Headlines

“எனது வாழ்க்கையில் நடந்த, மிக மோசமான நிகழ்வு”

உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். ” உலகக் கோப்பையுடன் …

Read More

இரண்டு மாணவர்களது பெறுபேறு ரத்து

பரீட்சை மண்டபத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற இரண்டு மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை கண்காணிப்புகளுக்காக 24 மணித்தியாலமும் அதிகாரிகள் குழு சகல பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவினரே இந்த கையடக்க தொலைபேசி விடயத்தை கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

13 வருட கல்வி அவசியமாக்கப்படவுள்ளது – பிரதமர்

தமது ஆட்சிகாலத்தில் 13 வருட கல்வியை அவசியப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்துக்குள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்கள் இருக்குமாக இருந்தால் அதற்காக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்கள் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் மாணவர்களுக்கு முழு கல்வியையும் போதிக்கும் செயலை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்

தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். தேர்தல் செயலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வந்துள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் 30 அதிகாரிகள் நாடளாவிய ரீதியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையில். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தின் பணிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி

வருகின்ற 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின்  அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Read More

தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை

இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல் வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு பாரிய நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்திருந்த விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு நேற்று  அறிவித்தது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் மேற்படி பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தக்கூடாது…

Read More

தாஜுடீன் கொலை தொடர்பாக யசாரா அபேநாயக்கவிடம் விசாரணை

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து ஒன்றில் மரணமானதாக கூறப்பட்ட வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கொலை, தாஜுடீன் மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காதல் முரண்பாடுகளினால் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் மோதலுக்கு காரணமான, யசாரா அபேநாயக்க என்ற அந்தப் பெண், முன்னர் ராஜபக்சவினரால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றியவர்….

Read More

பேஸ்புக் பதிவால் பத்திரிகையாளர் அடித்துக்கொலை

ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மீதான மோகம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அடிக்கடி கலவரம் ஏற்படுவதும், ரசிகர்கள் அடித்துக்கொண்டு இறப்பதும் வாடிக்கைதான். இதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரிகையாளர் ஒருவர் கால்பந்து ரசிகரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடான அஸர்பைஜான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் அசிம் அல்ஜியேவ். இவர் கால்பந்து போட்டியின் போது பத்திரிகையாளரை நோக்கி தவறான சைகை செய்த, ஹபாலா என்ற கால்பந்து கிளப்பின் வீரரான ஜாவித் ஹூசேனேவ்வை பேஸ்புக்கில் கடுமையாக…

Read More

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத் தின் குமா­ர­பு­ரத்தை நிரந்­தர வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஜெக­நாதன் குரு­தேவன் என்­ப­வரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்­துள்ளார். 2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அனர்த்­தத்­தினால் பலர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன், இன்னும் சிலர் காணா­மலும்…

Read More

வெற்றிலைக்கு வாக்களிப்பது, ஒரு மிருகத்திற்கு சமம் – சந்திரிக்கா

இம்முறை பொது தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டில் ஜனநாயக ஆட்சி காணப்படுவதாகவும் தொடர்ந்து அதனை கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி கைக்கு அல்லது வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதனால் மாறாக மிருகத்திற்கு வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி…

Read More

புதிய அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை

– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(12) நடைபெற்ற மௌலவிமார்கள், புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு உரையாற்றுகையில் கொழும்பு மாவட்ட…

Read More

மஹிந்தவுடன் சேர்த்து என்னையும் வெட்டிக் கொலை செய்­வ­தாக அச்சுறுத்தல் – ஏ.எச்.எம்.அஸ்வர்

மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்­வ­தாக எனக்கு தொலை­பேசி மூலம் மரண அச்­சு­றுத்தல் விடுப்­ப­தாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­ பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார். இது தொடர்­பாக பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளேன் எனவும் தெரி­வித்தார். தேசத்தை பாது­காக்கும் ஒன்­றியம் நேற்று கொள்­ளுப்­பிட்டி பேர்ல் சிட்டி ஹோட்­டலில் ஏற்­பாடு செய்­தி­ருந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், வெலி­கம பகு­தியில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து தேர்தல் பிர­சாரம்…

Read More