Headlines

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!

தென்னமெரிக்கா மற்றும் பல நாடுகளில், சீகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால எச்சரிக்கை விடுத்தார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கர்ப்பிணிப் பெண்ணொருவர், சீகா வைரஸால் பாதிக்கப்படுவாராயின், அது அவருடைய வயிற்றிலுள்ள சிசுவின்  வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். இதனால், குறித்த சிசுவுக்கு, நரம்பியல் சம்பந்தமான…

Read More

மென்பானங்களால் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

மென்பானங்களால் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கு தேவையான சீனியின் அளவை விட இரண்டு மடங்கு சீனியின் அளவு குறித்த மென்பானங்களில் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தினமும் இந்த மென்பானங்களை அருந்தும் சிறுவர்கள் மிக விரைவில் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் குழந்தை ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 4 தேக்கரண்டி சீனியின் அளவு தேவைப்படும் நிலையில் குறித்த மென்பானங்களில் 9 தேக்கரண்டி சீனி உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

Read More

கேலக்சி நோட் 7 போன்களை பயன்படுத்த வேண்டாம்: அமெரிக்கா எச்சரிக்கை

பேட்டரி கோளாறால் திடீரென்று வெடித்து சிதறும் ’சாம்சங் கேலக்சி நோட் 7’ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது.

Read More

பட்டம் விடுவதில் அவதானம் : சிறுவர்களிடம் கோரிக்கை!

அதி உயர் மின்னலுத்தங்கள் காணப்படும் இடங்களில் பட்டம் விடுவதை தவிர்க்குமாறு கொழும்பு நகர மரண விசாரணை அதிகாரி மொஹமட் அஸ்ரப் சிறுவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விசேடமாக தங்கூசி என்ற நூலினைப் பயன்படுத்தி பட்டங்கள் விடும் போது, பட்டங்கள் மின்மாற்றி அல்லது மின்கம்பங்களால் சிக்குவதுடன் இதன்மூலம் மின்சாரத் தாக்குதலுக்கு சிறுவர்கள் உள்ளாகுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பெற்றோர் தமது குழந்தைகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், விசேடமாக…

Read More

பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம்

பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. புகைப்படங்கள் மூலம்…

Read More

ஹெட்போனால் ஏற்படும் விபத்துகள் அதிகம்

வாகனத்தை செலுத்தும் போது அலைபேசி மற்றும் ஹெட்போன் ஆகியவற்றை பாவிப்பதன் காரணமாக விபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருடாந்தம் ஏற்படும் திடீர் விபத்துகளின் எண்ணிக்கை 37,000 எனவும் அதில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற ‘அவசர விபத்துக்களை தவிர்த்தல்’ எனும் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Read More

செல்பி எடுத்தால் தோல் பாதிப்பு ஏற்படும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

செல்போனில் ‘செல்பி’ எடுப்பது தற்போது ‘பே‌ஷன்’ ஆகிவிட்டது. சிலர் ‘செல்பி’ எடுப்பதில் அதி தீவிரமாக உள்ளனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அடிக்கடி ‘செல்பி’ எடுத்தால் உடலின் தோலில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு வயதானவர் போன்ற தோற்றம் உருவாகும் என்றும் தோல் நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். செல்பி எடுக்கும் போது முகம் பாதிக்கப்படுகிறது. அதில் இருந்து வெளியாகும் நீல நிற ஒளி தோல் நலனை பாதிக்கும்….

Read More

மத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை தொற்று நோய்

மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால் பரவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தள்ளன. இந்நோய் முதற்தடவையாக சிரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்துள்ள மில்லியன் கணக்கான மக்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இத்தஞ்சம் கோருவோர் மத்திய கிழக்கு வலயத்திலிருந்து ஐரோப்பா வரையில் புலம்பெயர்வதனால் இந்நோய் லெபனான், துருக்கி, ஜோர்தான் மற்றும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பிரச்சினை…

Read More

கால நிலை மாற்றம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகளில் கடும் வெப்பம், மற்றும் வரட்சி நிலவியது. இந்த ஆண்டு இறுதியில் லா – நினா பிடியில் சிக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய எல்-நினோ கால நிலை மாற்றத்தினால் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. உலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில்,…

Read More

சித்திரைப் புத்தாண்டில் கண்கள் கவனம்

தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு சமயத்தில் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைகளின் பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக செயல்படுமாறு இலங்கை கண் அறுவை சிகிச்சை விஷேட வைத்தியர் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தீப்பொறி பரவல் காரணமாக சிறுவர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படலாம் என சுற்றிக்காட்டிய குறிப்பிட்ட சங்கம் பிள்ளைகளின் கண்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு விஷேட வைத்தியர் தர்மா இருகல்பண்டார கூறியுள்ளார்.

Read More

கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரணமான வெப்ப நிலை தொடர்பில் மகப்பேற்று மருத்துவ நிபுணர் டாக்டர் ருவான் சில்வா கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களின் உடல் வெப்பநிலை 38 பாகை செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயர்வடைந்தால் கரு கலையக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் கர்ப்பிணிகள் 4 மணித்தியாலத்திற்கு மேல் இருந்தால் அது கருவில் இருக்கும் சிசுவைப் போன்றே தாய்மாரையும் பாதிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, அதிக வெப்ப நிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை…

Read More

“சிக்கா” தொடர்பில் அவதானத்துடன் செயற்பட, இலங்கையர்களுக்கு கோரிக்கை

சிக்கா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ம்ககளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை என அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டெங்கு…

Read More