Headlines

ஐ.தே.க வை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமரிடம்

ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்க கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று  (25)முன்தினம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட செயற்குழுக் கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது. கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்கள், சங்கங்கள் மற்றும் கிளைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதேவேளை, மே தினக் கூட்ட ஏற்பாடுகள் குறித்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பிரதமர் இதன் போது…

Read More

உயர்நீதிமன்ற அழைப்பாணை குறித்து சபாநாயகரே தீர்ப்பு வழங்கவேண்டும்.!

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்யப்­பட்ட மனு­வொன்றின் கார­ண­மாக உயர் நீதி­மன்­றத்­தினால் தனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்துசபா­நா­ய­க­ரினால் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வான தீர்­மா­ன­மொன்றும் பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அந்த தீர்­மா­னத்தை நீதி­மன்­றத்தின் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­வது சிறப்­பு­ரிமை மீற­லா கும். ஆகவே சபா­நா­யகர் இம்­மனு தொடர்­பாக தீர்ப்­பொன்றை உயர் நீதி­மன்­றத்­திற்கு அறி­விக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்….

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் உயர் கல்வியைத் தொடர சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு முஸ்லிம் மகளிர் பாடசாலை பரிசளிப்பு விழாவில் நேற்று பங்கேற்ற போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தாத காரணத்தினால் மட்டும் உயர் கல்வியைத் தொடரக்கூடிய சந்தர்ப்பத்தை முடக்கிவிடக் கூடாது. சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் பின்னரும் அனைத்து மாணவ மாணவியரும் பாடசாலையில் தொடர்ந்தும்…

Read More

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஜயந்திக்கு பிரதமர் வாழ்த்து

எவரஸ்ட்டில் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜயந்தி குரு உடும்பலவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை, எவ்வித இடையூறுமின்றி அடைவதற்கு உதவிய, யெஹான் பீரிஸுக்கும், பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Read More

 ‘சண்டியர்களை போல சத்தம் போட முடியாது’

55 மில்லியன் ரூபாய்க்கான குறை நிரப்புத்தொகை தொடர்பிலான பிரேரணை, நேற்றைய ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து ஏற்பட்ட சலசலப்பின் பின்னர் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ‘சபையில் சத்தம் போட்டு, சண்டியர்களைப் போல செயற்பட முடியாது’ என்று கடுந்தொனியில் தெரிவித்தார். நாடாளுமன்றம் நேற்;று வியாழக்கிழமை காலை 10.30க்கு கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், சபை தினப்பணிகளுக்கு நகர்த்தப்பட்டது.

Read More

ஹெலியில் சென்று பிரதமர் பார்வை

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார். இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும்,…

Read More

பிரதமரை விட மஹிந்தவின் பாதுகாப்பு அதிகமானது!

பிரதமரின் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமானது வழங்கியுள்ளது. அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பகரமான கதைகளை பரப்பிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

பிர­தமர் தலை­மையில் இன்று விசேட கூட்டம்

தேசிய அர­சாங்­கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூல­மாக பரிந்­து­ரை­செய்­யப்­பட்ட தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­பள உயர்­வுக்கு தோட்ட நிர்­வா­கங்கள் மறுப்புத் தெரி­வித்­துள்ள நிலையில் இன்­றைய தினம் (12) பிர­தமர் தலை­மையில் சம்­பள விடயம் தொடர்பில் விசேட கலந்­து­ரை­யாடல் ஒன்றை நடத்தவுள்­ள­தாக தொழில் மற்றும் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன தெரி­வித்தார்.

Read More

பிரதமர் சிங்கப்பூர் பயணமானார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமானார். இன்று (5) காலை 7.25 மணியளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 302 என்ற விமானத்தில் சிங்கப்பூர் பயணமானதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

Read More

தமது புகைப்பட பேனர்கள் அகற்றுமாறு பிரதமர் உத்தரவு

தமது புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள், பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அனைத்து பேனர்கள், கட்அவுட்களையும் அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். மே தினமன்று பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாகைகள் பேனர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி ஆதரவாளர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது….

Read More

கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை : பிரதமர்

எங்களுக்காக அர்ப்பணித்த மக்களுக்களின் நலனுக்காக நான் என்னையே அர்ப்பணிக்க தயாராக உள்ளேன். முழு பாராளுமன்றத்தை அரசாங்கமாக மாற்றி எங்களுடைய வேலைகளை துரிதமாக முன்னெடுத்த பின்னர் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்போம். ஐக்கிய தேசியக் கட்சியை அழிப்பதற்கு கார்ட்போர்ட் துட்டகை முனுக்களுக்கு இடமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உலக மகா திருடர் உதயங்க வீரதுங்கவுடன் கை போட்டு ஒன்றாக விருந்து உண்ணும்  கார்ட் போர்ட் துட்டகை முனு, எதிரணியினர் விசேட நிதி குற்றப் புலனாய்விடம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்….

Read More