Headlines

திருகோணமலையில் யுத்த ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை கிண்ணியா உப்புவெளி பிரதேச காட்டுப் பகுதியில் யுத்த ஆயுதங்கள் சிலதை இன்று (18) காலை திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். மோட்டார் குண்டுகள், கைக்குண்டுகள் மற்றும் மிதி வெடிகள் என்பனவே மீட்கப்பட்டுள்ளது. குறித்த காட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதோடு குறித்த ஆயுதங்களை திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்

முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றியதாகவும், அதனால் அவர்களுக்கு புற்றுநோய் சார்ந்த நோய்கள் ஏற்பட்டு அவர்கள் உயிரிழப்பதாகவும் வடக்கில் உள்ள சில அரசியல்வாதிகள் போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தெல்கொட ஸ்ரீ சம்போதி விகாரையில் வைத்து ஊடகவியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மெற்கொண்டு அதற்கான நடவடிக்கைளை எடுத்து வருகின்றது. இந்நிலையில்  சில அரசியல்வாதிகள் மக்களிடத்தில் போலியான…

Read More

சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பங்கேற்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். மிரிஹானையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று, கட்சியின் மூத்த உப தலைவரும் தொழில் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன இந்த அழைப்பிதழை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…

Read More

நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும்!

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 40 புதிய அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிக்கும்   51 நாடாளுமன்ற உறுப்பினர்களும்,அமைப்பாளர் பதவிகளை மாத்திரமன்றி,  நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்கும் நிலை ஏற்படும். இலங்கையில் , ஒரு…

Read More

பிரதமர் நாடு திரும்பினார்!

சீனாவுக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். நேற்றிரவு 11.15 மணியளவில் பிரதமர் நாட்டை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையிலான குழுவினர் சீனா நோக்கி பயணித்தனர். அமைச்சர்களான அனுரபிரியதர்ஷன யாப்பா, சம்பிக்க ரணவக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்த ஆகியோர் பிரதமரின் சீன விஜயத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை வைத்தியர்கள் திறமையானவர்கள் – ராஜித

ஆட்களை காணாமல் போகச்  செய்தவர்கள் யாரென்பது வெளிச்சத்துக்கு வரப்போகின்றது என்ற அச்சம் கொண்டவர்களே காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்படுவதை எதிர்க்கின்றனர் என்றும் அரசாங்கம் அறிவித்தது. வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கிருலப்பனையிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்ட அறிவிப்பை அரசாங்கம் விடுத்தது. இங்கு உரையாற்றிய சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டாக்டர் ராஜித சேனாரத்ன முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு விஷ ஊசி  ஏற்றப்பட்டதா? இல்லையா? என்பது…

Read More

கரை­யோர மக்கள் அவ­தா­ன­ம்!

நாட்டின் பல பாகங்­க­ளிலும் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­வதால் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­ப­ட­ வேண்டும் என கேட்­டுக்­கொள்­வ­தாக வளி­மண்­டள­வியல் திணைக்­களம் விடுத்­துள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, நாட­ளா­விய ரீதியில் கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் பலத்த காற்று வீசு­வ­தற்­கான அதி­க­ளவு வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் மேற்கு, வட­மேற்கு,தெற்கு மத்­திய மற்றும் சப்­ர­க­முவ மாகா­ணங்­களில் அதி­க­ளவு மழை பெய்­வ­தற்­கான வாய்ப்­புகள் உள்­ளன. கடற்­க­ரைப்­ப­கு­தி­களில் மணித்­தி­யா­ல­த்­துக்கு 60…

Read More

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை

இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலான தேசிய கொள்கைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்த காலங்களில் பாதிக்கப்பட்டு தங்களது சொந்த காணிகளை பலர் இழந்துள்ளனர். இதுவரையில் அவர்களுக்கு உரித்தான காணிகளோ அல்லது வேறு ஒரு காணியோ வழங்கப்படவில்லை. இதனை கருத்திற்கொண்டு அவர்களுக்கான தீர்வினை பெற்றுத்தரக்கூடிய தேசிய கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Read More

சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலம்

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன. அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து…

Read More

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய காலம் நீடிப்பு!

தேர்தல் படிவங்களை பூர்த்தி செய்ய இம் மாதம் 26 ஆம் திகதி வரை காலம் ஒதுக்கப்படுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த வருடத்திற்கான தேர்தல் படிவங்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே குறித்த படிவங்களை பூர்த்தி செய்து இதுவரை கையளிக்காத நபர்களுக்காக இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் படிவங்கள் கிடைக்காதவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தேர்தல் வடிவங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்…

Read More

சந்திரிக்கா – புகுடா சந்திப்பு!

இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் முன்னாள் பிரதமர், யசுஒ புகுடா(Yasuo Fukuda), நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து உரையாடினார் இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து தீர்க்கமாக ஆராயப்பட்டன. இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொள்கின்ற நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து சந்திரிகா குமாரதுங்க, ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு விளக்கங்களை வழங்கினார். இந்தநிலையில் ஜப்பானின் முதலீட்டாளர்களை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகளுக்காக தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு சந்திரிக்காவுக்கு ஜப்பானின் முன்னாள் பிரதமர் அழைப்பு விடுத்தார். ஜப்பானின்…

Read More