Headlines

நிந்தவூர் பிரதான பூங்கா புனரமைப்பு!

பொதுமக்கள் தமது ஓய்வு நேரங்களில் சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் பூங்காக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, நிந்தவூரில் அமையப்பெற்றுள்ள பூங்காக்கள் புணரமைக்கப்படுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு நிந்தவூரின் பிரதான பூங்காவையும், அதனை சூழவுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் வேலைத் திட்டம், தவிசாளர் தாஹிரின் தலைமையில் இன்று (14) இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பசுமை நகராக மாற்றும் திட்டங்களில்…

Read More

கிழக்கு மாகாணத்திற்கு இம்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகள் வழங்க முடிவு!

கிழக்கு மாகாண இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு ஜூன்மாத இறுதிக்குள் இறால் குஞ்சுகளை வழங்குவதாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களுடனான சந்திப்பு நேற்று புதன்கிழமை மாலை (13) கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சில் இடம்பெற்ற போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் நெக்டா அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார், நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.தயாபரன், பிரதியமைச்சரின்…

Read More

இஸ்மாயில் எம்.பியினால் வறிய குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களினால், புனித நோன்புப் பொருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் மற்றும் உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இன்று (14) இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவை தாய்மார்கள், வயோதிபப் பெண்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை இஸ்மாயில் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

Read More

கிராமிய அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்!

குளியாப்பிடிய பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையிலான கிராமிய அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல், சதொச நிறுவனத்தின் பிரதித்தலைவரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட பிரதான அமைப்பாளருமான என்.எம்.நஸீர் தலைமையில் (10)நடைபெற்றது. இந்நிகழ்வில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் செயலாளரும், முன்னாள் பிரதேசசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித் தவிசாளர் இர்பான், பிரதேச சபை உறுப்பினர் சபீர், குளியாப்பிடிய பிரதேச சபை அமைப்பாளர் ஷேக் சுலைமான்…

Read More

பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயிலுக்கு சம்மாந்துறை மக்கள் பெரும் வரவேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராக தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மட் இஸ்மாயில் பதவி பிரமாணம் செய்த பிற்பாடு, முதல் தடவையாக சம்மாந்துறை மண்ணுக்கு விஜயம் செய்து, மக்களால் வரவேற்பளிக்கப்பட்ட நிகழ்வு இன்று (13) அஸர் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. சம்மாந்துறை ஹிஜ்றா பள்ளிவாசல் முன்றலில் பெருந்திரளாக கலந்து கொண்ட சம்மாந்துறை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் உற்சாக வரவேற்பளித்தனர். துஆ பிரார்த்தனையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை…

Read More

“12ஆவது பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணைக்குழு அமர்வு ஆகஸ்ட் மாதம் தெஹரானில்” ஈரான் தூதுவர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- ஈரானுக்கான இலங்கை பிரதிநிதிகளின் விஜயம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பது எமது எதிர்ப்பார்ப்பு என இலங்கைக்கான ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசின் தூதுவர் மொஹமட் சைரி அமிரானி, தனது முதலாவது ஆலோசகரும், தூதுக்குழுவின் துணைத் தலைவருமான அஹ்மடி  உள்ளிட்ட ஈரானிய பிரதிநிதிகளுடன், கைத்தொழில் மற்றும் வர்த்தக…

Read More

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிகழ்வு, நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலய உதவி தூதுவர் என்.எம்.அணஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி…

Read More

வெள்ளத்தால் பாதிப்புற்றவர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் உதவி!

புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விருதோடை, செங்கட்டு, நல்லாந்தழுவை, ரெட்பானா, எல்லுச்சேனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துகொடுத்தார். (ப)      

Read More

சேதமடைந்திருக்கும் கெனல் வீதி பாலம் விரைவில் புனரமைப்பு!

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், ரகுபத்த கிராமத்துக்கு செல்லும் கெனல் வீதியில் அமைந்திருக்கும் பாலம் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா மற்றும் நஜீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளர் காமினி தென்னகோன் சேதமடைந்திருக்கும் பாலத்தை அண்மையில் பார்வையிட்டார். அத்துடன் சேதத்துக்குள்ளாகியிருக்கும் பாலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை வெகு விரைவில் மேற்கொள்வதாகவும்…

Read More

யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் தலைமையில் இப்தார் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நியாஸ் நிலாம் தலைமையிலான, இப்தார் நிகழ்வு இன்று (10) புதிய சோனகத்தெரு மஸ்ஜிதுல் அபூபக்கர் பள்ளியில் இடம்பெற்றது. மவுண்டன் ஓப் மேசி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்வில், யாழ் மாநகர சபை மேயர் திரு. இமானுவேல் ஆர்னோல்ட், ஏனைய கட்சிகளின் மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகிகள், ஊர்மக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்துசிறப்பித்தனர். (ன)    

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மட்டக்குளிக்கு விஜயம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸ், கொழும்பு 15, மட்டக்குளி சமித்புர ஸ்ரீ விக்கிரமபுர பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளை ஆராயும் நோக்கில், நேற்று (10) அங்கு விஜயம் செய்ததுடன், அப்பிரதேச மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தப் பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதார தேவைகள் குறித்தும்  கேட்டறிந்துகொண்ட மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்….

Read More

நிந்தவூர் மாட்டு வண்டில் உரிமையாளர் சங்கத்தினருடனான கலந்துரையாடல்!

நிந்தவூரில் செயற்படும் மாட்டு வண்டில் உரிமையாளர்கள் சங்கத்தினருக்கும், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை (08) தவிசாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, மாட்டு வண்டில் உரிமையாளர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்வாதார முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. -முர்ஷித்-    

Read More