Headlines

15 ஆம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிப்பு

பொதுவிடுமுறை தினமாக எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. இம் முறை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புதுவருடம் வருகின்றமையால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமையை பொதுவிடுமுறையாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புதிய பொலிஸ் மா அதிபர்..?

புதிய பொலிஸ் மா அதிபர் தெரிவுக்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மூவருடைய பெயர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூவருமே இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர்.

Read More

நாடளாவிய ரீதியில் “கூகுல் லூன்” இணைய வசதி..!

இலங்கையில் இணைய வசதியினை விஸ்தரிப்பதற்காக நாடுபூராகவும் கூகுல் இணைய பலூன் வசதியினை ஏறபடுத்தவுள்ளதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிடல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதோடு இலகு இணைய தரவிறக்கம் மற்றும் அதிவேக இணைய வசதியினை ஏற்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

அதிவேக பாதை போக்குவரத்து பாதிப்பு.!

தெற்கு அதிவேக பாதையின் கொடகம நுழைவுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது, அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் ஒன்று பாதை நடுவில் உடைந்து விழுந்துள்ளது. அதிக வேகத்துடன் வந்த மோட்டார் வண்டி மின் கம்பத்தில் மோதியதனால் கம்பம் இரண்டாக உடைந்து பாதையில் விழுந்துள்ளது. இதனால், பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பக்கமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தின் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

இலங்கையில் மின்சார ரயில்..!

மின்சாரத்தின் உதவியால் பயணிக்கக் கூடிய ரயில் சேவையை இலங்கையில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இந்த திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். பாணந்துறை நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நாடு திரும்பினார் பிரதமர்.!

சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 12.15 மணியளவில் நாடு திரும்பியுள்ளதாக, எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பித்தமை, அதன் அருகில் விஷேட பொருளாதார வலயத்தை நிறுவுதல் போன்ற தீர்மானங்களுக்கு, சீனப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

150,000 ரூபா போனஸ் வழங்கினால் 1,400 மில்லியன் நட்டம்

சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள துறைமுக அதிகாரசபை தொழிற்சங்கங்கள் கோரும் 150,000ரூபா போனஸ்தொகை வழங்கப்பட்டால் துறைமுக அதிகார சபைக்கு 1,400 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்று மேற்படி அதிகார சபையின் நிர்வாக பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.

Read More

தொழிலாளர்கள் மீது குளவி தாக்குதல்

அட்டன் – எபோட்சிலி தோட்டத்தில் மாஸ்க் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  2 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை  9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட  2 தொழிலாளர்களும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read More

சித்திரைப் புத்தாண்டில் கண்கள் கவனம்

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என சுற்றிக்காட்டிய குறிப்பிட்ட சங்கம் பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார கூறியுள்ளார்.

Read More

வாகன நெரிசலுக்கான தீர்வு : மக்களிடம் வேண்டுகோள்

புத்தாண்டை முன்னிட்டு தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் 08ஆம் திகதியிலிருந்து 13ஆம் திகதி வரையிலும் பின்னர் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலும் பிரதான நுழைவாயில்களுக்குப் பதிலாக மாற்று நுழைவாயில்களை பயன்படுத்துமாறு வாகன உரிமையாளர்களிடம் நெடுஞ்சாலைகள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

எமது அடையாளத்தை இல்லாதொழிக்கும் திட்டத்தை கைவிடுங்கள் : ஜனாதிபதிக்கு கடிதம்

சம்பூர் அனல் மின் நிலையம் அமைப்பது இப்பிரதேசத்தின் பூர்வீக குடி மக்கள் என்ற அடிப்படையில் எமது வாழ்வாதாரத்தையும் இயல்வு வாழ்வையும் தமது அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் ஒரு நடவடிக்கையாகும். எனவே சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளனர். மூதூர் கிழக்கைச் சேர்ந்த பூர்வீக பழங்குடியின மக்கள் நேற்று 7ஆம் திகதி சந்தோஷபுரம் சிவசக்தி…

Read More