Headlines

கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக  தெரிவித்தார் . உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்தார். , அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாநகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில்…

Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

-ஊடகப்பிரிவு- ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கமைய பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு சதொச லொறிகள் மூலம் ஆரம்பித்துள்ள நடமாடும் விற்பனை நிலையங்களை, இன்று (18) வட மாகாணத்தின் பல பிரதேசங்களில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார். வவுனியாவில் இடம்பெற்ற இந்நிகழ்வின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வௌ்ளைப் பச்சை அரசியை…

Read More

“மக்கள் காங்கிரஸ் கொழும்பில் தனது பலத்தை நிரூபிக்கும்” மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்..

-ஊடகப்பிரிவு- கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபை, கொலொன்னாவை பிரதேச சபை, கொட்டிகஹவத்த – முல்லேரியா பிரதேச சபை ஆகியவற்றில், மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது. மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் தலைமையில், குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார். கட்டுப்பணம் செலுத்தியதன் பின்னர் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்…

Read More

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்திலேயே களமிறங்குகின்றது!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துக் களமிறங்குவதற்கான கட்டுப்பணத்தை இன்று மாலை (18) செலுத்தியது. வடமேல் மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கட்சியின் முக்கியஸ்தருமான எம்.என்.நசீர் தலைமையில், மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன்போது, குருநாகல் மாநகர சபை தலைமை வேட்பாளர் அசார்தீன் மொய்னுதீன், குளியாப்பிட்டிய பிரதேச…

Read More

மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் மக்கள் காங்கிரஸ் யானை சின்னத்தில் போட்டி!

  -ஊடகப்பிரிவு –   வன்னி தேர்தல் மாவட்டத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலாளர் கபீர் ஹாஷிம் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில், யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரசபை,…

Read More

கண்டியில் மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டி!

-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை ஆகியவற்றிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை இன்று (18) செலுத்தியது. கம்பளை நகரசபை, பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றிலும் தனித்துக் களமிறங்கும் மக்கள் காங்கிரஸ், நாளை கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி…

Read More

ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள, தமிழ் முக்கியஸ்தர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பு செயலாளர்களான ஆனந்த, பொறியியலாளர் கிருஷ்ணா மற்றும் கணக்காளர் நடராஜா உட்பட பெருமளவிலானவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில், ஜமாலியா பிரதேசத்தில் நேற்று மாலை (17) இடம்பெற்ற கூட்டத்தின் போதே, இவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். எதிர்வரும் காலங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து, மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரத்தினை பலப்படுத்துவதற்கு தாம்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 நடைபெறும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி (2018) நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

Read More

‘கிழக்கு அரசியலில் புதிய திருப்பங்கள் ஏற்படும்’ மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட தோப்பூர் பிரமுகர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- தோப்பூர் பிரதேசத்தின் பிரபல சமூக சேவகரும், கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் (RDS) தலைவருமான ஏ.எஸ்.ரிபாஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். கட்சியின் மத்திய குழுத் தலைவர் அப்துல் ரசாக் (நளீமி) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே, அவர் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். காலாகாலமாக எமது பிரதேசவாழ் மக்கள் பல்வேறு கட்சிகளுக்கு வாக்களித்து வந்தபோதும், இந்தப் பிரதேசத்தில் எந்தவிதமான அபிவிருத்தியும் இதுவரை இடம்பெறவில்லை. கிழக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அரசியலில்…

Read More

தேர்தல் தினம் 21 அறிவிக்கப்படும்!

மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Read More

குறிஞ்சாக்கேணி பாலர் பாடசாலைகளின் கலை,கலாசார நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- குறிஞ்சாக்கேணி, முனைச்சேனை மூன்று முன்பள்ளி பாலர் பாடசாலைகள் இணைந்து நடாத்திய வருடாந்த கலை கலாசார நிகழ்வு குறிஞ்சாக்கேணி வீ.சீ மைதானத்தில் சனிக்கிழமை (16) அன்று இடம்பெற்றது. முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அதிதிகளாக கிண்ணியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எம்.முஜீப், ஆசிரியர் என்.எம். சமீம்(ECCD), அரபா பாடசாலை அதிபர் ஆர்.நஸீம்…

Read More

அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களுக்கான வீட்டுக்கடன் வழங்கிவைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளரும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகருமான அசார்தீனின் தலைமையில், அரச உத்தியோகத் துறையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தோருக்கு, வீட்டுக்கடன் வழங்கி வைக்கப்பட்டது. குருநாகல் மாவட்ட காரியாலத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முதற்கட்டமாக ஒரு குழுவினருக்கு இந்தக் கடன் தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More