Headlines

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை…

Read More

மோனோ ரயில் செயற்திட்டம் கைவிடப்பட்டது!

இலங்கையில் மோனோ ரயில் சேவையை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை போக்குவரத்து அமைச்சு தற்போது கைவிட்டுள்ளது. கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மோனோ ரயில் போக்குவரத்தை அறிமுகப்படுத்த புதிய அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதற்கான சாத்திய வள ஆய்வுகளும் நடைபெற்று, செயற்திட்டத்தின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும் மலேசிய நிறுவனம் ஒன்றிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோனோ ரயில் போக்குவரத்து வழித்தடத்தை அமைப்பதற்காக பாரிய தொகை செலவிடப்பட வேண்டி இருப்பதால் அத்திட்டத்தை கைவிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதன் காரணமாக…

Read More

400 வருட பழைமைவாய்ந்த கருமலையூற்று, ஜும்ஆ பள்ளிவாசலை கைவிட்டு விடாதீர்கள்..!

-Mohamed Fairooz- திருகோணமலை, கருமலையூற்று பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகையில் ஈடுபட்டுள்ள இந்திய உத்தர பிரதேச தப்லீக் ஜமாஅத் குழுவினரையும் உள்ளூர்வாசிகளையுமே படத்தில் காண்கிறீர்கள். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்து பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ள கருமலையூற்று பிரதேசத்தில் அமைந்திருந்த 400 வருட பழைமை வாய்ந்த ஜும்ஆ பள்ளிவாசலானது கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் படையினரால் முற்றாக இடித்து நிர்மூலமாக்கப்பட்ட பிற்பாடு அக் காணியில் சதுர வடிவான மிகச் சிறிய கட்டிடம் ஒன்று பள்ளிவாசல் எனும் பெயரில் படையினரால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட முதல்…

Read More

மேர்வின் சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவில் நேற்று முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. களனி பிரதேசத்தில் நடைபெற்ற காணி விற்பனையொன்று தொடர்பாகவே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த ஆட்சியின் போது களனி பிரதேச சபைக்கு உரித்தான காணியொன்றை மேர்வின் சில்வாவும் அவரது ஆதரவாளரான சிங்கப்பூர் சரத் என்பவரும் இணைந்து போலி உறுதிப்பத்திரம் தயாரித்து, விற்பனை செய்துள்ளனர். ஒரு காணித்துண்டு 25 லட்சம் ரூபா வீதம் 31 காணித்துண்டுகள்…

Read More

சிரியா அரசியலில் புதிய திருப்பம்

சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவாக இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து போர் நடைபெறுவதால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். உள்நாட்டு போருக்கிடையே அங்கு ஐ.எஸ்….

Read More

இஸ்ரேலுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரிக்கை

கடந்த புதன் அன்று பலஸ்தீன் மற்றும் ஐரோப்பா நாடுகளின் நல்லுறவுக்கான கூட்டமைப்பு ஐரோப்பாவில் கூடியது. ஐரோப்பாவின் பாரளமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்து கூட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகளை சர்ந்த பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பலஸ்தீனின் தற்போதைய நிலைகள் குறித்து கூட்மைப்பு ஆய்வு செய்தது. இறுதியில் பலஸ்தினீல் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடுமைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இஸ்ரேலின் அத்துமீறல்கள் சகித்து கொள்ள முடியாதது என்றும் இஸ்ரேலின் அக்கிரமங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு ஒருமித்து கண்டிப்பதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்க பட்டது. சர்வதேச சட்டங்கள் எதையும்…

Read More

சவூதி  தொழிலாளர்களுக்கான புதிய  சட்டம்!

சவூதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவூதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 1. தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 2. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract paper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 3. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால்…

Read More

ரஷ்யாவை அலங்கரிக்கும் இஸ்லாம்

ரஷ்யா இஸ்லாம் வளமுடன் வளர்ந்து வந்து மண்ணாகும் இடையில் அங்கு ஏர்பட்ட கம்யுனிச அடக்குமுறைகளால் இஸ்லாம் அந்த மண்ணில் கடுமையான அடக்கு முறைகளை எதிர் கொண்டது. கம்யுனிச ஆட்சியாளர்களால் அடுக்கடுக்கான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விட பட்டபோதும் அந்த மண்ணில் இருந்து அவர்களால் இஸ்லாத்தை அப்புற படுத்த முடியவில்லை. இஸ்லாம் தனது தனி தன்மைகளால் ரஷியாவில் பிரகாசித்து கொண்டி இருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவிலேயே மிக பெரிய இறை இல்லம் ஒன்று மாஸ்கோவில் திறந்து வைக்கபட்டது. 1904 ஆம் ஆண்டு…

Read More

மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். “ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம்…

Read More

விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்

அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நாட்டம் கொண்ட அவர் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று லட்சியமும் பூண்டார். அதனடிப்படையில் விண்வெளிக்கு சென்று தனது லட்சியத்தை நிறைவும் செய்தவராவார்.

Read More

இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை ,பஞ்சாப், டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்றுஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More