Headlines

‘கப்பல் கட்டுமானப் பணிகளில் இலங்கையர்கள் சளைத்தவர்கள் அல்லர்’ கப்பல் கண்காட்சி தொடர்பான அங்குரார்ப்பண விழாவில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

கப்பல் கட்டுமானப் பணிகள் மற்றும் கப்பல் துறைசார் பொருட்கள் ஏற்றுமதி ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் ஒப்பிடும்போது, இலங்கை குறைந்தளவிலான விகிதாசாரத்தில் ஈடுபடுகின்ற போதும், இந்தத் துறையில் இலங்கையின் ஏற்றுமதியானது தொடர்ச்சியாக வலுவான எண்ணிக்கையிலேயே இருப்பதாகவும், அதன் விளைவாக 2022 ஆம் ஆண்டில் படகு மட்டும் கப்பல் துறைசார் பொருட்களின் ஏற்றுமதி வருமானம் 200 மில்லியன் டொலரை ஈட்டக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காலியில் இடம்பெறும்…

Read More

கல்பிட்டி பிரதேச மக்களின் பாவனைக்காக குடிநீர்க் குழாய்கள் திறந்து வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் அவர்களினால் (19) அன்று ரெட்பானா, சேனைக்குடியிருப்பு, எல்லிச்சேனை, நல்லாந்தலுவை ஆகிய பகுதிகளில் நீர்க்குழாய்கள் மக்களின் உபயோகத்திற்கு கையளிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் பெறப்பட்ட நிதியொதுக்கீட்டில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியாவின் முயற்சியினால், பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் வேண்டுகோளுக்கிணங்க பெறப்பட்ட குடிநீர் குழாய்கள் மக்கள்…

Read More

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹுசைன் பைலா நியமனம்!

அரச வர்தகக் கூட்டுத்தாபனத்தின் (STC) தலைவராக முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார். (ன)

Read More

மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட தொடங்கஸ்லந்த கிளை உருவாக்கம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம். நஸீர் (MA) தலைமையில், ரிதீகம பிரதேச சபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தொடங்கஸ்லந்த கிளை இன்று திங்கட்கிழமை (18) உருவாக்கம் பெற்றது. குருநாகல் மாவட்டம் ரிதீகம பிரதேசசபை தொடங்கஸ்லந்த கிராம உத்தியோகத்தர் பிரிவை மையப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அபிவிருத்தி நலனுக்காக இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டமை…

Read More

பிரதி அமைச்சராக புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்!

-ஊடகப்பிரிவு- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட புத்திக்க பத்திரன, தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.      

Read More

‘அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்’ என்.எம்.நஸீர்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், பானகமுவ மக்களின் நீண்டநாள் தேவையாக இருந்த பாடசாலை தக்கியா மக்தப் கட்டிட வேலைகளை மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைவரும்  குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் நேற்று  (20) நேரடியாகச் சென்று பார்வையிட்டார். இதன் போது மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாறு ரிதீகம மக்கள் காங்கிரஸ் பிரதேசசபை உறுப்பினர் அஸ்ஹர் அவர்களுக்கு பணிப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் கட்சியின்…

Read More

‘இலங்கையின் சிறப்புத் தர உற்பத்திகளுக்கு பஹ்ரைனில் பெரு வரவேற்பு’ அமைச்சர் ரிஷாத்திடம் பஹ்ரைன் வர்த்தக தூதுக்குழுவினர் தெரிவிப்பு!

இலங்கையிலிருந்து பஹ்ரைனுக்கு தருவிக்கப்படும் பல சிறப்புப் பொருட்களில் பஹ்ரைன் நாட்டவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளதாகவும், அந்தப் பொருட்களுக்கு தமது நாட்டில் மவுசு அதிகமுள்ளதாகவும் பஹ்ரைன் வர்த்தக மற்றும் முதலீட்டு உயர்மட்டத் தூதுக்குழுவினர் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர்கள், கைத்தொழில் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தனர். வளைகுடாவின் இதயம் என வர்ணிக்கப்படும் பஹ்ரைன் இராச்சியம் பலமானதும், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததுமான பிராந்திய கேந்திர நாடாகத் திகழ்கின்றது. வளைகுடா சந்தையில்…

Read More

மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிரான எறிகணைகள் சமூக நல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்குமா?

-சுஐப் எம். காசிம்-  நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் சிதைந்து போன சமூக நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதில் இன்று வரைக்கும் மீள்குடியேற்றமே தடையாகவுள்ளது. ஏட்டிக்குப் போட்டியான பல கருத்தியல் தர்க்கங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட வடமாகாண செயலணியும் இந்தத் தர்க்கக் கணைகளுக்கு இலக்காகத் தவறவில்லை. எனினும் எல்லாத் தர்க்கங்களும் இனவாத நதியிலிருந்து பிரிந்து பாயும் கிளை ஆறுகளாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளன. எந்த நல்லிணக்கத்துக்காக மீள்குடியேற்றம் அவசியப்படுகிறதோ அந்த அவசியத்தின் இருப்பை பலமிழக்கும் வகையிலேயே இந்தத் தர்க்கங்கள் முளைவிட்டுக் கிளை விடுகின்றன….

Read More

மாந்தை மேற்கு நாயாற்றுவெளி பாதையின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்….

மாந்தை மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வன்னி அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அல் ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின் கீழ் R. D. D. திணைக்களத்தினால் G. L. P. ஒப்பந்தகாரர்களிடம் வேலை கொடுக்கப்பட்டு தற்போது பள்ளிவாசல் பிட்டி ஊடாக நாயாற்று வெளி பாதையின் ஒரு பகுதி புனர்நிர்மான பணிகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகள் நடைபெறுகின்றது.

Read More

விஜயதாசவின் கருத்திற்கு VC தனது கன்னியுரையில் பதிலடி

உண்மையைக் கண்டறிந்து உரையாற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். “தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலியல் இலஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியிருந்தார். இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவ மாணவிகள் பல்வேறு மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்” என ACMC இன் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் பாராளுமன்றத்தில் தனது கன்னியுரையில் தெரிவித்தார். உண்மை நிலை கண்டறிந்து அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழகத்தின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்” என்றும் அவா் கூறினார். உபவேந்தர் என்ற அடிப்படையில் வழங்கப்படும்…

Read More

‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…

Read More

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்க‌ளுக்கு அகில இலங்கை ம‌க்க‌ள் காங்கிர‌ஸின் த‌லைவ‌ரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் ப‌தியுதீன் த‌ன‌து ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக்க‌ளைத் தெரிவித்துள்ளதுடன், இன்றைய ந‌ன்னாளில் இல‌ங்கை, ப‌ல‌ஸ்தீன், மிய‌ன்மார் போன்ற‌ நாடுக‌ளில் வாழும் அக‌திக‌ளின் ஈடேற்ற‌த்திற்காக‌ அனைவ‌ரும் இறைவ‌னை பிரார்த்திக்கும்ப‌டியும் கோரிக்கை விடுத்துள்ளார். நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்ச‌ர் ரிஷாட் மேலும் கூறியிருப்ப‌தாவ‌து, “ர‌ம‌ழான் மாத‌ம் முழுவ‌தும் அல்லாஹ்வுக்காக‌ நோன்பிருந்து, அத‌ன் முடிவில் வருகின்ற பெருநாள், நோன்பாளிக்கு கிடைக்கும்…

Read More