Headlines

கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான ஏ.ஜே.எம்.பாயிஸின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை வேட்பாளர் முஹம்மத் நிலாரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு 15 மாதம்பிட்டிய வீதி புனரமைப்புப் பணிகள் நேற்று முன்தினம் (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிம்புலாஎல்ல வீட்டுத் தொகுதியின் எப் (F) வலையத்திலிருந்து இலக்கம் 162/265/A/1 தொடக்கம் 162/11 வரையான வீதியின் புனரமைப்புப் பணிகளே ஆரம்பித்துவைக்கப்பட்டமை…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல அரபுக்கல்லூரியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் திவுரும்பொல, ஜாமியா மனாருல் ஹுதா அரபுக்கல்லூரியின்  மேல்மாடிக் கட்டிட அபிவிருத்திப் பணிகள் நேற்று முன்தினம் (16) முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. திவுரும்பொல மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அப்துல்லாஹ்வின் வேண்டுகோளுக்கிணங்க, அபிவிருத்திப் பணிகளுக்காக சுமாார் இருபது இலட்சம் ரூபா நிதி, அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் குளியாப்பிடிய பிரதேச…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி முன்னிலையில் முன்னாள் தவிசாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில், ஓட்டமாவடி 208 B/2 வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) பிரதி அமைச்சரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஒட்டமாவடி 208 B/2 வேட்பாளரான எச்.எம்.ஏ.கபூர் ஹாஜியார் மற்றும் மீராவோடை கிழக்கு வட்டார வேட்பாளரான முன்னாள் தவிசாளர் ஹமீட் ஆகியோர், பிரதி அமைச்சர் அமீர் அலியின் முன்னிலையில் வேட்புமனு பத்திரத்தில் கையொப்பமிட்டனர்.        

Read More

திருகோணமலை நகரசபை வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை நகர சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் இன்று மாலை (17) இடம்பெற்றது. மூவின மக்களின் ஒத்துழைப்புடன், ஜமாலியா பிரதேசத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வேட்பாளர் தெரிவு மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.            

Read More

மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் திறப்புவிழா!

-ஊடகப்பிரிவு- அல்/புர்கான் நலன்புரி அமைப்பின் முயற்சியினால் மன்னார், மூர்வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல் திறப்புவிழா நேற்று (16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், ஊர்ப்பிரமுகர்கள் மற்றும் பிரதேசவாசிகளை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.      

Read More

வேட்பாளர் தெரிவு தொடர்பான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தெரிவு மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று மாலை (16) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், மன்னார் மூர்வீதியில் அமைந்துள்ள காரியாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றனர்.              

Read More

“உண்மையும், நேர்மையும் இருப்பதனாலேயே மக்கள் எம்பக்கம் அணிதிரள்கின்றனர்” அக்கரைப்பற்றில் அமைச்சர் ரிஷாட்…

-ஊடகப்பிரிவு- உண்மையும், நேர்மையும் எங்கள் பக்கம் இருப்பதனாலேயே மக்கள் எம்மை நோக்கி அணிதிரண்டு வருகின்றனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை முஸ்லிம் அரசியலில் நாங்கள் பாரியதொரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், மக்கள் பணிமனைத் திறப்புவிழா நிகழ்வு, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அக்கரைப்பற்று பிரதேச சபையின் தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளருமான என்.டி.நியாஸ்…

Read More

வட்டாரக்குழு உறுப்பினர்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச சபை தேர்தல் தொடர்பாக வட்டாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை (15) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் தவிசாளர் ஹமீட், பிரதி தவிசாளர் நெளபல் மற்றும் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.    

Read More

ஹஸன் அலி – ரிஷாட் கூட்டணியும், முஸ்லிம் அரசியல் பலமும்!

எம்.எச்.எம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட கிழக்கு முஸ்லிம் அரசியல் பலத்தின் புதிய பரிமானம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலளார் ஹஸன் அலி மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடனான கூட்டணியாகும். இன்று கிழக்கு (அம்பாறை) முஸ்லிம் அரசியல் பலத்தின் பிரதான சக்தியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் அத்தாவுல்லாவின் தேசிய காங்கிரஸூம் திகழ்கின்றன. அஷ்ரப்பினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் அரசியல் எழுச்சிக்கான கீதம் முஸ்லிம் காங்கிரஸ் ஆகும். எனினும் கண்டி ரவூப் ஹக்கீம், அம்பாறை ” இடையே…

Read More

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

எம்.எஸ்.எம்.நூர்தீன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG)  ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் மீராகேணி வட்டாரத்தில் போட்டியிடும் முகம்மட் அமீர் என்பவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். மக்கள் காங்கிரஸின் ஏறாவூர் அமைப்பாளர் லத்தீப் ஹாஜியார் முன்னிலையில் இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்றிரவு (15) இணைந்து கொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்ட அமீர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு தான்,…

Read More

மு.கா அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயம் மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றம்.. ஹனீபா மதனி அறிவிப்பு!

  -ஊடகப்பிரிவு-    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரியாலயமாக மாற்றப்பட்டுள்ளதாக, முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உச்சபீட உறுப்பினரும், முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்துகொண்டவருமான மௌலவி ஹனீபா மதனி தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று பிராந்தியக் காரியாலயத்தை, மக்கள் காங்கிரஸின் பிராந்தியமாக மாற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) இடம்பெற்றபோது, பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார். இந்த…

Read More

வட்டமடு விவசாயிகளுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட, வட்டமடு காணியில் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் நேற்று மாலை (14) சந்தித்துக் கலந்துரையாடினர்.                  

Read More