Headlines

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான கலந்துரையாடல்!




தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான மேலதிக கலந்துரையாடல் நேற்று (05) பேருவளை பிரதேச சபையின் அழுத்கமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

பிரதேச சபை தவிசாளர் மேனக விமலரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தர்கா நகர் சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொண்டார்.

இந்தக் கூட்டத்தில், களுத்துறை மாவட்ட தொகை மதிப்பு அதிகரி (District Valuer – Kalutara District) பண்டார கலந்துகொண்டதுடன், அவரிடம் தர்கா நகர் தொகை மதிப்பு சம்பந்தமான விளக்க அறிக்கையும் வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *