Headlines

தெற்காசிய பிராந்தியத்தின் மதிப்பீட்டு சங்கிலிகளுடன் இலங்கையை ஒன்றிணைக்க பரிந்துரைக்கிறோம்! – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்

ஊடகப்பிரிவு – ‘அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான தொலைநோக்கில் விவரித்துள்ளபடி ஏற்றுமதி தலைமையிலான தொழிற்துறைக்கு தொழில்மயமாக்கலுக்கான பொருத்தமான கொள்கைகளை மேம்படுத்துவதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து செல்கின்றது‘ என  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்; ரிஷாட் பதியுதீன்    தெரிவித்தார். கடந்த 9ஆம் திகதி கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்  இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின்  தூதுவர்  துங்–லாய் மார்கு க்கும் அமைச்சருக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இச்சந்திப்பில்…

Read More

வெடித்து சிதறிவரும் இஸ்ரேல் (புகைப்படம் இணைப்பு)

இஸ்ரேலில் செய்மதி ஒன்று வெடித்ததால் பாரியளவில் தீ பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது தீயணைப்பதற்காக பல விமானங்கள் உட்பட தீயணைப்புப் படைகள் களம் இறங்கியும் அணைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் இஸ்ரேல் துர்கீ, கப்ருஸ்,யூனான்,இத்தாலி போன்ற அண்மித்த நாடுகளில் உதவிக்கரம் கோரியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்கு இழைத்த தீங்குகளுக்கும் கொடுமைகளுக்கும் இறைவன் பொறுத்திருந்து தண்டனையளிப்பவன் என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்

Read More

சார்க் மாநாட்டை புறக்கணித்தது மாலைதீவு

சார்க் நாடுகள் அமைப்பின் 19வது உச்சி மாநாட்டை புறகணிப்பதாக மாலைதீவு அறிவித்துள்ளது. காஷ்மீரில் உரி இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை தொடர்ந்து சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இலங்கை ஆகிய நாடுகளும் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிட்டது. இந்த நிலையில், தற்போது 5 வது நாடாக மாலைதீவும் சார்க் மாநாட்டை புறக்கணித்தது. அந்த நாடு சார்பில் சர்வதேச பயங்கரவாதத்துக்கு மாலைத்தீவு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது….

Read More

சீனாவின் பகோடா கோபுரம் கின்னஸ் சாதனை படைத்தது

சீனாவின் கலாசார சின்னங்களில் ‘பகோடா’ என்ற மரத்தினால் ஆன கோபுரமும் ஒன்று. இக்கோபுரங்கள் வழிபாட்டு தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. சீனாவின் வடக்கு ஷான்ஸி மாகாணத்தில் உள்ள ‘பாக்யாங்’ கோவிலில் மிக உயரமான கோபுரம் கட்டப்பட்டுள்ளது. இது 1056-ம் ஆண்டில் லியாவோ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. மரத்தினால் ஆன இக்கோபுரம் 67.31 மீட்டர் உயரம் கொண்டது. இதில் உள்ள மரக்கட்டைகள் 3 ஆயிரம் கன மீட்டருடன் 2600 டன் எடை கொண்டதாகும். எனவே, உலகிலேயே மிக உயரமான மரத்தினால் ஆன…

Read More

ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனுக்கு உரிமைகள் இல்லை: இத்தாலி எச்சரிக்கை

பொது வாக்கெடுப்பு நடத்தி வெளியேறிய பின் ஐரோப்பிய யூனியனில் இருந்து மற்ற நாடுகளை விட அதிக உரிமைகள் எதிர்பார்க்கக் கூடாது என்று பிரிட்டனுக்கு இத்தாலி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி பிரிட்டனில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்காக அதிகப்படியான மக்கள் வாக்களித்தனர். இதனை தொடர்ந்து முறைப்படி வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தரப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…

Read More

பலத்த பாதுகாப்பையும் தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வடகொரிய வீரர்

வடகொரியாவும், தென்கொரியாவும் தீராப்பகை நாடுகளாக உள்ளன. இந்த நிலையில் வெகு அபூர்வ சம்பவமாக, பலத்த பாதுகாப்பு கொண்ட எல்லையை தாண்டி, வடகொரியா வீரர் ஒருவர் தென் கொரியாவுக்குள் நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நுழைந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை. அவர் மீது தென் கொரியா வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவும் இல்லை. அவர் எப்படி நுழைந்தார், எதற்காக நுழைந்தார் என்பது குறித்து தென் கொரியாவின் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தென்…

Read More

ரூ.5400 கோடி வருமானம் இழந்த டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். கோடீசுவரரான இவர் மிகப்பெரிய தொழில் அதிபர் ஆவார். தேர்தலில் போட்டியிடுவதால் கடந்த ஒரு வருடமாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதனால் அவர் தனது ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. அதனால் கடந்த ஒரு வருடத்தில் அவரது வருமானம் ரூ.5400 கோடி குறைந்துள்ளது. இத்தகவலை பிரபல ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. டொனால்டு டிரம்ப் விற்பனைக்காக 28 கட்டிடங்கள் கட்டினார். ஆனால் தேர்தல் பிரசாரத்தில் ‘பிசி’…

Read More

23.2 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப் பெரிய கோவா

23.2 கிலோ­கிராம் (51 இறாத்தல்) எடை­யுள்ள பாரிய கோவா ஒன்று பிரிட்­டனில் அறு­வடை செய்­யப்­பட்­டுள்­ளது. இங்­கி­லாந்தின் தென்­மேற்குப் பிராந்­தி­ய­மான கோர்ன்­வெல்லைச் சேர்ந்த டேவிட் தோமஸ் என்­பவர் இந்த கோவாவை அறு­வடை செய்­துள்ளார். வோர்­செஸ்­ட­ஷயர் பிராந்­தி­யத்தில் கடந்த வாரம் நடை­பெற்ற பிரித்­தா­னிய தேசிய பாரிய மரக்­கறி போட்­டி­களில் இந்த கோவா காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது. உலகின் மிகப் பெரிய கோவா எனும் 90 வரு­ட­கால சாத­னையை இந்த கோவா முறி­ய­டித்­துள்­ளது. இதற்குமுன் 1925 ஆம் ஆண்டு அறு­வடை செய்­யப்­பட்ட 19.05 கிலோ…

Read More

33 அடி நீளமான அனகொண்டா பிரேஸிலில் பிடிக்கப்பட்டது

பாரிய அன­கொண்டா பாம்­பொன்று பிரே­ஸிலில் பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இதன் நீளம் 33 அடி­க­ளாகும். பிரே­ஸிலின் வட பிர­ாந்தி­யத்­திலுள்ள பாரா மாநி­லத்தில் அணைக்­கட்டு நிர்­மாண நட­வ­டிக்­கை­யின்­போது இந்த அன­கொண்டா கண்­டு பி­டிக்­கப்­பட்­டது. அணைக்­கட்டை நிர்­மா­ணிப்­ப­தற்­காக குகை­யொன்றை நிர்­மாண ஊழி­யர்கள் வெடி­வைத்து தகர்த்த போது இப்­ பாம்பு வெளி­வந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. இந்த அன­கொண்டா 63 தொன் எடையைக் கொண்­டி­ருந்­தது. அதன் உடல் விட்டம் சுமார் 3 அடி­க­ளாகும். உலகில் இது­வரை பிடிக்­கப்­பட்ட மிகப்­பெ­ரிய பாம்­பு­களில் ஒன்­றாக இது இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது. இப்­…

Read More

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் மீண்டும் ஒருமனதாக தேர்வு

உலக வங்கியின் தலைவராக ஜிம் யாங் கிம் இன்று மீண்டும் இந்தப் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக வங்கியின் தலைவர்களை அவ்வங்கியில் அதிகப்படியான பங்குகளை வைத்திருக்கும் அமெரிக்காதான் தொடர்ந்து அறிவித்தும் நியமித்தும் வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு இப்பதவிக்கான போட்டியில் நைஜீரியா நாட்டை சேர்ந்த ந்கோஸி ஓக்கோஞோ-ல்வேலா என்பவர் அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட தலைவரை எதிர்த்துப் போட்டியிட்டு, தோல்வியை தழுவினார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவராக தென்கொரியா நாட்டை சேர்ந்த ஜிம் யாங்…

Read More

பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் – ஜேர்மனியில் சம்பவம்

ஜேர்­ம­னியின் கிழக்கு நக­ரான ட்ரெஸ்­டனில் பள்­ளி­வாசல் ஒன்றின் மீதும்  சர்­வ­தேச மாநாட்டு மையம் ஒன்றின் மீதும் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. நேற்று முன்தினம் (26) நடந்த இந்த குண்டு தாக்குதல் சம்­ப­வங்­களில் எவரும் காய­ம­டை­ய­வில்லை. இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக இது வரை யாரும் உரிமை கோர­வில்லை. எனினும் இன­வா­தமே இந்த தாக்­கு­தல்­களின் நோக்­க­மாக தெரி­கி­றது என்று அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இத் தாக்­கு­தலைத் தொடர்ந்து ஜேர்­மனியின் ட்ரெஸ்­டனில் உள்ள பள்­ளி­வா­சல்­களின் முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Read More