Headlines

கொங்கு தமிழர் மாநாட்டில்: மலேசிய பிரதமர்

கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். கோலாலம்பூரில் நடந்த கொங்கு தமிழர் மாநாட்டில் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கலந்து கொண்டு பேசினார். சுமார் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட மலேசியாவில் 8 சதவீதம் பேர் இந்தியர்கள் (தமிழர்கள்) ஆவர். இதில் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 2 லட்சம் தமிழர்களும் அடங்குவர். இந்த பிரிவினர் சார்பில் மலேசிய கொங்கு தமிழர் அமைப்பு நிறுவப்பட்டு உள்ளது….

Read More

டொனால்ட் டிரம்பிற்கு ஹங்கேரி பிரதமர் ஆதரவு

முதல் ஐரோப்பிய யூனியன் தலைவராக ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக…

Read More

கை, கால்கள் இல்லாமல் வாழும் ரஹ்மா!

நைஜீரியா நாட்டில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தை ரஹ்மா அருமா, பிறந்து ஆறு மாதத்தில் மர்மமான நோய் அறிகுறியுடன் அவதிப்படுவதை கவனித்து அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இந்த மர்மநோய் அவரது உடல் உறுப்புகளின் வளர்ச்சியை பாதித்தது. தற்போது சுமார் 20 வயதை அடைந்தாலும் ரஹ்மா கை, கால்கள் இல்லாமல் அவரது உடல் அமைப்பு மிகச் சிறியதாக ‘மரப்பாச்சி’ பொம்மை போல் இருக்கிறது. தனது எல்லா தேவைகளுக்கும் பெற்றோரின் உதவியை நாடும் நிலையில் அவர்…

Read More

பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷியாவுக்கு தடைவிதிக்க வேண்டும்: இங்கிலாந்து

ஊக்க மருந்து சர்ச்சையில் ரஷியா சிக்கியதையடுத்து, பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க அந்நாட்டிற்கு தடைவிதிக்க வேண்டும் என்று இங்கிலாந்து வலியுறுத்தி உள்ளது. ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்தில் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்நாட்டு அரசே இதற்கு அனுமதி அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ரஷிய தடகள வீரர், வீராங்கனைகள் 68 பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்த அப்பீலையும் சர்வதேச…

Read More

துருக்கி இராணுவப் புரட்சி! சதிகாரர்கள் யார்?

அரபு வசந்தம் என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் அரசுகள் கவிழ்க்கப்பட்டு அங்கு அமெரிக்காவின் பொம்மை அரசுகள் நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிவோம். துனிசியா ,லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் அந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால்,சிரியாவில் அரபு வசந்தம் தொடங்கப்பட்டுள்ளபோதிலும், அது 5 வருடங்களாக முடிவின்றித் தொடர்கின்றது. அந்த வரிசையில் இப்போது துருக்கியும் சிக்கியுள்ளது. இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் துருக்கி இப்போது இராணுவ சதிப் புரட்சி ஒன்றில் சிக்கி உடனே மீண்டுள்ளது.இராணுவப் புரட்சி ஒன்றும்…

Read More

எர்துகான் அளித்த, விறுவிறுப்பான நேர்காணல்

– Mohamed Basir – துருக்கிய ஜனாதிபதி ரஜப் தைய்யிப் அர்துகான் இன்று 21-07-2016 அல்-ஜஸீராவுக்கு அளித்த விறுவிறுப்பான நேர்காணலின் சுருக்கம் இது. • கடந்த வெள்ளி 15 ஆம் திகதி மர்மரைஸ் ஹொட்டலில் நான் இருந்தேன். அப்போதுதான் புரட்சிக்கான சதிமுயற்சி குறித்து எனக்கு தெரியவந்தது. • புரட்சி இரவன்று துருக்கி மக்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற பிடிவாதம் என்னுள் இருந்தது. • ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வீதிகளுக்கு இறங்குமாறு மக்களுக்கு நான் விடுத்த அழைப்புக்கு மக்கள் உடனடியாக…

Read More

உண்மையை காத்த ஒரு பொய்!

Mujeeb Ibrahim– சதி வலையில் எர்தொகான் உயிர் தப்பிய சம்பவம்: அந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர். அங்கே அவர்கள் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டனர். ஆனால் இறைவனின் உதவியால் அவர்கள் அங்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே எர்தொகான் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தார்! இருந்தும் ஆபத்து நீங்கிவிடவில்லை, அவர் அங்கிருந்து பயணம் செய்த விமானம் (business Jet) பின்னர் வானில் வைத்து…

Read More

துருக்கியில் ராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

துருக்கியில் இராணுவ புரட்சிக்கு உதவிய 9 ஆயிரம் அரசு அதிகாரிகள பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது துருக்கியில் அதிபர் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க நேற்று முன்தினம் இரவு இராணுவ புரட்சி நடத்தப் பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப் பட்டது. அதையொட்டி நடந்த துப்பாக்கி சண்டை மற்றும் மோதலில் 290 பேர் உயிரிழந்தனர். 1500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும்…

Read More

வீதிகளில் பிள்ளைகளை தூங்கவைத்துவிட்டு, பாதுகாப்பு பணியில் துருக்கிய பெற்றோர்கள்

துருக்கி இராணுவ சதி புரட்சியினை துருக்கி மக்கள் தோல்வியடைய செய்த பின் நகரங்களின் பாதுகாப்புக்காக துருக்கிய பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நகரங்களில் தூங்க வைத்து கொண்டு நகரின் பாதுகாப்பு கடமையில் கண்காணிப்புடன் இருந்தனர்.

Read More

அல்லாஹ் உங்களுடன், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் – எர்துகானுக்கு கர்ளாவி கடிதம்

-Ifthihar Islahi Azhary MA- சேஹ் கர்ளாவி அவர்கள் தலைவர் உருதுகான் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான், முஸ்லிம்களாகிய நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் بعث الدكتور يوسف القرضاوي ، رئيس الاتحاد العالمي لعلماء المسلمين، برسالة للرئيس التركي رجب طيب أردوغان ، بعد فشل «الانقلاب العسكري» على الأخير. أوقال «القرضاوي» في صفحته على «فيس بوك»: «بعثت برسالة للرئيس رجب طيب أردوغان،…

Read More

கண்ணீர் விட்டழுத எர்தூகான் (படங்கள்)

இராணுவ சதிப்புரட்சிக்கெதிராக போராடி, நாட்டின் நல்லாட்சிக்காக உயிர்நீத்தவர்களின் ஜனாஸாவில் கலந்துகொண்டு அவர்களுக்காக கண்ணீர்விட்டழும் மக்கள் தலைவன் – ரஜப் தைய்யிப் அர்தூகான்

Read More

3-வது தளபதியும் கைது

துருக்கியில் அதிபர் தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தின் ஒரு பிரிவினர் நேற்று புரட்சி நடத்தினர். அப்போது அதிபர் எர்டோகன் ஏஜியன் சுற்றுலா தளத்தில் தங்கியிருந்தார். அவரது வேண்டுகோளின்படி களம் இறங்கிய பொதுமக்கள் ராணுவ புரட்சியை வெற்றிகரமாக முறியடித்தனர். தலைநகர் அங்காரா மற்றும் இஸ்தான் புல் நகரங்களில் சுற்றிய பீரங்கி வாகனங்களை சிறை பிடித்தனர். இதனால் பொதுமக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே பல இடங்களில் கடும் சண்டை நடந்தது. அதில் புரட்சியில்…

Read More