Headlines

வெள்ளைப்புறா விளையாட்டுக் கழகத்திற்கு ஒலிபெருக்கி வழங்கி வைப்பு!

விருதோடை (எல்லுச்சேனை) வெள்ளைப்புறா விளையாட்டுக்கழகம் விருதோடை வட்டார இளைஞர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் மென்பந்து சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது . அதே நோக்கில் இவ்வருடமும் நடாத்திய மென்பந்து சுற்றுப்போட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் விருதோடை வட்டார அமைப்பாளரும், கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினருமான ஆஷிக் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு  மென்பந்து சுற்றுப்போட்டியை ஆரம்பித்து வைத்தார். அத்தோடு வெள்ளைப்புறா விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் வேண்டுககொளுக்கிணங்க ஆஷிக்கின் சொந்த நிதியில் இருந்து சுமார் 100000/= ரூபாய் பெறுமதியான…

Read More

சங்கநாயக்க தேரரைச் சந்தித்து சுகம் விசாரித்த ரிஷாட் பதியுதீன்! -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

வவுனியா ஸ்ரீபோதி தக்க்ஷினாராமய விகாரையின் விகாராதிபதியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான சங்கநாயக்க தேரருமான, சியம்பலகஸ்வேவ விமலசார தேரர் சுகயீனமுற்றுள்ளார். அவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான கௌரவ ரிஷாட் பதியுதீன் நேரில் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காட்டை அழிக்கிறார். அங்கு முஸ்லிம்களைக் குடியேற்ற முயற்சிக்கிறார், வன்னியில் அரபு தேசம் ஒன்றை உருவாக்கவும் அவர் முயற்சிக்கிறார் என்று, உண்மைக்குப் புறம்பான இட்டுக்கட்டுகளைச் சுமத்தி, கொழும்பு…

Read More

முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கைத்தொழில் வர்த்தக அமைச்சு 9.8 மில்லியன் ரூபா நிதி! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!

யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ரூபா 9.8 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை (25) இடம்பெற்ற போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டார். இந்த நிதியானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினூடாக வாழ்வாதார முயற்சிகளுக்காக பகிர்ந்தளிக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேபோன்று வவுனியா, மன்னார் மாவட்ட மக்களின் வாழ்வியல் தேவைகளை நிவர்த்திப்பதற்காக, அவர்களை…

Read More

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

வன்னி மாவட்டத்தின் நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தடைகளைத் தீர்க்கும் வகையில், ஒருமாத காலத்துக்குள் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு அரசாங்க அதிபர்கள் பங்கேற்கும் உயர்மட்டக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து, உரிய தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று காலை (25) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில், அதன் இணைத்தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் வவுனியாவில் வீட்டுத்திட்டம்!

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் வவுனியா அண்ணாநகர் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கென நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நிர்மானிக்கும் பணிகள் இன்று (25  ஆரம்பித்து வைக்கப்பட்டன. குறித்த அண்ணாநகர் மாதிரிக் கிராமங்களான படிவம் 1,2,3 ஆகிய பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தை வழங்க, வீடமைப்பு மற்றும் நிர்மானத்துறை அமைச்சின் கிழ் இயங்கும், தேசிய வீடமைப்பு அதிகாரசபை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய வீடமைப்பு…

Read More

‘கிழ‌க்கு மக்க‌ளை ம‌டைய‌ர்க‌ளாக‌ க‌ருதி ஓரங்க‌ட்டி வ‌ந்த‌ ர‌வூப் ஹ‌க்கீமை கிழ‌க்கின் ப‌க்க‌ம் திரும்பி ஓட‌ வைத்த‌வ‌ர் அமைச்ச‌ர் ரிஷாத்தும் அவ‌ர் க‌ட்சியுமாகும்’ முபாரக் அப்துல் மஜீத்!

அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் ச‌மூக‌த்துக்காக‌ என்ன‌ செய்தார் அவ‌ர‌து க‌ட்சியான‌ அ.இ.ம‌. கா என்ன‌ செய்துள்ள‌து என‌ ச‌மூக‌த்தின் வாக்குக‌ளை பெற்று அச்ச‌மூக‌த்துக்கு சேவை செய்யாத‌ முஸ்லிம் காங்கிர‌சின் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் கேட்ப‌து அவ‌ர்க‌ளின் அறியாமையை காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் முன்னாள் கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் என்ப‌வ‌ர் த‌ன‌து அமைச்சை ப‌ய‌ன்ப‌டுத்தி த‌ம‌க்கு வாக்க‌ளித்த‌ வ‌ட‌ மாகாண‌ ம‌க்க‌ளுக்கு…

Read More

“புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் இன்கோ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.   இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங் (MAGA Engneering) நிறுவனத்தின் தலைவர் கெப்டன் எம் டி குலரட்ண கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். இன்கோ 2018 தலைவர்…

Read More

பிரதேச சபை உறுப்பினர் ஹம்சாவின் முயற்சியினால், ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம்!

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு இவ்வருடம் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம், ஒலுவில் பிரதேசத்தில் கலாச்சார மண்டபம் ஒன்றினை அமைக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எ.எல். ஹம்சா சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் போதே, உறுப்பினர் மேற்கொண்ட பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு குறித்த அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 50இலட்சம் நிதியினை மக்களுக்கு…

Read More

நெற்செய்கை வயல்களுக்கு தடையின்றி நீர்ப்பாசனம் வழங்க அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி ஏற்பாடு!

கிண்ணியா ஆயிலியடி, பக்கிறான் வெட்டை பகுதிகளில் நெற்செய்கை வயல்களுக்கு தடைப்பட்டிருந்த நீர்ப்பாசனத்தை தடையின்றி வழங்க அப்துல்லா மஹ்ரூப் எம்பி ஏற்பாடு. கடந்த சில தினங்களாக மேற்படி பிரதேச நெற்செய்கை மற்றும் நீர்ப்பாசன பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு விவசாய சம்மேளனம் கொண்டு வந்ததையடுத்து, அரசாங்க அதிபர், கிண்ணியா பிரதேச செயலாளர், கந்தளாய், வான் எல நீர்ப்பாசன பொறியியலாளர்களுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களுக்கமைய பாதிக்கப்பட்ட வயல்களுக்கு தடையின்றி நீரை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ன)

Read More

வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை மைதான வேலைத்திட்டத்திற்கு நிதி ஒதிக்கீடு!

மன்னார் மாவட்டத்தின் முசலிப்பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள வெள்ளிமலை மன்/பதியுதீன் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் முதற்கட்ட வேலைத்திட்டமாக மைதானத்தை செப்பனிடும் பணி இன்று (22) ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பணிப்புரைக்கு அமைவாக, மாகாண சபை உறுப்பினரும், வெள்ளிமலை பதியுதீன் பாடசாலையின் ஸ்தாபகருமான அலிக்கான் ஷரீப் அவர்களின் மாகாண சபை நிதியினூடாகவே இந்த மைதானத்திற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (ஐ)      

Read More

கழுதைகளுக்கான சிகிச்சை மற்றும் அறிவூட்டும் மையம் திறந்துவைப்பு!

மன்னார் மாவட்டத்தில் பராமரிப்பு இன்றி கட்டாக்காலிகளாக திரியும் கழுதைகளை முறையாக பராமரித்து, அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று மன்னார் தாய்லாந்து குடியிருப்பு சின்னக்கரிசலில் நேற்று (21)ஆரம்பித்து வைக்கப்பட்டது . இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் கலந்து சிறப்பித்தார். மேலும், பிரதம அதிதியாக பங்குகொண்ட தவிசாளர் உரையாற்றும் போது, மன்னார் நகர மற்றும் பிரதேச மக்களை சிரமப்படுத்திய இந்த கழுதைகளை முறையாக பராமரித்து மக்களின்…

Read More

‘உள்ளூர் கைத்தொழில் துறையை நலிவடைய ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ தினேஷ் எம்.பியின் கேள்விக்கு பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் பதில்!

உள்ளூர் கைத்தொழில் உற்பத்தி துறையினை எந்த வகையிலும் அரசாங்கம் நலிவடையச் செய்யவில்லை என்றும் கைத்தொழில் தொடர்பாக பிழையான கொள்கையினை அரசு நடைமுறைப்படுத்துகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இத்துறையினை தரம்மிக்க, உறுதியான பொருளாதார துறையாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம் என்று கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற நிலையியல் கட்டளை 27 (2) இலக்கத்திற்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன எழுப்பியிருந்த கேள்வி ஒன்றுக்கு, இன்று காலை (22) பதிலளிக்கும் போதே…

Read More