Headlines

அ.இ.ம.கா வின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருடனான கலந்துரையாடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான SSPமஜீத் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஊரின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதோடு,அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டு ஊரின் நன்மை கருதி ஊர் மக்கள் அனைவரும் SSP மஜீத் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் ஒருமித்து கேட்டுக் கொண்டனர்..

Read More

ACMC, அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கட்சிச் செயலகம் இன்று மதியம் (25-07-2015)சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும்,தேசிப்பட்டியல் வேட்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன்,தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் மற்றும் பத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர். இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும்…

Read More

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன்…

Read More

தேசியப் பட்டியல் ஊடாக ஜெமீல் பாராளுமன்றம் செல்வார்

எமது கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக ஏ.எம்.ஜெமீல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவிருக்கிறார். அந்த அதிகாரத்தின் மூலம் சாய்ந்தமருதின் அனைத்து தேவைகளையும் அவர் நிறைவேற்றித் தருவார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயலகம் இன்று சாய்ந்தமருதில் திறந்த வைக்கப்பட்டதைத் தொடர்ந்து சீ பிரீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற உடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியுடன்…

Read More

மக்களுக்குப் பயன்படாத கட்சிகளோ அமைப்புகளோ அவசியமற்றது – றிஷாத்

தேசியப் பட்டியல் ஊடாக சாய்ந்தமருது ஜெமீலை பாராளமன்றம் அழைத்துச் செல்வேன் – றிசாத் ஏனைய கட்சிகளைப் போன்று ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை தருவோம் என்று மக்களை ஏமாற்றும் கட்சி தங்களது கட்சி இல்லை என்று தெரிவித்த அமைச்சர் றிசாத், எங்களது கட்சி சொல்வதையே செய்யும் என்றும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது கட்சிக்கு கிடைக்கவிருக்கின்ற தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஒன்றை ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் காங்கிரசின் கோட்டையான…

Read More

ACMC நிந்தவூர் கட்சிக் காரியாலயம் திறந்து வைப்பு

கட்சியென்றால் மார்க்கம் போல் நினைக்கின்றனர்.கட்சியினை வைத்து தொழில் செய்கின்றனர்.மக்களுக்கு உதவாத கட்சி அதனை விட்டுவாருங்கள் என்றால் ஏதோ மதத்தினை விட்டுவருவதால் பிரயத்தனம் செய்கின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் முஹம்மத் சிசானின் கட்சி அலுவலகத்தினை நிந்தவூரில் திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ இந்த முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்தின் விளைவு அவர் ஆட்சியில்…

Read More

சாப்பிட ஆள் இல்லை – சரியும் மெக்டொனால் வருவாய்

பிரபலமான துரித உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனமான மெக்டொனால்டின் வருவாய் சரிந்துவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காலாண்டிற்கான வருவாய் கணக்குகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் நிறுவனத்தின் வருவாய்யானது 13.3 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இது டாலர் மதிப்பில் 1.2 பில்லியன் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஆசிய நாடுகளில் அதன் விற்பனை 4.5 சதவீதம் சரிந்துள்ளது. சொந்த நாடான அமெரிக்காவில் விற்பனை சரிவானது 2 சதவீதமாக உள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் மெக்டொனால்டு விற்பனை 0.7 சதவீதம்…

Read More

இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக இரவு வேலை பார்க்கும் 100 பேரை தேர்ந்தெடுத்து, 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சீறுநீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹோமோன்கள் ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு…

Read More

7000 கார்களுக்குச் சொந்தக்காரர்..!

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான, புரூனே நாட்டின் சுல்தான், ஆடம்பர கார்களை வாங்கி குவிப்பதில் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. எண்ணெய் வளமிக்க நாடான புரூனே, 1967ல் தனி நாடானது. அதன் சுல்தானாக (மன்னராக) ஹசனன் போக்கியா முயுசுதீன் வாதுலா இருந்து வருகிறார். எண்ணெய் வளத்தால் கொழிக்கும் அந்நாட்டு சுல்தானின் வருமானத்திற்கு, அளவே இல்லாமல் போய் விட்டது. ஒரு வினாடிக்கு அவரது வருவாய், 5,277 ரூபாய். அதுவே, ஒரு வாரத்திற்கு 3,191 கோடி ரூபாய். அவரது…

Read More

அரசியல்வாதிகளுக்கு பணம் வழங்கவில்லை: சீன நிறுவனம்

எந்தவொரு அரசியல்வாதிக்கும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நிதியுதவி வழங்கவில்லை என்று சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனம், சர்வதேச மதிப்புப்பெற்ற தமது நிறுவனத்தை உள்ளுர் ஊடகம் ஒன்று பிழையாக கருதி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் செய்தி தொடர்பில் இலங்கை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் எமது நிறுவனம் தொடர்பில் தவறான எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அத்துடன் முதலீட்டு நாடுகளுக்கு பிழையான சமிஞ்சையை காட்டக்கூடாது. இலங்கையின் அபிவிருத்தி…

Read More

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களின் தீராத…

Read More

நாட்டை கட்டியெழுப்ப பெரும்பான்மை பலத்தைத் தாருங்கள் – ரணில்

ஜன­வரி 8ஆம் திகதி இடம்­பெற்ற நல்­லாட்­சிக்­கான புரட்­சியை வெற்­றி­ க­ர­மாக முன்­னெ­டுக்க ஆகஸ்ட் 17ஆம் திகதி மக்கள் எமக்கு பெரும்­பான்­மையை வழங்கி நாட் டில் ஐ.தே.முன்­ன­ணியின் ஸ்திர­மான ஆட்சிக்கு வித்­திட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறைகூவல் விடுத் தார். அரச மாளிகை அமைப்­பது எனது நோக்­க­மல்ல. உங்கள் வீடு­களை அரசமாளி­கை­ யாக மாற்­று­வதே எனது நோக்­க­மாகும் என் றும் பிர­தமர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று வியாழக்­கி­ழமை இடம் ­பெற்ற ஐ.தே.மு.வின் கொள்­கை பிர­க­ட­னத்தை வெளி­யிட்டு வைத்து…

Read More