Headlines

லசந்தவின் சடலத்தை படம்பிடித்த ஆளில்லா கேமரா

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்ற ஆளில்லா கேமராவால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் தோண்டப்பட்டு வருகின்றது. குறித்த பகுதிக்குள் செல்ல ஊடகவியலாளர்கள் உட்பட ஒருவரும் இடமளிக்கப்படவில்லை. எனினும் குறித்த பகுதியில் நுளைந்த ஆளில்லா கேமாரா ஒன்று லசந்தவின் சடலம் தோண்டப்படுவதை படம்பிடித்து சென்றுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை…

Read More

மஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர் விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதிகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கடந்த வாரம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய நிலையில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

தமிழ்மக்களையும், அமைச்சர் றிஷாத்தையும்  அந்நியப்படுத்துவதற்காக சதி முயற்சிகள் அரங்கேற்றம்!

-சுஐப் எம்.காசிம் – தமிழ்மக்களையும், தன்னையும் அந்நியப்படுத்துவதற்காக பல முனைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், தமிழ் மக்கள் இந்த சூழ்ச்சிகளுக்கு இரையாக வேண்டாமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, நீராவிப்பிட்டி, ஹிஜ்றாபுரத்தில் இடம்பெற்ற வலைப்பந்தாட்ட மைதானத் திறப்புவிழா மற்றும் ஹஜ் விளையாட்டு போட்டியில் பிரதமஅதிதியாகப் பங்கேற்று உரையாற்றியபோதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். மாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜனூபரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விழாவில் அமைச்சர் மேலும் கூறியதாவது. இறுதி யுத்தத்தின் உக்கிரம் தாங்க முடியாமல் முல்லைத்தீவு மக்கள்…

Read More

லசந்தவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று (27) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை மீள மேற்கொள்வதற்கு…

Read More

ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதல்

கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில், கடந்த வியாழக்கிழமை (22)அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக பறிமுதல் செய்யுமாறு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

ஹிலாரி - டிரம்ப் இன்று நேரடி விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன் (ஜனநாயக கட்சி), டொனால்டு டிரம்ப் (குடியரசு கட்சி) ஆகியோர் இடையேயான முதல் நேரடி விவாதம் நியூயார்க்கில் உள்ள ஹோப்ஸ்ட்ரா பல்கலைக் கழகத்தில் இன்று நடந்தது. அப்போது அவர்கள் இருவரும் வேலை வாய்ப்பு, ஈராக் போர் மற்றும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர். இந்த விவாதம் கார சாரமாக நடந்தது. இந்த விவாதத்தை 10 கோடி மக்கள்…

Read More

இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவும்

இலங்கையின் ஜனநாயக   மற்றும் பொருளாதார  மறுசீரமைப்புக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை செய்யும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப் தெரிவித்தார். அமெரிக்க யுஎஸ்எய்ட்  நிறுவனத்தின் ஏற்பாட்டில்  கொழும்பில் கிங்கஸ்பரி ஹோட்டலில்  நேற்று (26) ஆரம்பமான அரச தனியார் ஒத்துழைப்பு தொடர்பாக ஆராயும்  தேசிய மாநாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அத்துல் கேசாப்  இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரச தனியார் ஒத்துழைப்பு மாதிரியை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மக்களிற்கும்…

Read More

காலியில் நில அதிர்வு!

காலியில் இன்று (27) சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபுகல பகுதியில் இன்று அதிகாலை இந்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த நில அதிர்வு தொடர்பான தகவலை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார். எப்படியிருப்பினும் நில நடுக்கம் அல்லது நில அதிர்வு தொடர்பில் இதுவரை எவ்வித பதிவுகளும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு…

Read More

நீதிமன்றில் ஆஜராக ஆயத்தமாகும் மைத்திரி

இலங்கை ஜனாதிபதிகள் சட்டத்திற்கு மேல் உள்ளவர்களாக கருதி இதுவரை செயற்பட்ட யுகத்தை நிறைவு செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயத்தமாகியுள்ளார். அதற்கமைய அவர் சாதாரண குடிமகனாக நீதிமன்றில் ஆஜராகுவதற்கு ஆயத்தமாகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் போது, அப்போதைய ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸஸ அத்தநாயக்க மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட ஆவணங்களை ஊடகங்களின் முன் சமர்ப்பித்து, மக்களை பிழையாக நடத்தியிருந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் திஸ்ஸவுக்கு எதிராக நீதிமன்றில் தொடுக்கப்பட்ட வழக்கின்…

Read More

விமானநிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள குற்றப்புலனாய்வு பிரிவினர்

விமானநிலைய வளாகத்தில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்துகடமைகளில் ஈடுபட குற்றப்புலனாய்வு விசாரணை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றங்கள் புரிந்தவர்கள் இரகசியமாகவெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அத்துடன் விமானநிலையத்தின் பாதுகாப்பும் இதன்மூலம் பலப்படுத்தப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல குற்றங்கள் புரிந்து தப்பிச்சென்று வெளிநாட்டில் வசிக்கும்சந்தேகநபர்கள் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்வது இதன் மூலம்இலகுவாகியுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

கட்சிகளை உடைப்பது ராஜபக்சக்களுக்கு பொழுதுபோக்கு – சந்திரிக்கா

கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று (26) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவடையச் செய்வது சிலரின் பொழுது போக்காக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பாரியளவில் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Read More