Headlines

வாக்களிக்க செல்லும் முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல்கள் ஆணையாளரின் செய்தி

முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாது என சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், குறித்த பிரசாரங்களை மேற்கொள்ளும் சமூக ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பிலே மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிந்து வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லமுடியும், என்றாலும் அங்கே அவர்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்து கொள்வதற்காக…

Read More

ஜோதிடம் பார்த்து தேர்தலுக்கு நாள் குறிப்பவன் நானில்லை

நான் ஜோதிடம் பார்த்து, நேரம் பார்த்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பவனில்லை. அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கே உள்ளது. புத்தர் ஜோதிடத்தை சார்ந்திருக்கவில்லை என்றால் நாம் எப்படி அதைச் சார்ந்திருக்க முடியும்? – இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். கொழும்பு – 07 இல் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாட்டின்போது “ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்…

Read More

மைத்திரியின் கரங்களைப் பலப்படுத்தும் பிரதமர் வேண்டும் : சந்திரிக்கா

தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படக் கூடிய பிரதமரை நியமிப்பது அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பலங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்வொரு வழியிலேனும் பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடையும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் இருந்திருந்தாலும், கட்சியை விட நாட்டை குறித்து சிந்தித்து ராஜபக்ஷவை தோல்வியடைய செய்யுமாறும் அவர்…

Read More

உங்­க­ளையும் குடும்­பத்­தையும் பாது­காப்­பதா? மஹிந்­த­வையும் குடும்­பத்தையும் பாது­காப்­பதா?

எதிர்வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் இந்­நாட்டு மக்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இதில் நீங்கள் உங்­க­ளையும், உங்கள் குடும்­பத்­தையும் பாது­காத்துக் கொள்­வதா அல்­லது மஹிந்த ராஜபக் ஷவையும், அவ­ரது குடும்­பத்­தையும் பாது­காத்துக் கொள்­வதா என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும். உங்­க­ளுக்கு உங்கள் குடும்­பமும், உங்­க­ளது எதிர்­கா­லமும் நாச­மாகிப்போக வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி லான கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிக்க முடியும். இந்தத் தேர்தல் உங்கள் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் ஒரு தேர்தல் என ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும்,…

Read More

மஹிந்தவின் பிரதமர் கனவுடன் குடியுரிமையும் பறிபோகும் : ராஜித

புலி­க­ளுக்கு பணம் கொடுத்­தது நிரூ­பிக்­கப்­பட்ட பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் பிர­தமர் கனவு மட்­டு­மல்ல, அவ­ரது குடி­யு ­ரி­மையும் பறி­போகும் என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இன்று மஹிந்த ராஜபக் ஷவின் காற்று தடைப்­பட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் காற்று வீச ஆரம்­பித்­துள்­ளது என்றும் அமைச்சர் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மகா­நாட்டில் உரை­யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரி­வித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து…

Read More

மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் : இன்றைய தினம் விசாரணை

ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்­பிக்கை நிதியம் ஆகி­ய­வற்றில் இருந்த பொது மக்­களின் 1150 கோடி ரூபாவை தெரிந்­து­கொண்டே மோசடி செய்­த­தாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதி­ய­மைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்­ரா­லுக்கும் எதி­ராக வழக்­கொன்று தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. சட்­டத்­த­ரணி கெலும் குமார சிங்­க­வினால் நேற்று தாக்கல் செய்­யப்­பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தாக கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான்…

Read More

உங்களுக்கு பிரதமர் பதவி இல்லை! மஹிந்தவுக்கு மைத்திரி அதிரடி அறிவிப்பு

சிலவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள 5 பக்க கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான பகுதிகள் பின்வருமாறு உள்ளன! “நீங்கள் என்னுடன் ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக கூறும் செய்தியொன்றை அண்மையில் ஊடகங்கள் வௌியிட்டிருந்தன. உங்களுக்கு அவ்வாறான எதிர்பார்ப்பு இருக்குமாயின் அது தொடர்பில் உங்கள் கவனத்திற்கு கொண்டு வரவேண்டிய சில…

Read More

வெள்ளைவேன் தான் வந்தது:வெலே சுதா வாக்குமூலம்

துமிந்த சில்வா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது நான் அவரின் கீழ் பணியாற்றினேன். அச்சந்தர்ப்பத்தில், தேர்தல் பிரசாரத்துக்காக என்னிடம் 20 இலட்சம் ரூபாவை கேட்டார். அந்த பணத்தை கொடுத்தேன். நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதன் பின்னர் என்னுடைய வீட்டுக்கு வெள்ளைவேனும் பொலிஸமே எந்தநேரமும் வந்தது என்று வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமந்த குமார, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாக்குமூலமளித்தார். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே…

Read More

ஜனா­தி­பதி மைத்­திரி – பிர­தமர் ரணில் இணைந்த ஆட்சியே வேண்டும்

இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பை மதிக்­காது அதனை தூக்­கி­யெ­றிய வேண்டும் எனக் கூறும் மஹிந்த ராஜபக் ஷவிற்கு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு தகு­தி­யில்­லை­யெனத் தெரி­வித்த சிறுவர் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும், கொழும்பு மாவட்­ட ஐ.தே.முன்­ன­ணி வேட்­பா­ள­ரு­மான ரோஸி சேனா நாயக்க, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணைந்த ஆட்­சியே சிறப்­பான புரிந்­து­ணர்வு ஆட்­சி­யென்றும் தெரி­வித்தார். கொழும்பில் ஐ.தே.கட்­சியின் தேர்தல் பிர­சார அலு­வ­ல­கத்தில் நேற்றுமுன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் மேலும்…

Read More

மரணித்த சிசுவை எலிகள் கடித்தன : யாழ்.போதனா வைத்தியசாலையில் சம்பவம்

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்­தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று  யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, உடுவில் பகு­தியில் பிறந்து ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மூச்­சுத்­தி­ணறி இறந்­துள்­ளது. குழந்­தையின் உடலை பிரேத பரி­சோ­தனை செய்­வ­தற்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் சடலம் வைக்­கப்­பட்டு இருந்த நிலையில் எலிகள் குழந்­தையின் முகத்தை கடித்து குத­றி­யுள்­ளன. இந்­நி­லையில்…

Read More

பொதுபல சேனா, ராவண பலய அமைப்புகள் தற்போது இல்லை – ராஜித

பொது பல சேனா, ராவண பலய ஆகிய அமைப்புகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது செயற்பட்டதெனவும் தற்போது அவற்றில் ஒன்றேனும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பினாலேயே ஏனைய அமைப்புகளுக்கும் பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, தற்போது ராஜபக்சர்கள் அதிகாரத்தில் இல்லை என்பதனால் அவ் அமைப்புகளும் நாட்டில் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனவரி மாதம்…

Read More

பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் பிரித்த சம்பிக்க எந்த அணியில் இருக்கின்றார்? – அஸ்வர் கேள்வி

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வர் ஊடக மாநாடு பம்பலப்பிட்டி ரணில் விக்கிரமசிங்க அமைச்சா் றிசாத், ஹக்கீம் அணியில் அமைச்சரவையில் இருக்கின்ற பாட்டலி சம்பிக்க அவா்கள் முஸ்லீம்களுக்கு எதிராக எழுதிய சிங்கள 7 புத்தகங்களை இங்கு பாருங்கள் – இலங்கையில் ஒவ்வொரு பள்ளிவாசல்களிளும் அகதியா இஸ்லாம் பாடாசலை என்றபோா்வையில் முஸ்லீம் இளைஞா்களை அல் ஜிகாத் அல் கையிதாவுக்கு பயிற்சி அளிக்கப்படுகி்ன்றதாம். இது சிறுவயதிலேயே இதனை எற்படுத்துகின்றோம். என்ற சிங்கள அல் கயிதா…

Read More