Islam
அல்லாஹ்வின் அருள் வளம்
– ஜெஸிலா பானு – அல்லாஹ்வின் அருள் கொண்ட வளம் பொருந்திய குழந்தையை எடுத்து வந்திருப்பதாக ஹலீமாவும் அவருடைய கணவரும் நம்பினார்கள். தாய் ஆமினா மற்றும் தாத்தா அப்துல் முத்தலிபிடமிருந்து குழந்தை முஹம்மது (ஸல்) அவர்களை, செவிலித்தாய் ஹலீமா பெற்றுக் கொண்டார். கிராமத்திலிருந்து வந்தவர்கள் அன்றிரவு நகரத்தில் தங்கி மறுநாள் காலையில் அவர்களின் ஊருக்குத் திரும்புவதாக இருந்தனர். குழந்தையை எடுத்து ஹலீமா அவருடைய மடியில் கிடத்தியதும் அவருடைய மார்புகளில் பால் சுரந்தது. அவராலேயே நம்ப முடியாத அளவுக்கு…
இலங்கை வரும் அப்துல் பாஸித் மௌலவி
-ஏ.பி.எம்.அஸ்ஹர்- சர்வதேச இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும் தென் இந்திய பிரபல அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி இலங்கை வருகிறார். ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவினால் எதிர் வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவே இவர் இலங்கை வருகிறார். இம்மாநாடு எதிர் வரும் சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நடை பெறவுள்ளது. இதே வேளை எதிர்…
இஸ்லாமிய முறையில் உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது: சோதனை மூலம் நிரூபனம்!
உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர். ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை…
ஜக்கரிய்யா (அலை) அவர்களின் பிரார்த்தனையும் ஏக இறைவனின் அருளும்
நபி ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தன்னுடைய திருப்பணியைத் தொடர்வதற்குத் தனக்கு ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்பினார்கள் ஜக்கரிய்யா (அலை). அல்லாஹ்விடம் சிரம் தாழ்த்தி, தாழ்ந்த குரலில் மிக உருக்கமாக அழுது வாரிசு வேண்டி பிரார்த்தித்தார்கள். “அல்லாஹ்! மனதால் உறுதியுடன் இருக்கும் எனக்கு, தலைமுடிகள் நரைத்துவிட்டன, எனது எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன. மனதில் இருக்கும் தெம்பு உடலில் இல்லை. எனக்குப் பின்னர் என் உறவினர்கள் வழி்கெட்டு விடுவார்களோவென்று நான் அஞ்சுகிறேன். நான் செய்து கொண்டிருக்கும்…
எட்டு விதமான சொர்க்கங்கள் யார் யாருக்கென்று தெரியுமா
முதலாவது சொர்க்கம் – ஜன்னத்துல் பிர்தௌஸ் 1) போதும் என்ற மனம் கொண்டவர்கள். 2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள். 3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள். 4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள். இரண்டாவது சொர்க்கம் – தாருஸ் ஸலாம் 1) அனாதைகளை ஆதரிப்பவர்கள். 2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள். 3) ஸலாம் சொல்பவர்கள். 4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள். மூன்றாவது சொர்க்கம் – ஜன்னத் அத்னு 1) பேச்சை குறைப்பவர்கள். 2) தூக்கத்தை…
செலவு செய்பவன் ஒரு போதும் ஏழையாவதில்லை
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் -அல்மதத் யா றஸுலல்லாஹ்- நபீ முஹம்மத் (ஸல்) அவர்களின் வீட்டாரைச் சார்ந்தவர்கள் இமாமுனா ஜஃபர் அஸ்ஸாதிக் றழி அவர்கள் நபி ஸல் அவர்களின் குடும்பத்தாரை நேசிப்பது ஒவ்வொரு முஃமின் மீதும் கடமை ஆகும். இது அல்குர்ஆனின் ஆணையாகும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான். قل لا أسئلكم عليه أجرا إلا المودة فى القربي நபீயே! நீங்கள் கூறுவீராக. உறவினர்களில் அன்பு வைப்பதைத் தவிர வேறு எந்த ஒரு கூலியையும்…
நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள்
நபி ஸல் அவர்கள் மதினாவிற்கு வந்தவுடன் இஸ்லாத்தை ஏற்க வந்த முதல் யூதத் தலைவர் கேட்ட கேள்விகள் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு அனஸ்(லரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். ”தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே…
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ?
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தது. இவர் இஸ்லாத்தை ஏற்றது…
பரிசுப் பொருட்களில் மயங்காத சுலைமான் (அலை)
அரசி பல்கீஸின் ஆணையின்படி, சுலைமான் (அலை) அவர்களுக்கு விலை மதிப்புள்ள பல பொருட்களை எடுத்துக் கொண்டு சுலைமான் (அலை) அவர்களின் நாட்டிற்கு வரவிருப்பதை ஹுத்ஹுத் பறவை சுலைமான் (அலை) அவர்களுக்குத் தெரிவித்தது. உடனே சுலைமான் (அலை), அரசி பல்கீஸின் பிரமுகர்கள் வருவதற்கு முன்பாக, அவர்கள் வந்து இறங்கவிருக்கும் இடத்தைச் சுத்தமாக்கி அலங்கரித்து மிக அழகான இடமாக மாற்ற உத்தரவிட்டார்கள். அரசி பல்கீஸின் பிரமுகர்கள் பரிசுப் பொருட்களுடன் சுலைமான் நபியைக் காண வந்தார்கள். அந்த இடத்தைப் பார்த்து அசந்து…
வலதுபுறம் உறங்கி வயதைக் கூட்டுங்கள்!
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்பற்றிய சுகாதாரம் குறித்துள்ள ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. அவை இன்றைய நவீன அறிவியலோடு ஒத்துப்போகின்றன. அவ்வாறு ஹதீஸ்கள் பலவற்றை எடுத்து சிகிச்சையின்போது கடைப்பிடிக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவு உறங்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த முறையில் உறங்கினார்கள், அந்த முறை குறித்து இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடிப்புகள் கூறுவது என்னவென்பதைக் காண்போம். மல்லாக்க, குப்புற, இடது, வலது ஒருக்களித்து பல நிலைகளில் மனிதர்கள் உறங்குகின்றனர்….
