Headlines

உயர்தரப் பரீட்சை : 4 அதிகாரிகள் பணிநீக்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணிபுரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு

நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுடன் சுதர்சன கனோகொட என்ற மற்றுமொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவின் நிறுவனத்தில் இந்த நபர் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சென்றுள்ளார்….

Read More

மின்னியல் உபகரணங்களுக்கு ஒரே நாளில் அனுமதி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மின்னியல் உபகரணங்களுக்கான அனுமதியை ஒரே நாளில் பெற்றுக்கொடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மின்னியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு குறித்த ஆணைக்குழுவின் அனுமதி பெறுவது அவசியம். அத்துடன் அனுமதிக்காக ஒரு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் நுகர்வோர் அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுனில்.எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே குறித்த சிரமங்களை தவிர்ப்பதற்காக புதிய வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

வகுப்பு தடையை நீக்கக் கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– ஏ.எம். றிகாஸ் – கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 27 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள வகுப்­புத்­த­டையை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். மட்­டக்­க­ளப்பு -வந்­தா­று­மூலை வளா­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்டம் இடம்பெற்றது.

Read More

இஸ்தான்புல் கோர்ட்டுகளில் போலீசார் அதிரடி சோதனை

துருக்கி நாட்டில் அதிபர் எர்டோகன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக கடந்த ஜூன் மாதம் ராணுவத்தினரின் ஒரு பிரிவினர் ராணுவ புரட்சியில் ஈடுபட முயன்றனர். எனினும் அதிபருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு அதை முறியடித்தனர். இந்த புரட்சி முயற்சிக்கு பின்னணியாக செயல்பட்டவர் அமெரிக்காவில் வசிக்கும் துருக்கிய மத போதகரான பெதுல்லா குலென் என்று துருக்கி அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் ராணுவத்தினர், போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள், வக்கீல்கள் ஆகியோரை அதிபர் எர்டோகன் அரசு தீவிரமாக…

Read More

காஷ்மீர் பிரச்சினை: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாகிஸ்தான் வெளியுறவு ஆலோசகர் கடந்த வாரம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக பாகிஸ்தான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாகிஸ்தான் தூதர்கள் மாநாடு ஒப்புக்கொண்டதாக கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்…

Read More

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிக்கிறது: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கூறியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேண்டுகோள் விடுத்து வந்தார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியத்தின் முடிவை செயல்படுத்தாதது குறித்து மத்திய அரசு வக்கீலிடமும்…

Read More

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்!

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் அலுவலகம் மட்டும் போதுமானதல்ல.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றும் அவசியமாகின்றது. ராஜபக்ச கோட்பாடு போர் செய்வதாக கூறி திறைசேரியை காலியாக்கியதேயாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதனைப் போன்றே திருடர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டுமென நாம் அந்தக் காலத்தில் கூறியிருந்தோம். போர் இடம்பெற்ற காலத்தில்…

Read More

இலங்கையிலுள்ள விஞ்ஞானிகளை சந்திக்கும் யுனெஸ்கோ பணிப்பாளர்

இலங்கை உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள யுனேஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி எரினா பொக்கோ பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டு வருகிறார். திருமதி எரினா பொக்கோவுக்கும் இலங்கையின் ஆராய்ச்சியாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று (16) நடைபெறவுள்ளது. அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தலைமையில் தேசிய விஞ்ஞான மன்றத்தின் ஏற்பாட்டில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் விஞ்ஞான ரீதியான செயற்றிட்டங்கள் குறித்து திருமதி எரினா பொக்கோவா…

Read More

இம்முறை ஹஜ் யாத்திரை செல்ல 2240 இலங்கையர்களுக்கு வாய்ப்பு

இம்முறை ஹஜ் யாத்திரைக்காக இலங்கையில் இருந்து முதற்கட்டமாக புறப்பட்டு சென்ற குழுவினர் சவுதி அரேபியாவின் ஜோடா நகரை அடைந்துள்ளனர். 62 யாத்திரிகர்கள் இவ்வாறு சவுதி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களை சவுதிக்கான இலங்கைத் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றுள்ளனர். இதேவேளை, ஹஜ் புனித யாத்திரைக்காக இலங்கையில் இருந்து இம்முறை 2240 பேர் செல்லவுள்ளனர். மக்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டம் காரணமாக, இந்த வருடம் யாத்திரிகர்களின் தொகை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

யோஷிதவின் மற்றொரு சொத்தும் அரசுடமை!

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர கிராமத்தில் இருக்கும் 4.8 மில்லியன் ரூபா…

Read More

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240 கோடி ரூபா வருமானம்

மீன்பிடி அமைச்சு அலங்கார மீன் ஏற்றுமதி வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கு அமைய மீன் குஞ்சு உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். றுகுணு பல்கலைக்கழகத்தின் மீன் உயிரியல் பிரிவின் ஆதரவும் பெற்றுக் கொள்ளப்படும். மாத்தறை பொல்ஹேன, மடிக, ஹிக்கடுவ, உணவட்டுண ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த நடவடிக்கைகள் வெற்றியளித்துள்ளன. அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மத்தியில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த வருடம் அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் 240…

Read More