Headlines

பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுவார்கள் – ரணில்

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹா­ர­மகா தேவி பூங்­காவில் வெளியிடப்பட்டது. (முழு விபரம்) ஐந்து முக்கிய வேலைத்திட்டங்களை கொண்டதாக தேர்தல் விஞ்ஞாபனம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் எமது பொரு­ளா­தாரக் கொள்கை அனை­வ­ரையும் செல்­வந்­தர்­க­ளாக்கும் கொள்­கை­யாகும் என்று அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொரு­ளா­தா­ரம் எமது ஆட்சியில் 10 இலட்சம் தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­குவதற்கு நடவடிக்கைஎடுக்கப்படும். ஜீ.எஸ்.பி வரிச் சலு­கையை மீளப் பெற்­றுக்­கொள்வோம். தெற்­கா­சிய…

Read More

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் பூர்த்தி

பொதுத் தேர்தலுக்கான தபால்மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்கட்டைகள் அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அச்சிடப்பட்ட அனைத்து தபால் மூலம் வாக்காளர்களின் வாக்கட்டைகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகர் காமினி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ஏனைய உத்தியோகபூர்வ வாக்கட்டைகள் அனைத்தும் விரைவாக அச்சிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கிடைத்துள்ள விண்ணப்பங்களின் பிரகாரம் தபால் மூலம் வாக்களிப்போர் எண்ணிக்கை 25இ000 வரை அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார். இதனிடையே, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான…

Read More

அ.இ.ம.கா. வின் திகாமடுல்ல கூட்டம்!

– அப்துல் அஸீஸ் ​- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் (அம்பாறை மாவட்டத்தில்) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்சியியின் விஷேட கூட்டம் (23) மாலை அதன் செயலாளர் நாயகத்தின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட்டின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளை தொகுதிகள் ரீதியாகவும், பிரதேசம்கள் ரீதியாகவும் விஸ்தரித்து முன்னெடுப்பது தொடர்பாகவும், தேர்தல் கால சட்டதிட்டம்களை கடைபிடிப்பது தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் சனி,…

Read More

பதுளையில் முஸ்லிம் வியாபாரி வெட்டிக்கொலை

பதுளை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகாமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் முஹமட் ரொசான்  என்பவர் (வயது – 45) கூரிய ஆயுதத்தினால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் பதுளை நகரில் வீதி வியாபரத்தில் ஈடுபடும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இக் கொலை தொடர்பில் பொலிசார் மேலதிக வசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Read More

ISIS பற்றிய இலங்கை முஸ்லிம்களின் கூட்டுப் பிரகடனம்!

– அஸ்ரப் ஏ சமத் – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகவியலாளர் மாநாடு ஐ.எஸ் பற்றிய இலங்கை முஸ்லீம் அமைப்புக்களின் கூட்டுப் பிரகடனப்படுத்தப்பட்டது. மேற்படி விடயமாக நேற்று மாளிகாவத்தையில் உள்ள அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமையகத்தில் அதன் தலைவர் அஸ் ஷேக் றிஸ்வி முப்தி தலைமையில் ஊடக மாநாடு நடைபெற்றது. இங்கு அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் – 1924ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உலமா சபை இன்றும் ஒரு கட்டுக்கோப்பின்…

Read More

நாட்டு மக்களின் எதிர்காலமே எமது நோக்கம் – பிரதமர்

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே நாட்டை மீண்டும் சீரழிக்க மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதா என்று மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். “60 மாதங்களில் புதிய தேசத்தை உருவாக்குவதற்கான ஐந்து திட்டங்கள்” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல்…

Read More

‘புலிகளுக்கு மஹிந்த கப்பம் செலுத்தினார்’

2009ஆம் ஆண்டு நாட்டில் பயங்கரவாதம் தோல்வியடைய செய்யப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பலத்தை பெற்றது பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அல்ல.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன்  அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இதற்காக அரசாங்க திறைசேரியின் பணத்தை பெற்று அவர்  புலிகளுக்கு கப்பமாக  செலுத்தினார்’ என்றார். tm

Read More

என்ன செய்ய நினைக்கிறார் ஒபாமா?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவி காலம் முடிவடைவதற்கு இன்னும் 18 மாதங்களே உள்ளது. அந்நாட்டு சட்டப்படி ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்பதால் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இன்னும் மீதமிருக்கும் இந்த 18 மாதங்களில் நீங்கள் முக்கியமாக என்ன செய்ய நினைக்கிறிர்கள் என்று கேட்கப்பட்டதிற்கு ஒபாமா ”இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் பருவநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்காவின் பரிந்துரைகளை ஏற்க செய்வது தான் என் முக்கிய…

Read More

மனித நேயத்துக்கு புதிய இலக்கணம் படைத்த சவூதி விமானம்

– மௌலவி செய்யது அலி ஃபைஜி – இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சி நகரிலிருந்து சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவூதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்ட சவூதி விமானம். இதில் பயணித்தவர்களில் பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்க பட்டது. இது விமானிக்கு சொல்லப் படவே தனது விமனத்தின்…

Read More

ஆட்சியை கைப்பற்றுவோம் : ஞானசார தேரர் முழக்கம்

பொதுத் தேர்தலில் நாம் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டின் பெயரை மாற்றுவோம்.சிங்கள மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவோம்.என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும்,வேட்பாளருமான கலகொட அத்தே ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டின் தலைவர் மற்றும்  கட்சித் தலைவர்கள் அனைவருமே தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவே தேர்தலில் போட்டியிடுகின்றனர்.அவர்களுக்குச் சிங்கள மக்களின் உரிமை குறித்து கவலைகள் இல்லை….

Read More

சீன அரசின் எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

சீனாவின் மிக பெரிய இறை இல்லம் ஒன்றில் ஈகை பெருநாள் தொழுகைக்காக இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான சீன முஸ்லிம்கள் ஒன்று திரண்டனர். சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷன் ஜோங் பகுதியில் அமைந்துள்ள இறை இல்லம்தான் அது. மஸ்ஜித் நிரம்பி வழிந்ததால் மஸ்ஜிதை சுற்றியுள்ள வீதிகள் எங்கும் தொழுகை விரிப்புகளே காட்சி தந்தன. இஸ்லாத்ததை அடக்குவதற்கு கடும் முயற்ச்சிகளை சீன அரசு மேற்கொண்டு வரும் நிலையில் ஒரு இறை இல்லத்தில் இரண்டு இலட்சத்திர்கும் அதிகமான முஸ்லிம்கள் தொழுகைக்காக குழுமியது சீன…

Read More

மஹிந்தவை தோற்கடிப்போம் : சம்பிக்க

(நேர்காணல் : ஆர்.யசி) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சியை தக்கவைத்தோம். அதேபோல் இம்முறை பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியில் பலமான அரசாங்கத்தை அமைப்போம். நல்லாட்சியை தக்கவைத்து நாட்டில் ஜனநாயகத்தை பலப்படுத்துவதே எமது இலக்காகும். அதேபோல் மஹிந்த ராஜபக் ஷ இந்த நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்ட தலைவர். அவரை நம்பி மீண்டும் களத்தில் இறங்குவது முட்டாள் தனமான செயலாகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கேசரிக்கு…

Read More