Main News
அஸ்வர் ஹாஜியாரிடம் அன்பான வேண்டுகோள்!
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன். முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். அப்பொழுது முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கண்டனம் தெரிவித்து மறுப்பு எழுதினார்கள். அக்காலத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த அஸ்வர் கிறுக்காஜியார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவோ, வாய்பேசவோ இல்லை….
முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது
மஹிந்த புலிகளுக்கு 169 மில்.ரூபா வழங்கியது ஊர்ஜிதம்
மஹிந்த – பசில் மறுக்கவில்லை தேசத்துரோகத்துக்கு கடும் தண்டனை ;சொத்துக்களை முடக்கி பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவும் சட்டத்தில் இடம் அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இலங்கைக்குள் தனியான இராஜ்ஜியம் உருவாக்க நிதி உதவி வழங்கும் நபரின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்படுவதோடு சொத்துக்கள் யாவும் அரசுடமை யாக்கப்படும். இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் டிரான் அலஸ¤க்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். தான் பிரதமராக…
இலங்கையை கைப்பற்ற ISIS திட்டம் -BBC
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில…
இன்று மாலை மகிந்தவின் விடயங்களை அம்பலப்படுத்துவேன் – சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்தமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அம்பலப்படுத்த உள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இன ஐக்கியத்தை ரணிலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்
இலங்கைக்கு எதிரான சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுக்கவும், ஒன்றிணைந்த நாட்டுக்குள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே முடியும். ஜனநாயகத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது என ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தவறியேனும் மஹிந்த ராஜபக்ஷ வென்றிருந்தால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும். வடக்கில் தொடர்ந்தும் அடக்குமுறை கையாளப்பட்டிருந்தால் மற்றும் இராணுவ சப்பாத்துகளில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்தால் இன்று நாட்டில் மீண்டும்…
70 ஆயிரம் பொலிஸார் கடமையில்
எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கஹவத்தை தொடர் கொலை சம்பவம் தனக்கு நினைவில் உள்ளதாகவும் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயல்முறை துரிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும்,…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின், வாக்குரிமை மீறப்படுவது குறித்து முறைப்பாடு
இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் வரை தேர்தல் ஒன்று நடாத்தக் கூடாது என்பதுதான். ஏனைய வெளிநாட்டுக் குழுக்களும் சங்கங்களும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம். வெளிநாடுகளில் வாழும் 20 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வது எந்த விதத்தில் ஜனநாயகமாகும். மாப்பிள்ளை இல்லாமல் ஒரு…
தடை விதித்தார் தேர்தல்கள் ஆணையாளர்
அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் , அல்லது முடிவடைந்த திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் வேட்பாளர் , மாகாணசபை , உள்ளூராட்சி…
‘அந்தக் குடும்பத்துக்கு வெட்கம், மானம், ரோசம் சிறிதளவும் கிடையாது’ – சந்திரிகா ஆவேசம்
அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து சுதந்திரக் கட்சியை கொள்ளையரின் கூடாரமாக மாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெட்கமின்றி அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டையும், கட்சியையும் மீட்பதற்காகவே ரணிலுடன் கைகோர்த்ததாகக் கூறியுள்ளார். தனது தந்தையால் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியிலிருந்து உயிருள்ள வரை பிரியப்போவதில்லை எனவும் கட்சியை மீட்டுக்கொடுப்பதற்காகவே மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தனகல தொகுதி நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளின் கூட்டத்தில் கலந்து…
கலிமா சொன்ன முஸ்லிம்கள் UNP க்கு வாக்களிக்கமாட்டார்கள் – அஸ்வர்
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அடிப்படை வாதிகளாகச் சித்திரித்து எழுதிய அல்–ஜிஹாத் அல்–கைதா எனும் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்புத்தகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடைசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். நேற்றுக்காலை பம்பலப்பிட்டியிலுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஸ்வர் குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதியுள்ள அல்–ஜிஹாத், அல்–கைதா என்ற புத்தகத்தில் இலங்கையில்…
