Headlines

எட்கா (ETCA) பேச்சு எவ்வித அழுத்தங்களுமின்றி தொடர வேண்டும் – இந்தியா

-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே சேவைகள் மற்றும் முதலீடுகளை பரிவர்த்தனை செய்யும் வகையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான எட்கா (ETCA) பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அழுத்தங்களுமின்றி காலவரையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று, இறுதிக்கட்டத்துக்கு வரவேண்டும் என்பதையே இந்தியா விரும்புவதாக, அந்நாட்டின் கைத்தொழில் மற்றும் வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்திய உயர்மட்டக்குழுவுடன் இங்கு வந்துள்ள இந்திய இணையமைச்சர், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இலங்கை…

Read More

நியமனம்பெற்ற புதிய அதிபர்களுக்கு உரிய பாடசாலை வழங்க அமைச்சரவை அனுமதி

அதிபர் சேவை தரம் மூன்றுக்கு புதிதாக நியமனம் பெற்ற அதிபர்களுக்கு உரிய பாடசாலைகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே அவர்கள் விரைவில் தமக்கான பாடசாலைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். இதேவேளை குறித்த பாடசாலைகளில் தற்போது அதிபர்களாக பதில் கடமையாற்றுபவர்கள் மாகாண மற்றும் தேசியப் பாடசாலைகளில் பிரதி அதிபர்களாக கடமையாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். கல்வியமைச்சில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையிலுள்ள 10ஆயிரத்து நூற்று…

Read More

ஹிலாரி அசத்தல் – டிரம்ப் சொதப்பல்

அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடந்த, முதல் நேரடி விவாதத்தில், ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன், (வயது 68) தன் நேர்த்தியான வாதத் திறமையால் அசத்தினார். அவருடைய வாதத்தை சமாளிக்க முடியாமல், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், (வயது 70), சொதப்பினார். அமெரிக்க அதிபர் தேர்தல், நவம்பர், 8ல், நடக்கிறது. இந்தத் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, முன்னாள் வெளியுறவு அமைச்சரும், முன்னாள் அதிபர் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில், தொழிலதிபர் டொனால்டு…

Read More

தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை

கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த நபர் 46 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் இம்புல்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்

Read More

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கு மேற்கத்தேய நாடுகள் இணக்கம்

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு,…

Read More

இஸ்ரேல் – டிரம்ப் கூட்டு சதி!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜெரூசலத்தை இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக அங்கீகரிப்பதாக குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவை கடந்த ஞாயிறன்று டிரம்ப் டவரில் இருக்கும் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்தித்த டிரம்ப் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். நெதன்யாகு ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். “3000 ஆண்டுகளுக்கு மேலாக ஜெரூசலம் யூத மக்களின் தலைநகர் என்பதை டிரம்ப் அறிந்தே உள்ளார்….

Read More

படுகுழியில் விழப்போகும் மஹிந்த

-M.I.முபாறக் – அரசியல் தீர்வு மற்றும் யுத்தக் குற்ற விசாரணை போன்ற தேசிய பிரச்சினைகளை விடவும் ஜனாதிபதி மைத்திரிக்கு தலையிடியாக இருப்பது மஹிந்த தரப்பின் கூத்துத்தான். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுதல் அல்லது அக்கட்சியைப் பலவீனப்படுத்தி புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்ற நோக்கில் அவர்கள் செயற்படுவதே இதற்கு காரணம். சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவப் பதவியைக் கைப்பற்றுவது முடியாத காரியம் என்றாலும் புதிய கட்சி ஒன்றை உருவாக்குதல் என்பது சாத்தியமே.அவ்வாறு புதிய கட்சி ஒன்று உருவாகும்போது…

Read More

புதிய மாணவர் அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

-பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் 2017 ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக  மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.  மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சரீஆ (மௌலவி…

Read More

80 வயது முதிர்ச்சியான தோற்றத்துடன் பிறந்த குழந்தை

பங்களாதேஷில் முதிர்ச்சியான தோற்றதுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளமையானது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷ் மாகுரா மாவட்டத்தில் நேற்று ஆண் குழந்தை ஒன்று பிறந்ததுள்ளது. முதிர்வு தோற்றதுடன் பிறந்த அந்த குழந்தை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தையின் முகம், கண்கள் மற்றும் சுருங்கிய தோல் என உடலின் அனைத்து பாகங்களும் முதிர்ச்சியான தோற்றத்துடன் காணப்படுகிறது. ‘முதிராமுதுமை’ என்ற குறைபாட்டுடன் பிறந்த அந்த குழந்தை இயல்பான வளர்ச்சியை விட எட்டு மடங்கு வேகமாக வளர்ச்சியடைந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

Read More

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பம்

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் இன்று 27 ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இன்று முதல் அக்­டோபர் மாதம் 3 ஆம் திகதி வரை நுளம்பு ஒழிப்பு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன. நாட்­டி­லுள்ள 300 க்கும் மேற்­பட்ட சுகா­தார வைத்­திய அதி­காரி பிரி­வு­களில் 26 பிரி­வுகள் டெங்கு நோயின் தாக்கம் அதி­க­மாக உள்ள பிரி­வு­க­ளாக இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இதில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டமும் உள்­ள­டங்கும். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஜன­வரி மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரை 286 பேருக்கு டெங்கு நோய் ஏற்­பட்­டி­ருப்­பது…

Read More

இலங்கையருக்காக அபராத பணம் வழங்கிய சவூதி

தமது நாட்டில் கொலைக்குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை ஒருவருக்கு அதிலிருந்து தப்பித்துக் கொள்ள வழங்கப்படும் அபராத பணத்தின் ஒரு பகுதியை சவுதி அரசாங்கம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை பிரஜைக்கும் தன்னுடைய சக தொழிலாளிக்கும் ஏற்பட்ட முறுகலிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக சவுதியில் உள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரியான Faizer Mackeen தெரிவித்துள்ளார். குறித்த இலங்கை பிரஜை சீதுவ பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த…

Read More

சர்வதேச தகவல் அறியும் உரிமை தொடர்பான மாநாடு நாளை கொழும்பில்

சர்­வ­தேச தகவல் அறியும் தினத்தை முன்­னிட்டு பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் ஊட­கத்­துறை அமைச்­சுடன் இணைந்து அர­சாங்க தகவல் திணைக்­களம் ஏற்­பாடு செய்­துள்ள சர்­வ­தேச தகவல் அறியும் மாநாடு நாளை புதன்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் ஆரம்­ப­மா­கின்­றது. இந்த மாநாட்டில் இந்­தி­யாவின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதி­பதி அஜித் பிரகாஷ் ஷா சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்துகொள்ள உள்ளார் . மேலும் மாநாட்டில் .120 க்கும் மேற்­பட்ட நாடு­க­ளி­லி­ருந்து பிர­தி­நி­திகள் கலந்­து­ கொள்­ள­வுள்­ளனர் என்று…

Read More