Headlines

அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின் பணிமனை அங்குரார்ப்பணம்!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனை ஒன்றை அக்கட்சியின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், தூய காங்கிரஸின் பிரமுகருமான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் உட்பட மக்கள் காங்கிரஸின்…

Read More

“சமுதாயத்தின் தேவைக்காகவே கட்சிகள் செயற்பட வேண்டும்” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்…

  –எம்.ஏ.றமீஸ்–  கட்சிகள் சமுதாயத்தின் தேவையாக இருந்து செயற்பட வேண்டுமே தவிர கட்சியின் தேவைக்காகவும், கட்சித் தலைமைத்துவத்தின் தேவைக்காகவும் சமுதாயம் பயன்படுத்தப்படக் கூடாது என வர்த்தக கைத்தொழில் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று (14)  மாலை அக்கரைப்பற்று டி.எப்.சி வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்….

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டின் கீழ்,  சியம்பலாகஸ்கொடுவ ஜும்ஆ பள்ளிவாசலில், மலசல கூட புதிய கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான பணிகள் நேற்று முன்தினம் (12) ஆராம்பித்து வைக்கப்பட்டது. முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில், முன்னாள் குளியாப்பிடிய பிரதேச சபை உறுப்பினர் இர்பான் மற்றும் அப்துல் கையூம் ஆகியோரின் பங்களிப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தக் கட்டிடப் பணிக்காக, சுமாார் 17,00…

Read More

தூய காங்கிரஸ் அணியினர், தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இணைவு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஆகியன இணைந்து உருவாக்கிய ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான மௌலவி ஹனீபா மதனி தலைமையில், முஸ்லிம் காங்கிரஸின் உச்சபீட உறுப்பினர் ஆதம்லெப்பை மர்ஜூன் உள்ளிட்ட, தூய காங்கிரஸ் அணியினர் மற்றும் தேசிய காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்களும் கூட்டமைப்பில் இணைந்து கொண்டனர். இன்று மாலை (14)  அக்கரைப்பற்று டி.எப்.சி (TFC) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில்,…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான நியமனப் பத்திரங்களை, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று (14) தாக்கல் செய்தது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மககள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார்.    

Read More

மு.கா முக்கியஸ்தர்களான ஹனீபா மதனி, ஏ.எல்.மர்ஜூன் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், மு.காவின் அக்கரைப்பற்று அமைப்பாளருமான மௌலவி ஹனீபா மதனி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஏ.எல்.மர்ஜூன் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டனர். இன்று காலை (14) அம்பாறை நகரில் இந்த முக்கியஸ்தர்கள் இருவரும் இணைந்துகொண்டதுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில், மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றமையும்…

Read More

கொழும்பு மாநகர சபை வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் கொழும்பு மாநகர சபைக்கு, நிவ் பசார்  பிரிவில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான இறுதிக் கலந்துரையாடல்  நேற்று (13)  மக்கள் காங்கிரஸ்  தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது. மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.    

Read More

திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வேட்புமனுவை இன்று காலை  (14)  கிண்ணியாவிலுள்ள, மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில், மக்கள்  காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இறுதி செய்தனர்.

Read More

‘அகில இலங்கை மக்கள் காங்கிரஸை ஆதரியுங்கள். உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி…

-முர்ஷித்- நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தும் வேட்பாளரை அதிக வாக்கினை அளித்து வெற்றிபெறச் செய்யுங்கள். அதனூடாக உங்கள் பிரதேசம் அபிவிருத்தி அடையும் என்று மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமானஎம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பாடசாலையின் 22 வது ஆண்டு நிறைவும், மாணவர் வெளியேற்று நிகழ்வும் நேற்று முன்தினம் (11) வாழைச்சேனை அந்/நூர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு…

Read More

வவுனியா மதீனா நகர் அல்/அக்ஸா முன்பள்ளி கலைவிழா!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மதீனா நகர், அல் / அக்ஸா சிறுவர் முன்பள்ளியின் 2017ம் ஆண்டுக்கான கலைவிழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று (12) இடம்பெற்றது. இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.எஸ். அப்துல் பாரி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியதுடன், மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.        

Read More

முள்ளிப்பொத்தானை மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- முள்ளிப்பொத்தானை பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்கள், நேற்று முன்தினம் (11) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் தலைமையில், கட்சி போராளிகளின் பங்குபற்றுதலோடு, முன்னாள் மு.கா போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரபின் காலத்திலிருந்து இற்றைவரை முள்ளிப்பொத்தானை பிரதேசத்தில், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதில்…

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான அறிவித்தல்!

-ஊடகப்பிரிவு- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில், இது வரை கட்சித் தலைமை எந்த இறுதியான முடிவையும் மேற்கொள்ளவில்லை. வேட்பாளர் தெரிவு இன்னும் நிறைவு பெறவும் இல்லை. இந்த சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடாத்தப்பட்டு, இறுதி முடிவு மேற்கொள்ளப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Read More