Headlines

அமைச்சா் மஹிந்த அமரவீர வாழைச்சேனை விஜயம்

– அஸ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மற்றும் வட்டவான் இறால் பன்னைக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் வருகை தந்து மீன்பிடியாளா்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆரயாப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படடது. இதில் இறால் பன்னையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சா்களினால் ஆராயப்பட்டது இவர்களுக்கான ஒரு காரியாலயம் அமைக்கப்பட வவேணடும் என பிரதி அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அடுத்த வருடம் அமைத்து தருவதாக…

Read More

றிஷாதின் ஆதங்கமும் சம்மந்தனின் மழுப்பலும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அகதி என்ற அவல முத்திரை குத்தப்பட்ட சமுகமாகவும் உள்நாட்டுக்குள்ளேயே 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சமுகமாகவும் இந்த உலகில் இருக்கும் ஒரே ஒரு சமுகமென்றால் அது இலங்கையில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மாத்திரமே. வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்காக அஷ்ரப் தொட்டு இன்று றிஷாத் பதியுதீன் வரை அயராது உழைத்து வருவதை இந்த நாடே அறியும். அதிலும் றிஷாதின் அரசியல் பிரவேசம்…

Read More

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் செயற்பட இடமளிக்க வேண்டாம் – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம். காசிம்- எந்தவிதமான குற்றமுமிழைக்காமல் துரத்தப்பட்ட வடபுல அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். வடபுல முஸ்லிம்கள் தமது பரம்பரைப் பூமியிலிருந்து விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னுமே அகதி முகாம்களில் அல்லல்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அரசும் உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. சர்வதேசமோ, ஜெனீவாவோ, ஐ.நாவோ இந்த மக்கள்…

Read More

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு

பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் இன்று

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன இன்று கொண்டாடப்படவுள்ளன. இதன் காரணமாக கொழும்பில் விசேட நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன்…

Read More

நவம்­பரில் இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்தல்

எதிர்­வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இளைஞர் பாரா­ளு­மன்ற தேர்­தலில் மட்டு.மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக தேசிய இளைஞர் சேவைகள் மன்­றத்தின் மாவட்ட உத­விப்­ப­ணிப்­பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இம் மாவட்­டத்­தி­லி­ருந்தும் மூவர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதில் மண்­முனை வடக்கு, ஏறா­வூர்­பற்று, கோற­ளைப்­பற்று தெற்கு, கோற­ளைப்­பற்று, கோற­ளைப்­பற்று வடக்கு ஆகிய பிர­தேச செய­லாளர்…

Read More

இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு, இலங்கையிலிருந்து 30 மாணவர்கள் தெரிவு

இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின், முயற்சியின் பிரதிபலனாக இம்முறை இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு நாடெங்கிலும் இருந்து கீழ்காணும் 30 ஷரீஆத் துறை மாணவர்கள் புலமைப்பரிசிலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 01. பதுர்தீன் முஹம்மத் பய்ரூஸ்-கதுருவல 16. நிஸார்தீன் முஹம்மத் இர்பான் 02.. முஹம்மத் முனாஸ் முஆத்-மாவனெல்ல 17. அமீர் முஹம்மத் அய்யாஷ் 03. ஸபீன் முஹம்மத் பஸ்மில் 18. அப்துல் குத்தூஸ் இர்பான்-குரின்ஜாகேனி 04. ஸரீப் முஹம்மத்…

Read More

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி  வெள்ளிக்கிழமை மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணியினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மும்மொழியிலும் எழுதப்பட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர். சுமார் ஒரு மணித்தியாலயம் வரை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சராப்தீன்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செலுத்திவருகின்ற பார்வை போதுமானதாக இல்லை.இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம்…

Read More

கொண்டயாவை பிணையில் எடுக்க தாயார் கையெழுத்து!

கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை பிணையில் எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், அவரது தாயார் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய சிறுமி சேயாவின் கொலையின், சந்தேக நபர் கொண்டயா சில நாட்களுக்கு முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் பிணைக்கு கையெழுத்திட யாரும் முன்வராத நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று கொண்டாயாவின் தாயார் பிணைக்கு கையெழுத்திட்டுள்ளார். இக்கொலை,தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ள, உண்மை குற்றவாளியான இவரது சகோதரர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

விமல் வீரவன்ச சற்றுமுன் கைது – BREAKING NEWS

– நமது நிருபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ச சற்றுமுன் கைது செய்யப் பட்டதாக பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

Read More

என்னைக் கவர்ந்த ஒரு இஸ்லாமிய தாய் – கனடா பிரதமரின் அனுபவம் இதோ..!

உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால் அங்கும் முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜஸ்டின் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில்…. கனடா என்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சொந்தமான நாடாகும், கனடாவை கட்டி எழுப்பியதில் அனைத்து மதத்தவருக்கும் பங்குயிருக்கிறது. இங்கு வாழக்கூடிய அனைத்து மத மக்களும்…

Read More

இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய பிரதமர் ரணில் நடவடிக்கை

இளவரசன் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் வரலாற்று அடையாளங்கள் இருப்பதால், இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிதுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெரணியகலவை ஆலோசராக நியமித்து இது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் பௌத்த…

Read More