Headlines

வங்கக்கடலில் காற்றழுத்தம்! இலங்கைக்கு வெள்ள ஆபத்து

தெற்கு வங்கக்கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக, இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெள்ள ஆபத்து ஏற்படலாம் என்று காலநிலை தொடர்பான இணையத்தளம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே உருவாகியிருக்கும் இந்த காற்றழுத்தம், தீவிரம் பெற்று,  இலங்கை மற்றும் தென்னிந்தியாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இலங்கையிலும், தென்னிந்தியாவிலும், இந்த வார இறுதியில் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் வெள்ள ஆபத்து ஏற்படக்கூடும். இந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கை முழுவதும் கடும் மழை மற்றும் சூறாவளிக் காற்றின்…

Read More

மொனராகலையில் குளமொன்று உடைப்பெடுத்தது! பொதுமக்கள் அவசரகதியில் வெளியேற்றம்

மொனராகலையில் கடும் மழை காரணமாக குளமொன்று உடைப்பெடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அப்பிரதேசத்திலிருந்து அவசர கதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழைகாரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மொனராகலை மாவட்டமும் ஒன்றாகும். கடும் மழைகாரணமாக இங்குள்ள குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இம்மாவட்டத்தில் உள்ள மடுல்லை பிரதேசத்தை அண்மித்த உடுமுல்லை கிராமத்தின் அருகில் அமைந்திருந்த குளத்தின் அணைக்கட்டு நேற்றிரவு உடைப்பெடுத்துள்ளது. அதனை அண்டிய பிரதேசங்கள் எங்கும் தற்போது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு…

Read More

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

– எம்.எம்.ஜபீர் – அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும்…

Read More