Headlines

6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை

-ரெ.கிறிஷ்­ணகாந் – மாவ­னல்ல கங்­துன பிர­தேச பாட­சாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாண­வர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதி­தாக வந்த மாண­வியை பல்­க­லைக்­கழக பாணியில் பகி­டி­வதை மேற்­கொண்­ட­மைக்­காக எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளனர். ஆறாம் தரத்­துக்கு புதி­தாக வந்த மாணவி ஒருவர் அணிந்­தி­ருந்த சீரு­டையை, அங்­கி­ருந்த மாண­வர்கள் சிலர் இரண்­டாக கத்­த­ரித்து விட்டு, பின்னர் மாண­வர்கள் மத்­தி யில் நடந்துவரு­மாறு பணித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாட­சா­லையின் அதி­ப­ருக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார். அதன்­பின்னர் பகி­டி­வதை புரிந்த மாண­வர்­க­ளிடம் அதிபர்…

Read More

11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார். குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.

Read More

தீப்பெட்டி விலை அதிகரிப்பு!

தீப்பெட்டி ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும். தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச சொத்ததுக்களை தனது  தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஷ கடந்த ஜுலை 18 ஆம் திகதி…

Read More

பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பஸ் கட்டணத்தை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுவரை காலமும் வழக்கத்தில் இருந்த ஆரம்பக் கட்டணமான எட்டு…

Read More

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்த தான முகாம்

தகவல்: உக்குவெல அஸ்லம் – கடார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளை (31.07.2016) நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் 96 நபர்கள் கலந்து கொண்டு 69 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ். உக்குவெல கிளை சகோதரர்கள் மிகவும் சிரமம் பாராது தியாகத்திற்கும் மத்தியில் பல்வேறு நிதி சிரமங்கள் மத்தியில் இதனை ஆர்வமாக நடத்தி முடித்தார்கள் இதில் குறிப்பிட வேண்டியஅதிகாமான சிங்களவர்கள் பாதுகாப்பு சிப்பாய்கள்,மற்றும் பிற சமூகங்களும் பங்கேற்றன….

Read More

உயிர் பிரியும்வரை போரா­டுவோம்

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்கை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை­வார்க்­கப்­பட்­டுள்­ளது. உண்­மை­யான சுதந்­திரக் கட்சியின் கொள்­கை­யுடன் பண்­டா­ர­நா­யக்­கவின் சமா­திக்கு முன்னால் செல்­வதை கௌர­வ­மாக நினைக்­கின்றேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக்ஷ் தெரி­வித்தார். ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சின் பாத­யாத்­திரை நேற்று ஹொர­கொல்­ல பகுதியே தாண்­டும்­போது ஊட­க­வி­ய­லா­ளர்­களால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே நாமல் ராஜபக்ஷ இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், உண்­மை­யான சுதந்­திர கட்­சியின் கொள்­கை­யுடன் கூடிய ஆட்­சியை ஏற்­ப­டுத்­தவே நாங்கள் பாத­யாத்­திரை மேற்­கொண்டு செல்­கின்றோம். இன்று சுதந்­தி­ரக்­கட்­சியின்…

Read More

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!

முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வற் வரி அதிகரிப்பால் முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை…

Read More

க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்

இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.

Read More

கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!

கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது. இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு…

Read More