Headlines

ACMCயின் அட்டாளைச்சேனைக் கூட்டத்தில் கல்வீச்சு தாக்குதல் (photo)

– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அட்டாளைச்சேனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் இடையில் கல்வீச்சு, கூச்சல் மற்றும் குழப்பத்தினால் பதற்றமான நிலைதோன்றியது. அட்டாளைச்சேனை பிரதான வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையிலேயே கல்வீச்சு நடத்தப்பட்டது. இதனால் கூட்டம் சற்று நேரம் தடைப்பட்டு பதற்றமமானதொரு நிலை ஏற்பட்டது. பின்னர் பொலிஸார்…

Read More

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சாட்சியாக இருக்கின்ற காட்சிகள் அடங்கிய வீடியோவை சோதனைக்கு உட்படுத்துவதற்கு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பிலான அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முஸ்லிம்களின் புனித நூலான குரானை அவதூரப்படுத்தும் வகையில் கொம்பனிவீதி பொலிஸூக்கு…

Read More

ரணில் பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் – றிஷாத்

– எஸ்.கணேசன் – திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­ஸுக்கு வாக்­கா­ளர்கள் இரண்டு ஆச­னங்­களை பெற்றுக் கொடுத்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் ஆச­னத்தில் அமர்­வ­தற்கு முன்னர் தனி கரை­யோர நிர்­வாக மாவட்­டத்தை பெற்­றுக்­கொ­டுப்பேன் என்று கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாட் பதி­யூதீன் வீர­கே­சரி வார வெளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் கூறினார்.அவர் ­வ­ழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கின்­றது. கேள்வி: திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது­வரை பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­ட்ட­தில்லை. இந்த…

Read More

ஹக்கீமின் கீழ் வரும் பள்ளிவாசல் காணியை ஏன் அவரால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது – றிஷாத்

எமது முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான வில்பத்துக் காணியில் அவர்களை குடியமர்த்த முற்பட்டபோது நான் காட்டை அழித்து மக்களை குடியமர்த்துகின்றேன் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இந்த நாட்டு ஜனாதிபதி கூட வில்பத்தில் அழிவு நடந்திருக்கின்றதென்கின்றார். ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ பயந்து நாம் அரசியல் செய்யவில்லை. எமது சமூகத்திற்கு அநியாயம் நடக்கின்றபோது தைரியமாக பேசுகின்ற சக்தியை இறைவன் எமக்குத் தந்திருக்கின்றான் அதுவரை மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்…

Read More

சாய்ந்தமருது மண்ணிலிருந்து மரம் அடியோடு பிடுங்கப்படுகிறது

– நவாஸ் சௌபி – முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருந்த சாய்ந்தமருது மண் எதிர்வருகின்ற தேர்தலில் மரத்தை அடியோடு பிடிங்கிவிட்ட செய்தியை இந்த உலகிற்கு அறிவிக்கும். அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான கல்முனைத் தொகுதியும் படுதோல்வியடைவதற்கு இந்த மாற்றம் வழிவகுக்கும் என கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் 5 ஆம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார். சனிக்கிழமை 25.07.2015 ஆம் திகதி சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட…

Read More

குருநாகல் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 முஸ்லிம்கள் வபாத்.

இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் குருநாகலில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் அனுராதபுரம், அசாரிகம பிரதேசத்தை  சேர்ந்த வாஹித் மவ்லவி, ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஜீப் ஒன்றுடன் மோதிய  போதே மேற்படி அசம்பாவிதம் இடம் பெற்றது எனவும், உயிரிழந்தவர்களில் ஒருவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் மற்றவர் ஒரு பிள்ளையின்…

Read More

ஹக்கீமின் தலைமையில் முஸ்லிம்களடைந்த நன்மையென்ன- றிஷாத் பதியுதீன்

மாற்றம் தேவை என்று சிந்திக்கும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு தனித்துவமாக முதன்முறையாக களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திற்கு வாக்களித்து மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று புதிய வரலாறு படைக்க வேண்டும். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருது சீபிறிஜ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(25) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு…

Read More

SSPமஜீதை ஆதரித்து இடம்பெற்ற ACMCயின் பொத்துவில் கூட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுகின்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.அப்துல் மஜித் அவர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டமானது பொத்துவில் பிரதான வீதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கு பற்றுதலோடு ( 25 )இடம் பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். பொத்துவிலில் இதுவரை தீர்க்கப்படாத கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, மீன்பிடி, விவசாயம் என்பனவற்றின் பிரச்சினைகள் அமைச்சர் ரிசாத்…

Read More

முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை இல்லாமல் செய்ய மு.கா வியூகம் – றிஷாத் பதியுதீன்

வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் பாராளுமன்றத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதித்துவம் குறையுமெனில் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஹூசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற…

Read More

அக்கரை மண்ணில் றிஷாதின் முதல் உரை!

– இப்னு ஜமால்தீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று  மாலை (26) அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் அ.இ.ம.கா வின் அக்கரைப்பற்று தேர்தல் காரியாலயம் அ.இ.ம.கா தேசியத் தலைவர் றிஷாத் பதியுதீனினால் திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் மயில் சின்னம் 08ம் இலக்கத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் போட்டியிடும் சமுக சேவகரும் நீண்ட கால அரசியல் குடும்பத்தை பின்னணியாக கொண்டவமான கணக்காளர் நபீல் அவர்களை ஆதரித்து நடைபெற்ற இன்றைய கூட்டத்தில்…

Read More

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் அடிமைத்தனத்தை துடைத்தெறிவேன் – றிஷாத் பதியுதீன்

எம்.வை.அமீர் கடந்த 30 வருடகாலமாக தங்களின் சுகபோகங்களுக்காக அம்பாறை மாவட்ட மக்களின் வாக்குகளைப்பெற்றுக் கொண்டு அவர்களை அரசியல் அனாதைகளாக வைத்திருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் அரக்கப்பிடியில் இருந்து அகன்று வாருங்கள் எல்லா உரிமைகளையும் பெற்ற உங்களை நீங்களே ஆளும் நிலைக்கு நாங்கள் கொண்டு வருகிறோம் அள்ளாதுவிடின் எதிர்காலத்தில் எங்களை நிராகரித்து விடுங்கள் என்கிறார் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியூதீன். அமைச்சர் றிசாத் பதியூதீன் அம்பாறைக்கு மேற்கொண்ட சூறாவளிப் பயணத்தின் இரண்டாம் நாளான 2015-07-26…

Read More

அ.இ.ம.கா. வின் கூட்டத்திற்காக திரண்டு வந்த மக்கள் வெள்ளம்

அஹமட் இர்சாட் மொஹமட் புஹாரி அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமுகமாக நேற்று முன்தினம்  25.07.2015 சனிக்கிழமை மலை சம்மாந்துறையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்திற்கு மக்கள் வெள்ளம் அலையாய் திறண்டு வந்து வரலாறு படைத்தமையானது மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது எடுத்த எடுப்பிலேயே ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக்கொள்வதனானது மிக இலகுவான விடயம் என்பதனை எடுத்துக்காட்டியது. இங்கு உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் றிஷாத் பதியுதீன் சம்மாதுரைக்கு…

Read More