Headlines

பிரதமர் நியூசிலாந்தை சென்றடைந்தார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நியூசிலாந்தை சென்றடைந்துள்ளார். இலங்கைப் பிரதமர் ஒருவர், நியூசிலாந்திற்கு விஜயம் செய்வது, இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த பயணத்தின், பிரதமரின் மனைவி, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, பிரதியமைச்சர் ஹர்ஷ டீ சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

Read More

20ஆயிரம் மில்லியன் முதலீட்டில் டெக்னோ சிட்டி ஆரம்பம்

-அஷ்ரப் ஏ சமத் – ”டெக்னோ சிட்டி” (விஞ்ஞான தொழில்நுட்ப நகரம் ) நேற்று (22) கொழும்பு – ஹோமகமவில் பிரதம மந்திரியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான முதலாம் கட்டத்திற்காக 20ஆயிரம் மில்லியன் ரூபாய் முதலிடப்பட்டுள்ளது. மேல்மாகண மெகா பொலிசி அமைச்சா் சம்பிக்க ரணவக்கவும், விஞ்ஞான கைத்தொழில் ஆராய்ச்சி அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்த, உயா்கல்வி அமைச்சும் இணைந்தே இத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்காக தேசிய விஞ்ஞான நிலையம் 3ஆயிரம் மில்லியன் ருபா, ஆர் த சி…

Read More

அமெரிக்கா சென்ற ஐ.தே.க. உறுப்பினர்களின் அறிக்கையை கோரும் பிரதமர்!

ஐக்கிய தேசிய கட்சியின் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்ளாமல்அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றஉறுப்பினர்களின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். இவர்கள் வெளிநாடு செல்வதற்கு அனுமதி பெற்ற விதம் தொடர்பான அறிக்கையினையும்பிரதமர் பாராளுமன்ற அலுவலகத்திடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமெரிக்க சுற்றுலாவில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்களின் அவசியம் என்ன என்றும், அவர்கள் அமெரிக்காவில்முன்னெடுத்த அரசியல் விவகாரங்களையும் குறித்த அறிக்கையில் உள்ளடக்குமாறுபிரதமர் கோரியுள்ளார்.

Read More

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது. அதனை அடுத்து…

Read More

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பிரதமர்…

Read More

பிரதமர் நியூஸிலாந்துக்கு விஜயம்!

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார்.

Read More

அன்சார் விவகாரம்: பிரதமர் கண்டனம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து, மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Read More

பிரதமருக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்குமிடையில்; சந்திப்பு

அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நேற்று மாலை (31) பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது

Read More

பிரதமர் ரணில் அதிருப்தி!

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் இந்த அதிருப்தியை பிரதமர் வெளியிட்டுள்ளார். வருடாந்த பொலிஸ் தினத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சாகல ரட்நாயக்க, பிரதமரிடம் கலந்துரையாடியபோது ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பில் பாரிய பிரச்சினைகளை உணர்வதாக குறிப்பிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாட்டில் கொலை கொள்ளை மற்றும் குற்றச்செயல்கள் தொடர்வதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பம்பலப்பிட்டி வர்த்தகர் சுலைமானின் கொலையையும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்….

Read More

மஸ்கெலியாவில் பிரதமர் ரணில்

மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள்ளும் நிகழ்வு 28.08.2016 அன்று அட்டன் நகரில் இடம்பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க இதில் கலந்துகொண்டார். இந்த வைபவத்தை அம்பகமுவ பிரதேச சபை ஐ.தே.கவின் பிரதம அமைப்பாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே பியதாஸ ஏற்பாடு செய்திருந்தார்.  அட்டன் விஜிதா திரையரங்கு மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், இராஐhங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான…

Read More

சிங்கள மக்கள் இனவாதிகள் அல்ல: பிரதமர்

-க.கிஷாந்தன் – தமிழ், சிங்களம், முஸ்லீம் என மூவின மக்களும் இலங்கையில் ஒற்றுமையாக வாழும் ஒரே பிரதேசம் நுவரெலியா மாவட்டமாகும். இலங்கையில் உள்ள சிங்கள மக்களை இனவாதிகளாக வெளிநாட்டவர்கள் வர்ணித்து கேள்வி கேட்கின்றார்கள். ஆனால் இலங்கையில் ஒரு சில சிங்களவர்களே இனவாதிகளாவர். அனைத்து சிங்களவர்களும் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அட்டனில் தெரிவித்தார். மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையான அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளும் முகமாக ஐ.தே.கட்சியின் தலைவரும், நாட்டின் பிரதமமந்திரியுமான ரணில்…

Read More

அடிப்படை சம்பளத்தை 40ஆயிரமாக உயர்த்த திட்டம்!

தொழிலாளர்களின் ஆகக்குறைந்த அடிப்படைச் சம்பளம் 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் இன்று நடைபெற்ற தேசிய தொழிலாளர் சங்கத்தின் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தொழிலாளர்களின் ஆரம்ப அடிப்படைச் சம்பளத்தை 40 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொழில் கொள்வோருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றது. இதற்கு அனைவரும் தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்…

Read More