Headlines

ஐ.தே.கட்சியுடன் இணைந்தார் சரத் பொன்சேகா

முன்னாள் இராணுவ தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சற்றுமுன்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இதன்பிரகாரம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கட்சி பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளார். சிறிகொத்தாவையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதமர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, ஜனநாயக கட்சியை களைக்கப்பட போவதில்லை எனவும் அவரது கட்சியில் இருந்தபடியே வேறொரு…

Read More

தவறு செய்தவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை!- பிரதமர்

தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும் அவர்களை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளைகோப் குழு முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றவாளியாக நிருபிக்கப்பட்டால்அவர் மீது சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தேசிய தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்றைய தினம் (29) வழங்கிய நேர் காணலிலே அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின்…

Read More

அனைத்து அபிவிருத்திகளையும் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் செய்தது!- பிரதமர்

ஐக்கிய தேசியக் கட்சி இல்லை என்றால், நாடு முன்னோக்கி செல்லாது எனவும் நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நடந்துள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே செய்தது. நாட்டை மேலும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமாயின் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியை சூழ இணைய வேண்டும் எனவும் பிரதமர் குறி்ப்பிட்டுள்ளார். இணையத்தளம் வழியாக…

Read More

அனர்த்த பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!

எதிர்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீண்டகால வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்துக்கு கடந்த 18 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாத வகையிலும்,…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

கொலன்னாவை வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.. இம் மக்களுக்காக உடன் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக 10ஆயிரம்ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேற்று (18)ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து பகிா்ந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிஙக நிதி அமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு . பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. இங்கு…

Read More

போர்ட் சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரம்!

கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை!

கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி…

Read More

பிரதமரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

லால் விஜயநாயக்க தலைமையிலான, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு, அதனது இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளித்துள்ளது. அறிக்கையை முழுமையாக வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

Read More

இலங்கையில் காலூன்றும் இஸ்ரேல்!

வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு பலத்த…

Read More

பிரதமர் ரணில் -ஐ.நா செயலர் சந்திப்பு

தென்கொரியாவில் இடம்பெற்ற, சர்வதேச ரோட்டரி கழகத்தின் 107ஆவது சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தென்கொரிய பிரதமர் க்வன் கியோங்கான் ஆகியோரையும், மாநாட்டில் பங்கேற்பதற்கு வந்திருந்த முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். (படங்கள்: பிரதமர் ஊடகப்பிரிவு)

Read More

மக்களின் யோசனைகள் பிரதமரிடம் நாளை கையளிப்பு

புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பது தொடர்பில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட யோசனைகள் அடங்கிய அறிக்கை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், நாளை செவ்வாய்க்கிழமை கையளிக்கப்படவுள்ளதாக, அவ்வறிக்கையைத் தயாரித்த குழு அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான பொதுமக்களின் யோசனைகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழு, கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல், பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள் ஆகியவற்றிடமிருந்து யோசனைகளையும் பரிந்துரைகளையும் சேகரித்து வந்தது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட்ட அறிக்கையே, நாளைய தினத்தில், பிரதமரிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழு தெரிவித்தது.

Read More

இலங்கையில் போலியோவை ஒழிக்க முடிந்தது எவ்வாறு? பிரதமர் உரை

இலங்கையில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை எனவும், இரண்டு தசாப்தங்களாகவே நாட்டில் போலியோ நோயாளிகள் பதிவாகவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் நாட்டில் போலியோவை ஒழிக்க முடிந்துள்ளதாகவும், இதற்கு ரொடரி அமைப்பின் உதவியே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 107வது ரொடரி இன்டநெசனல் மாநாட்டில் (Rotary International Convention) கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் இதன்போது மேலும் கூறியதாவது, 1995ம் ஆண்டு…

Read More