Headlines

ஜனாதிபதி தலைமையில் ஐ.தே.கவின் 70ம் ஆண்டு நிறைவு விழா

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழாவிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்க உள்ளார். எதிர்வரும் செப்டம்பர்மாதம் 10ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உறுப்பினர்களினால் இந்த நிகழ்வு நடத்தப்பட உள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வு நடைபெறவுள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் ஐக்கியதேசியக் கட்சியின் 69ம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தமை…

Read More

இந்தோனேசிய ஜனாதிபதி – பிரதமர் ரணில் சந்திப்பு

-ஆர்.ராம் – இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து சந்தித்தார். இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார், இந்தோனேசிய ஜனாதிபதியின் முதற்பெண்மணி, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர். இச் சந்திப்பின் போது, இலங்கையின் வர்த்தக பொருளாதார கலாசார துறைகளை…

Read More

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

– ஆர்.ராம் – பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய  தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது. இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க  ஆகியோர் பங்கேற்றுள்ளனர் அத்துடன் மலேசிய பிரதமர் நஜீப்…

Read More

பிரதமர் இன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம்

பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார். இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே அவரது இவ்விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo), நிதியமைச்சர் சிறி முல்ஜானி இந்திரவதி (Sri Mulyani Indrawati), கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட…

Read More

கள்வர்களுக்கு இடமளியேன்: பிரதமர்

-மொஹொமட் ஆஸிக் – கடந்த அரசாங்கத்தின் ஊழல் பேர்வழிகளின் கூக்குறலால் நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்திதி திட்டங்களை இடை நிறுத்த முடியாது என்றும், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஐந்துவருடங்களுக்கு பயணிக்கும், அதனை கவிழ்ப்பதற்கு கள்வர்களுக்கு இடமளிக்கமாட்டேன் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கண்டி செங்கடகல தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியக்கு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு, கண்டி குயின்ஸ் ஹோட்டலில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியில் எதனை…

Read More

புதிய கெசினோவுக்கு இலங்கையில் இடமில்லை – பிரதமர்

கெசினோ சூதாட்டக்காரர்களுக்கு இலங்கையில் இடமில்லை என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சிங்கபூர் வர்த்தகர்களை சிங்கப்பூரின் நெங்சிலா ஹோட்டலில் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்திப்பின் போது வர்த்தகர் ஒருவர் கடந்த காலங்களில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கெசினோ சூதாட்ட வர்த்தகர்களுக்கு இந்த ஆட்சியில்அனுமதி கிடைக்குமா? என பிரதமரிடம் கேட்டபோதே பிரதமர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு கெசினோ வியாபாரத்தை ஆரம்பிப்பது நல்லாட்சியின் கொள்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கை புதிய பாதையில் இணைந்துள்ளது: சிங்கப்பூர் ஜனாதிபதி

‘இலங்கை அரசாங்கமானது, மிகமுக்கியமான செயற்பாடுகள் பலவற்றை முன்வைத்து, புதிய பயணத்தில் இணைந்துள்ளது’ என்று சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டான் கெங் யாமே தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் இடையில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவைத்துள்ள புதிய பயணத்தில், பொருளாதார மற்றும் கைத்தொழில் துறைகளில் பாரிய அபிவிருத்திகள்…

Read More

இலங்­கை­யர்களின் ஆ­தரவு, துருக்கிக்கு – ரணில்

– எம்.ஆர்.எம்.வ­ஸீம் – துரு­க்­கியில் ஜன­நா­யக ஆட்­சியை பாது­காத்­துக்­கொள்­வ­தற்கு துருக்­கி ஜனா­தி­பதி மற்றும் பிர­­த­மர் உட்­பட அந்த நாட்டு அர­சாங்­கத்­­துக்கு முடி­யு­மா­கியது மகிழ்ச்­சி­ய­ளிக்­கி­றது என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­துள்­ளார். துருக்­கியில் இரா­ணுவ புரட்­சி­யொ­ன்றின் மூலம் அர­சாங்­கத்தை கைப்­பற்­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு இரா­ணுவம் வெள்ளிக்­கி­ழமை இர­வு அறி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் பொது மக்கள் ஒன்று திரண்டு இரா­ணுவத்தின் புரட்­சிக்­கு எதி­ராக செயற்­பட்டு இரா­ணுவ தாங்­கி­களை மறித்தும் கற்­களை வீசித்­தாக்­கியும் உள்­ளனர். இதனால் இரா­ணு­வத்­தி­னர் தங்கள் புரட்­சியை தொடர்ந்து கொண்­டு­செல்ல முடி­யாது…

Read More

பிரதமர் சிங்கபூரிற்கு சென்றார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) காலை சிங்கபூரிற்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். சிங்கபூரிற்கு சொந்தமான SQ 469  விமானத்தினூடாகவே குறித்த விஜயத்தை அவர் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தையில் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

பிரதமரின் சிங்கப்பூர் விஜயம் 17 இல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை மறுதினம்(17) சிங்கப்பூர் செல்லவுள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது பிரதமர் சிங்கப்பூர் ஜனாதிபதி டோனி டென் கெங் யெம் (Tony Tan Keng Yam), மற்றும் பிரதமர் லீ சியென் லுல் (Lee Hsien Loong) ஆகியோருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் சிங்கப்பூர் நகர மநாட்டு நிலையத்தில் நடைபெறும் மூன்றாவது தெற்காசிய புலம்பெயர்ந்தோர் மாநாட்டின்…

Read More

சீன வெளிவிவகார அமைச்சர்- பிரதமர் சந்திப்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Read More

நாட்டின் நலன் கருதி எவருடனும் இணையத் தயார்-பிரதமர்

நாட்டின் நலன் கருதி அரசாங்கம் எந்தக்கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக இருக்கிறது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை அதிகரிக்கும் நோக்கில் பதுளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோதே  இந்தக் கருத்தை வெளியிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது ஜே.வி.பி என்று எந்தக்கட்சி முன்வந்தாலும் அந்த கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராகவுள்ளது. மற்றவர்கள் அனைவரும் எதிர்ப்பை வெளியிடும்போது அரசாங்கம் மாத்திரமே திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை…

Read More