Headlines

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; புத்தளம் அபிவிருத்தி தொடர்ச்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில்;  குவைட் வைத்தியசாலை, 1km காப்பட் வீதியாக புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது.

Read More

ශී‍්‍ර ලංකාවේ ජාතික ආරක්ෂාව අතිශයින්   ශක්තිමත් ජනපති ජපානයේදී කියයි

– නිලුපුලී – ශී‍්‍ර ලංකාවේ ජාතික ආරක්ෂාව  කිසිදු අයුරකින් දුර්වල වී නොමැති බවත් එය අතිශයින් ශක්තිමත් බවත් පසුගියදා (27) ජපානයේ වෙසෙන ශී‍්‍ර ලාංකිකයන් සමග  නගෝයා නගරයේදී පැවැත්වුණු හමුවේදී ජනාධිපතිතුමා   අවධාරණය කළේය. පටු සහ අවස්ථාවාදී දේශපාලන බලවේගයන් විසින් සිදුකරන ව්‍යාජ  ප්‍රචාරවලට නතු නොවන  ලෙස මෙහිදී එම ජනතාවගෙන් ඉල්ලා සිටි ජනාධිපතිතුමා  තම උපන් දේශය දෙස සුබවාදී ආකල්ප…

Read More

ஈரான் மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதத்தில் உருவாகிறது அரபு லீக்கின் புதிய இராணுவம்

அரபு நாடுகள் இடையே ஒருங்கிணைந்த ஒரு இராணுவம் உருவாக்க பட வேண்டும் என்பது அப்பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நீண்ட நாள் கனவாகும் முஸ்லிம்களின் இந்த கோரிக்கை நியாயமானது என்பதை அண்மையில் சவுதி மன்னர் சல்மான் தமது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்ததோடு அரபு லீக்கின் பொறுப்பில் உள்ளவர்கள் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தார் இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு எகிப்தின் ஷரம்சேக் நகரில் நடைபெற்ற அரபுலீக்கின் 26 வது உச்சி மாநாட்டில் அரபு நாடுகளிடையே ஒருங்கிணைந்த…

Read More

முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள் முஸ்லிம் சகோதரிக்கு மூன்று பிரசவம், 7 குழந்தைகள்

முதல் இரண்டு பிரசவங்களின்போதும் இரட்டை சிசுக்களை பெற்ற பெண்ணொருவர் தனது மூன்றாவது பிரசவத்தில் மூன்று சிசுக்களை பிரசவித்த விநோத சம்பவம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு, மரதானையை சேர்ந்த பாத்திமா நிரோஷா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு தனது முன்றாவது பிரசவத்தின்போது 3 ஆண் சிசுக்களை பெற்றுள்ளார். இப்பெண் ஏற்கனவே முதலாவது பிரசவத்தில் இரட்டை சிசுக்களை பிரசவித்துள்ளதுடன் இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை சிசுக்களை பெற்றார். இந்நிலையிலே மூன்றாவது பிரசவத்திலும் அவர் மூன்று சிசுக்களை பிரசவித்துள்ளார். சொய்சா பிரசவ…

Read More

கொழும்பில் விமான விபத்து (படங்கள் இணைப்பு)

கொழும்பின் புறநகர்ப் பகுதியான அத்துருகிரிய ஹோகந்தரவில் விமானமொன்று இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.  அன்ரனோவ் 32 ரக விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விமான விபத்து காரணமாக இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. 6.20 மணியளவில் ஹோகந்தர கத்தரீன் பார்க் பகுதியில் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விமானத்தில் நால்வர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தற்போது பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை…

Read More

மூடிக்கிடக்கும் வடக்கு, கிழக்கு தொழிற்சாலைகளை மீளகட்டியெழுப்ப துரித திட்டம் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு

யுத்த காலத்தில் செயலிழந்து போன வடக்கு கிழக்கிலுள்ள கைத்தொழிற்சாலைகளை வெளிநாட்டு உதவியுடன் மீளக்கட்டியெழுப்பி மீண்டும் அவற்றை இயங்கச்செய்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாந்தை சோல்ட் லிமிடட்டின் புதிய நிர்வாக கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும்,  அந்த நிறுவனத்தின் அரச சுற்றுலா விடுதி திறப்பு விழாவும், நேற்று ஞாயிற்றுகிழமை (27.08.2017) அந்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போதே, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர்…

Read More

மு.கா.வின் மூத்தபோராளிகள் பலர் அ.இ.ம.கா.வில் இணைவு

கல்முனை 03 பிரதேசத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்தபோராளிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்கள் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வளர்ச்சிக்காக அமைச்சர் றிஷாத்அவர்களுடன் தாம் இணைந்து செயற்படபோவதாக தெரிவித்தனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி யும் கலந்து கொண்டார். கல்முனை 3 ல் அமைச்சரின் தனிப்பட்ட நிதியின் ஊடாக தையல் பயிற்சி நிலையத்தை ஆரம்பித்து வைத்த வைபவத்தின்போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற…

Read More

“இறைவனின் அருள்பாலிப்பில் அபிலாஷைகள் நிறைவேறட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

அச்சம் நிறைந்த கடினமான சூழலில், நாளை (12) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் எழுதவிருந்த இப்பரீட்சை, இப்படியான சுகாதாரக் கெடுபிடிகள் நிலவும் காலத்தில் நடைபெறுகிறது. கொரோனாவின் பீதி நீங்கி, சுதந்திர மனநிலையில் மாணவர்கள் பரீட்சை எழுத வேண்டும் என்பதற்காகவே, ஒக்டோபர் வரை பின்போடப்பட்டது. எனினும், பயம் நிறைந்த சூழலிலே எமது…

Read More

17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்

இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை,  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் மாதிரிக்கிரமத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை மஜ்மா கிராமத்தில் செமட்ட செவன மாதிரிக் கிராம வேலைத் திட்டத்தில் ஐம்பது வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. ஓட்டமாவடி பதில் பிரதேச செயலாளர் திருமதி.எஸ்.சில்மியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், கிராம சேவை அதிகாரிகள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More

ஜாகிர் நாயக் விவகாரம் – மோடிக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில், கடந்த வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட பலர் பலியானார்கள். இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவன் இஸ்லாமிய பிரச்சாரகர் ஜாகிர் நாயக் பேச்சில் தான் கவரப்பட்டதாகக் கூறியுள்ளான் எனக்கூறி ஜாகிர் நாயக் தீவிரவாதத்தைத் தூண்டுவதாக அவர் மீது மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. மத்திய அமைச்சர் வெங்கைய்யா நாயுடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாகிர் நாயக் குறித்து அனைத்து விவரங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது…

Read More