Headlines

ஜனாதிபதிக்கு அஸ்கிரி பீடாதிபதி பாராட்டு!

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சி பாராட்டுக்குரியது என அஸ்கிரி பீடாதிபதி வராகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார். பொல்கொல்ல ஸ்ரீ சலவான போதிமலு விஹாரையில் நேற்று (17) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… நல்ல சிங்கள பௌத்தர் ஆகிய தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமாதான எண்ணங்களுடன் நாட்டின் அனைத்து இன சமூகங்கள் மற்றும் மதங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியதாகும்….

Read More

தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம்

தனியார் நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கடிதத்தில் மேலும்.. அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியாத உயர் தரத்தில் சித்தியடைந்தவர்கள் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்கின்றனர். இவ்வாறு தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும்…

Read More

கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – நாலாண்டுகளின் பின்னர் கல்குடா மீது சிலருக்கு கரிசனை ஏற்பட்டுள்ளது. கல்குடா மக்களின் வாக்குகளினால் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் கடந்த நான்கு ஆண்டு காலமாக மெளனமாக இருந்து விட்டு, இப்போது இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி கதை அளக்கிறார், இவ்வாறான நயவஞ்சக போக்குடைய,அரசியல் சுயலாபத்திற்காக எதனையும் பேசுகின்றவர்களுக்கு எதிர்கால அரசியல் நிலவரம் மிகச்சரியான பாடத்தினை கற்பிக்கும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை நிவ் ஸ்டார்…

Read More

விமானப் பணிப்பெண் நித்தியா கைது!

– எம்.எப்.எம்.பஸீர் – பணச் சலவை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்க்ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன், என்.ஆர். கன்சல்டன் நிறுவன பணிப்பாளரும் விமானப் பணிப் பெண்ணுமான நித்திய சேனாதி சமரநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டார்.  

Read More

குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா

குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்…

Read More

உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­சபை இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு செய்யும் சேவை­களைப் பாராட்­டிய உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அப்­துல்லா பின் முஹ்சின் அல்­துர்க்கி உலமா சபையின் சேவை­க­ளுக்கு முடி­யு­மான உத­வி­களை வழங்­கு­வ­தாகத் தெரி­வித்தார். இலங்­கையில் நடை­பெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்கு வருகை தந்­தி­ருந்த உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் அல்­துர்க்கி கொழும்­பி­லுள்ள அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­துக்கு விஜயம் செய்தார். அவரை…

Read More

இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டிசில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இந்த பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ,குறித்த பதவி நீடிப்பு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியில் இருந்துஅமுலாகும் விதமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Read More

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டில்சான் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதுவரையில் தமது ஓய்வு குறித்து டில்சான் உத்தியோகப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.

Read More

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ; பாடசாலைகள் மூடப்படும் விபரம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரைமேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள்பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம்,நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகாவித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை,…

Read More

படை வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு

யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டது.

Read More

இலங்கையர்கள் குறித்து ஆய்வின் முடிவுகள்

இலங்கையர்களில் 80 சதவீதமானோர்  ‘நேரமில்லை” என்ற  போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று -16- நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  விசேட கலந்துரையாடலின் போது குறித்த அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகர உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர்…

Read More

எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது

-சுஐப் எம்.காசிம் – பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (16/08/2016) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், யாழ் முஸ்லிம் வாட்டாரத்துக்குச் சென்று, அங்கு மஸ்ஜிதுல் மரியம் ஜும்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், எதிர்வரும் காலங்களில் இந்தக் கஷ்டங்களை படிப்படியாகத் தீர்க்கக்கூடிய நல்ல…

Read More