விமலின் கடவுச்சீட்டு மீள வழங்கப்பட்டது
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கடவுச்சீட்டை நீர்கொழும்பு நீதிமன்றம் அவரிடம் மீள வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச கடவுச்சீட்டு காலாவதியானமை தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
