Headlines

இத்தாலியில் பாரிய பூமியதிர்ச்சி ; உயிரிழப்பு 159 பேராக அதிகரிப்பு

இத்தாலியில் நேற்று (24) இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் 159 பேர்உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய இத்தாலியில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி 6.2 ரிச்டராக பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 159 பேர் உயிரிழந்துள்ளதுடன் 100 பேரை காணவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் உயிரிழந்தவர்களின்எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அந்நாட்டு அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்.

Read More

2 அடி நீளமும் 34 கிலோ எடையுமுடைய உலகின் மிகப் பெரிய முத்து

2.2 அடி நீள­மான பாரிய முத்து ஒன்றை பிலிப்­பைன்ஸைச் சேர்ந்த மீனவர் ஒருவர் வைத்­தி­ருக்­கிறார். இது, உலகில் இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­பட்ட மிகப் பெரிய முத்து எனக் கரு­தப்­ப­டு­கி­றது. பிலிப்­பைன்ஸின் பலவான் தீவின் கடற்­க­ரை­யொன்றில் 10 வரு­டங்­க­ளுக்கு முன்னர் மேற்­படி மீனவர் இந்த முத்தை கண்­டெ­டுத்தார். இதன் பெறு­மதி சுமார் 10 கோடி அமெ­ரிக்க டொலர்கள் (சுமார் 1,546 ரூபா) எனக் கரு­தப்­ப­டு­கி­றது. எனினும், மேற்­படி மீனவர் இந்த முத்தின் பெறு­ம­தியை உண­ர­வில்லை. இம் ­முத்தை தனது அதிஷ்டப்…

Read More

தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மறுப்பு

மும்பையில் 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்புள்ள சந்தேக நபர் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசு,  தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும் என்று பல முறை கேட்டும் பயனில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்று தொடர்ந்து பாகிஸ்தான் கூறி வருகிறது. எனவே, இது தொடர்பாக இந்தியா ஐ.நா. சபையில் புகார் கூறியது. மேலும் அவன் வசிக்கும் 9 முகவரிகளை கண்டுபிடித்து அதன் ஆதாரத்தையும் ஐ.நா….

Read More

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி நாதன் காலமானார்

சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை உடையவர். 92 வயதான அவர் கடந்த ஜூலை 31ம் திகதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு…

Read More

அம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்

அம்மை நோயை ஒழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் வல்லுனர்கள் குழுவுக்கு தலைமை தாங்கி, உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு அம்மை தடுப்பூசி போடும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரும்பங்காற்றிய மூத்த விஞ்ஞானி டி.ஏ. ஹென்டர்சன்(87) மரணம் அடைந்தார். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்திய அம்மை நோய்க்கு கடந்த 1960-ம் ஆண்டுகளில் தடுப்பு மருந்து கண்டறிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் டொனால்ட் ஏ. ஹென்டர்சன். அந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் பரவலாக அம்மை நோயால் பல கோடிக்கணக்கான…

Read More

நிறைவடைந்தது ஒலிம்பிக் – அமெரிக்காவுக்கு முதலிடம்!

ரியோ ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது. பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31–வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5–ந் திகதி கோலாகலமாக தொடங்கியது. தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த முதல் ஒலிம்பிக்கான இதில் 206 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் படையெடுத்தனர். 17 நாட்கள் நடந்தேறிய இந்த ஒலிம்பிக் திருவிழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் முதல் நாளில்…

Read More

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு: ஹிலாரி கிளிண்டன் முன்னணி

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி நடந்த கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஹிலாரி கிளிண்டன் டிரம்பை விட 8 சதவீத வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணி வகிக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் கோடீசுவரும் தொழிலதிபருமான டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார். தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரசாரம் அனல் பறக்கிறது. இருவரும் பல இடங்களுக்கு சுற்றுப் பயணம்…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான போட்டி – பலஸ்தீன கொடியை ஏந்திய, ஸ்காட்லாந்து ரசிகர்கள்

கிளாஸ்கோ செல்டிக் அணி மற்றும் இஸ்ரேலின் ஹபோயல் பீர் சேவா அணிகளுக்கு இடையேயான காலபந்து போட்டியில் ஃபலஸ்தீன் கொடியை ஏந்தி ஸ்காட்லாந்து கால்பந்து ரசிகர்கள் ஃபலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாம்பியன்ஸ் லீக் போட்டி துவங்கும் முன்பு ஃபாலஸ்தீனிய ஆதரவாளர்கள் ஃபலஸ்தீன் கொடியினையும் அந்-நக்பா (பேரழிவு) குறித்த செய்திகள் அடங்கிய நோடீஸ்களையும் விநியோகம் செய்துள்ளனர். நக்பா என்பது 1948 இல் நிகழ்ந்த இஸ்ரேல் உருவாவதற்கு காரணமாகவும் லட்சக்கணக்கான ஃபலஸ்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற…

Read More

சீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு

மியான்மரில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி, நாட்டின் வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த ராணுவ அரசு கொண்டு வந்த சட்டத்தினால் அதிபர் பதவி ஏற்க முடியாமல் போன ஆங்சான் சூகி, வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார். இந்த நிலையில் ஆங்சான் சூகி அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார். அங்கு பல்வேறு உயர்மட்ட தலைவர்களை சந்தித்த அவர்,…

Read More

பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கேட்ட அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி

பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்களில் 4 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் கழிப்பறையை உடைத்து, சூறையாடியுள்ளனர். இதனால் ஏற்பட்ட சேதாரத்துக்கும் பணத்தை செலுத்திவிட்டு அங்கிருந்து…

Read More

மோடி எல்லை மீறிவிட்டார்: பாகிஸ்தான்

பலுசிஸ்தானில் ‘பலூச் தேசிய இயக்கம்’ என்ற பெயரில் அதன் தலைவர்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை கோரி போராடி வருகின்றனர். மோடியின் பலுசிஸ்தான் ஆதரவுப் பேச்சால் ஊக்கம்பெற்றுள்ள அவர்கள், இவ்விவகாரத்தில் பிரதமர் மோடியுடன் இணைந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாகிஸ்தானின் அடக்கு முறைக்கு அந்நாட்டைப் பொறுப்பாளியாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இந்நிலையில் பலுசிஸ்தான் பற்றிய மோடியின் பேச்சு எல்லையை மீறயது என்றும் நாங்கள் காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபையில் கடுமையான முறையில் எழுப்புவோம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது….

Read More

200 மீட்டர் ஓட்டத்திலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கம் வென்றார், உசேன் போல்ட்

ஜமைக்கா நாட்டை சேர்ந்த பிரபல ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் மட்டும் தொடர்ந்து 8 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார். பந்தய தூரமான 200 மீட்டரை 19.78 வினாடிகளை ஓடிகடந்த உசேன் போல்டுக்கு அடுத்தபடியாக வந்த கனடா வீரர் ஆண்டிரே டி கிராஸே வெள்ளிப் பதக்கத்தையும், மூன்றாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் வீரர் கிறிஸ்டோபே லெமைட்ரே வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். ரியோ ஒலிம்பிக்கில்…

Read More