Headlines

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்ப்பிக்கப்படவுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் 24 ஆம் திகதி தங்களின் விடுதிக்கு சமூகமளிக்க முடியும் எனவும், திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஒழுக்காற்று குழுவின் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய விசாரணை அறிக்கை…

Read More

பதவி வெற்றிடம்

நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார். இதுவரை விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மாத்திரமே சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரிவுகளில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களும்…

Read More

கடுவலை சுது கைது

பாதாள உலக தலைவர் கடுவலை வசந்த என அழைக்கப்படும் பல கொலைகளுடன் தொடர்புடைய நபர் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை சுது என அழைக்கப்படும் பெல்லகே சுதத் கித்சிறி என்ற பாதாள உலக தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை கொத்தலாவல, பங்களாவத்தை பிரசேத்தில் வைத்து பேலியகொடை குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால், இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து ரி 56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

எரிவாயு கசிவால் வீடு முற்றாக எரிந்து நாசம்

ராஜகிரிய – நாவல பகுதியில் எரிவாயு கசிவு காரணமான வீடு தீப்பற்றிய சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் பரவிய தீயை கோட்டை மாநகர சபையின் தீயனைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். திடீரென ஏற்பட்ட தீ காரணமாக உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

முஸ்லிம் நாடுகளுடன் ரணில் ஒப்பந்தம்

சீன விஜயத்தின்போது பெற்றுக்கொண்ட பொருளாதார உபாயங்களை, இரண்டு தசாப்த காலத்துக்குப் பயன்படுத்த இணக்கம் காணப்பட்டது எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிடைத்த நன்கொடை,  நான்கு துறைகளின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் என்றார். நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல், நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தல், ஊழல் இல்லாத நாட்டை உருவாக்குதல், அபிவிருத்தி நோக்கிப் பயணித்தல் ஆகியவற்றை பிரதான கருப்பொருட்களாகக் கொண்டே அரசாங்கம் பயணிக்கின்றது என்றும் அவர் சொன்னார். சீன விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் நடத்திய…

Read More

எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ பாதுகாப்பை வழங்கியுள்ளேன் ஆனால் நாட்டின் ஜனாதிபதியான எனது பாதுகாப்பிற்கு ஒரு இராணுவ வீரரையேனும் பயன்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே மஹிந்த ராஜபக் ஷ இரண்டு வருடங்களிற்கு முன்னதாக தேர்தலை நடத்தினார் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பிபிலை நகரில் சனிக்கிழமை இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி சம்மேளனத்தில் உரையாற்றும் போதே…

Read More

வெடிகுண்டுகளுடன் இருவர் கைது

தெமடகொடை – காலிபுல்லை தோட்டப்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள்  வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தெமடகொடை மற்றும் மாலிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 21 வயதுடையவர்களாவர். சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்த கலந்து கொள்வார்

பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டத்தில் முனனாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்வார் என மஹிந்த ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். எமது அணியைச் சேர்ந்த எவரும் அரசுடன் இணையப் போவதில்லையென்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக வாசுதேவ நாணயக்கார எம்.பி. மேலும் தெரிவிக்கையில்; பொது எதிர்க்கட்சியின் மேதினக் கூட்டம் இம்முறை கிருலப்பனை மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேதின ஊர்வலம் நாரஹேன்பிட்டி, சாலிகா மைதானத்திலிருந்து ஆரம்பமாகி கிருலப்பனை மைதானத்தை வந்தடைந்து மாலை 3.00 மணிக்கு பொதுக்கூட்டம்…

Read More

ஓகஸ்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளமையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஓகஸ்ட் மாதமளவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தும் தினம் அறிவிக்கப்படலாம் என, தெரிவிக்கப்படுகிறது.

Read More

தாஜுதீனின் கொலையாளிகள் விரைவில் கைது!

லஞ்ச, ஊழல் தொடர்பில் பலர் இன்று (11) கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ற்றுலா அபிவிருத்தி, கிறிஸ்தவ விவகாரம் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் றக்பி வீரர் வசிம் தாஜுதீன் மரணம் தொடர்பில் முக்கிய பிரபலங்கள் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் முக்கிய பலர்…

Read More

இன்று ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் இன்றுடன் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கின்றார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 33ஆவது பொலிஸ் மா அதிபராக என்.கே. இளங்கக்கோன் கடமையாற்றி வந்தார். 1980ஆம் ஆண்டு புதிய துணை பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இளங்கக்கோன் 1982ஆம் ஆண்டில் திறமை அடிப்படையில் துணை பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டார். பின்னர் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தார். நாட்டின் பல பாகங்களிலும் கடமையாற்றியுள்ள என்.கே. இளங்கக்கோன் பல பொலிஸ் பிரிவுகளின் பணிப்பாளராகவும்…

Read More

கைதிகளுக்கு வீட்டுச் சாப்பாடு.!

பிறக்கவிருக்கும்  தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்கு அவர்களது வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம் மாதம் 13ம்இ 14ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி குறித்த இரு நாட்களும் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரை கைதிகளுக்கு உறவினர்கள் தரும் உணவை வழங்க முடியும்…

Read More