Headlines

இலங்கை மீனவர்கள் 1205 பேர் கைது

இலங்கை மீனவர்கள் 1205 பேர் இந்திய கடற்படையினரினால் கடந்த ஐந்து வருடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் காரணமாக, அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன், 241 படகுகள்  கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்திய மீனவர்கள் 2391 பேர் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர கடற்படை தலைமை அதிகாரி சத்ய பிரகாஷ் சர்மா தெரிவித்துள்ளார். நாளைய தினம் குறித்த கடற்படை அதிகாரி சத்ய…

Read More

தெற்கு அதிவேக பாதையில் இலவச பயணம்

தெற்கு அதிவேக பாதையில் மே தினத்தை முன்னிட்டு நாளை காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை இலவசமாக வாகனங்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஐனாதிபதி மைத்திரபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More

“ ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை ”

ஊடக சுதந்திரத்துக்கு தடை விதிக்கவோ, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கவோ இல்லை என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்தார்.

Read More

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு?

KALEEL S. MOHAMMED விசேட செயலமர்வு – கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு! 2015 இல் உயர்தர பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கைநூல் (University HANDBOOK 2015/2016) வெளியாகியுள்ள நிலையில் அவ் அனுமதிக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் மத்தியில் தமக்கு பொருத்தமான பாடநெறி அத்துடன் அதற்கு பொருத்தமான பல்கலைகழகம் என்பனவற்றை தெரிவு செய்வதில் பல்வேறு முரண்பாடுகள், குழப்பங்கள் மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. தற்போதுள்ள Z புள்ளி நடைமுறையில் தங்களது…

Read More

கால நிலை மாற்றம் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட, எல் நினோ தாக்கத்தினால், பெரும்பாலான ஆசிய நாடுகளில் கடும் வெப்பம், மற்றும் வரட்சி நிலவியது. இந்த ஆண்டு இறுதியில் லா – நினா பிடியில் சிக்க நேரிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு தொடங்கிய எல்-நினோ கால நிலை மாற்றத்தினால் வரலாறு காணாத கடும் வெப்பம் நிலவியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. உலகில் மிக அதிகளவு நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான வியட்நாமில்,…

Read More

மதுபானசாலைகளுக்கு நாளை பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினமான, நாளை ஞாயிற்றுக்கிழமை மே 1ஆம் திகதியன்று, மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. மே தினக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் கொழும்பு மாவட்டத்திலும் காலி மற்றும் நுவரெலியா நகர சபை அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளே மூடப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

வெகுவிரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பெல்ட்

முச்சக்கர வண்டிகளில் இருக்கை பெல்ட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முறையை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையே கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மதிப்பீட்டின் அடிப்படையில், குறித்த சட்டத்தினால் முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வட பகுதி தொழிற்சாலைகளை மீள இயக்க றிஷாத் நடவடிக்கை

– சுஐப் எம் காசிம் – யுத்தம் விட்டுச் சென்ற வடுக்கள் பல. உயிரழிவுகள் ஒரு புறம் இருக்க பொருளாதார ரீதியிலும் மானத ரீதியிலும் ஏற்பட்ட இழப்புக்கள் சொல்ல முடியாதவை. வடமாகாண மக்களின் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்து பலருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கிய தொழிற்சாலைகள் பல மூடப்பட்டு கிடக்கின்றன. வடமாகாணத்தில் அமைந்துள்ள காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத்தொழிற்சாலை, ஆனையிறவு – குறிஞ்சக்கேணி உப்பளம் ஒட்டு சுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியவை யுத்தத்தினால் உருக்குலைந்து போய்விட்டன. இந்த தொழிற்சாலைகளை…

Read More

மக்கள் வெள்ளம், திரளுவதனை தடுக்க முடியாது – விமல்

தடையுத்தரவுகளின் மூலம் எம்மை தடுக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். காவல்துறையினர் அஞ்சி நீதிமன்றிற்கு பிழையான தகவல்களை வழங்கி சாலிகா மைதானத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் பயன்படுத்த விடாமல் தடுத்த போதிலும், மே தினக் கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் திரளுவதனை தடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் சாலிகா மைதானத்திலிருந்து பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினருடன் பேசி சில வீதிகளை பேரணிக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

பொலிஸ் பாிசோதகரொருவர் கைது!

மாரவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் பரிசோதகரொருவர் கொழும்பு விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் அதிகாரி இதற்கு முன்பதாக சீதுவ பிரதேசத்தில் கடமையாற்றி வந்துள்ளார். அக் காலப்பகுதியினுள் வீடுடைப்பு மற்றும் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை தடுத்து வைத்து வன்மையாக தாக்கியதாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்றில் பெயரிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும்

‘இலங்கை ரூபாவின் பெறுமதி குறைந்ததாலும் இறக்குமதி வரியை குறைக்கும் சாத்;தியம் இல்லை என்பதால், வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும்’ என்று இலங்கை வாகன இறங்குமதிகள் சங்கத்தின் தலைவர் மஹிந்த சரத்சந்திர கூறினார். ‘வற்’ வரி தொடர்பிலான கலந்துரையாடலொன்று வாகன உரிமையாளர் சங்கத்திலுள்ள மூன்று நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதமர் மற்றம் நிதியமைச்சருக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது, வரியை குறைக்க முடியாது என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இதனால் வாகனங்களின் விலைகள் 300,000 ரூபாயிலிருந்து 400,000 ரூபாய் வரைஅதிகரிக்கப்படும். முன்னர்…

Read More

உனகலா வெஹர புனர்நிர்மாண நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில்!

பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர ரஜமஹா விகாரையை உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்கள் தரிசிப்பதற்குப் பொருத்தமான வகையில் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஆரம்பமானது. இப்புனர்நிர்மாணப் பணி எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புன்னிய ஸ்தானங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று பிற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா ரஜமகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து…

Read More