்சி­களின் சார்பில் ஹிலாரி மற்றும் ட்ரம்ப்­பிற்­கி­டையே கடு­மை­யான போட்டித் தன்மை நிலவி வரு­­கின்­றது. தேர்தல் பிர­சா­ர­ங்கள் அனைத்து மாநி­லங்­க­ளிலும் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் நடத்­தப்பட்ட கருத்துக் கணிப்பின் படி ஜன­நாயகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறு­வ­தற்­கான வாய்ப்­புகள்…

Read More

தன்னுயிரை நீத்து 300 பேரின் உயிரைக் காப்பாற்றிய இஸா முஹம்மத்

திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தீப்பிடித்ததில் அதில் சிக்கிய 300 பேரை மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜசிம் இஸா முஹம்மத் ஹாசன் வீரமரணம் அடைந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து டுபாய் சென்ற எமிரேட்ஸ் விமான சேவைக்கு  சொந்தமான விமானம் டுபாய் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது தரையில் மோதியதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.  இச்சம்பவம் நேற்று (3) இடம்பெற்றது.

Read More