Headlines

ஜேர்மன் ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி

-ப.பன்னீர்செல்வம் – அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக ஜேர்மன் அரசாங்கம் ஒரு மில்லியன் யூரோவை நிதியுதவியாக வழங்கியுள்ளது. வௌ்ளம், மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவே ஜேர்மன் அரசு இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் டாக்டர். பிராங்வொல்டர் தெரிவித்திருப்பதாவது, ஜேர்மனியின் சிந்தனைகள் தமது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்காகவும், தமது வீடுகளை வாழ்வாதாரத்தை இழந்தவர்களுகாகவே இந்த நிதியுதவி எனத் தெரிவித்துள்ளார். இந்த நிதியுதவியானது இலங்கைக்கென சர்வதேச ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு இலங்கை அரசாங்கத்துடனும் இங்குள்ள…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…

Read More

பாதிக்கப்பட்டவர்கள் நஸ்டஈட்டைப் பெற உடன் பதிவு செய்யுங்கள்!

வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி குணதிலகவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஸ்டஈடுகளை வழங்க அரசாங்கத்தால் 1000 கோடி (10 பில்லியன்)…

Read More

பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வழங்கப்படும்

வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று (25) பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறினார்.

Read More

பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும்என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (25) சபையில் தெரிவித்தார். அனர்த்தத்தால் மரணமானவர்களின் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இச்சபையின் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளம், மண்சரிவு அனர்த்தம் தொடர்பான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை…

Read More

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – மஹிந்த

மரணித்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் அவர்களது குடும்பங்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. யுமான மஹிந்த ராஜபக்ச நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றநாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பிலான விசேட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றகையிலேயே மஹிந்த ராஜபக்ச எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 1958ல் நாட்டில்…

Read More

எதனை இழந்தாலும் கல்வியை இழக்க முடியாது – அமைச்சர் றிஷாத்

-சுஐப் எம்.காசிம் – “எதனை இழந்தாலும் நாம் கல்வியை இழக்க முடியாது. இழக்கவும் கூடாது. கல்விதான் எமது ஒரே ஒரு சொத்து” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மல்வானையில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச்  சென்று,  (22.05.2016) அவர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கிய அமைச்சர், மல்வானையைத் தளமாகக் கொண்டு, மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளித்து வரும் கல்வி முன்னேற்றச் சங்கத்துக்கும் சென்றார். அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார்  750…

Read More

ජාති භේද නැති රිෂාද් අමාත්‍යතූමා විහාරස්ථානයේ අවතැන්ව සිටින ජනතාවට සහනාධාර බෙදා දෙයි

– නිලුපුලී – ගංවතූරෙන් පීඩාවට පත්ව කොටිකාවත්ත විමලාරාම සහ නාගරැක්ඛාරාම යන විහාරස්ථානයන්හී සහ කොලොන්නාව විද්‍යාවර්ධන මහා විද්‍යාලයේ රැදී සිටින අවතැන්වූ සිංහල දමිල සහ මුස්ලිමි ජනතාවගේ සුව දුක් විමසීම සඳහා ඊයේ එනමි (මැයි 24) දින එහි ගිය රිෂාඩි බදියුදීන් අමාත්‍යතූමා විසින් ඔවුන්ට වියලි ආහාර සහ අත්‍යාවශ්‍ය ද්‍රව්‍ය ඇතූලත් පාර්සල් ලබා දෙන ලදි. මෙම අවස්ථාව සඳහා පළාත්…

Read More

இறைவன் நமக்கு தந்த, ஒரு வாய்ப்பாக இதனை கருதுவோம்…!

– ARM INAS – வெள்ளத்தால் பாதிக்கப்பட்வர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்து உதவி செய்கிறார்கள் மனிதநேயர்கள். குறைந்தது இரண்டு மாதங்களுக்குள்ளாவது பாதிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் போல் தெரிகிறது. இழப்புக்களுக்கான நஷ்டஈடுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகத்தான் உள்ளது. ஏதோ ஒரு வகையில் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.. நாம் அனர்த்தத்தின் போது வாழ்ந்தது போன்ற…

Read More

இன்னுமொரு பள்ளி அமைக்கப்பட்டால் முதன் முதலில் சீமெந்து வாங்கிக் கொடுப்பவன் நானே – வஜிர தேரர்

-சுஐப் எம்.காசிம் – கொலொன்னாவ பள்ளி சம்மேளனம் இன, மத வேறுபாடின்றி மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் இனவாதிகளுக்கும், மதவாதிகளுக்கும் பாரிய அடியாகும் என்று அபன்வள ஞானலோக ஹிமி, கொலொன்னாவ வஜிர ஹிமி ஆகியோர் இன்று தெரிவித்தனர். கொலொன்னாவ பள்ளி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று (25/05/2016) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்கள் கருத்து வெளியிட்டனர். பள்ளி சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஐ.வை.எம்.ஹனீப் தலைமையில் இடம்பெற்ற, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், உலமாக் காங்கிரசின்…

Read More

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை

சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில்,…

Read More