Headlines

மரம் கைது!

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது. பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து,…

Read More

ஒபாமாவின் மனைவியை கவிதையால் நெகிழவைத்த தமிழ்ப் பெண்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது உணர்ச்சிகரமான தமிழ் கவிதையால் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியை நெகிழவைத்த தமிழ்ப் பெண்ணுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. சிறுவர், சிறுமியர் இடையே கவிதை இயற்றும் ஆற்றலை ஊக்குவிக்க அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கவிதை வாசித்தல் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சியில் பலர் தாங்கள் எழுதிய கவிதைகளை வாசித்தனர். சென்னையில் இருந்து சென்று அமெரிக்காவில்…

Read More

விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் – டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை விட விளாடிமிர் புடினே சிறந்த தலைவர் என குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும்…

Read More

சுதந்திர தின விழாவில் பிரேசில் அதிபருக்கு எதிராக கூச்சல்

பிரேசில் அதிபராக இருந்த டில்மா ரூசோப் ஊழல் புகார் காரணமாக பாராளுமன்றத்தின் மூலம் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மைக்கேல் டெமர் புதிய அதிபராக கடந்த வாரம் பதவியேற்றார். இந்த நிலையில் பிரேசில் சுதந்திர தினவிழா நேற்று தலைநகர் பிரேசிலியாவில் நடந்தது. அதையொட்டி ராணுவ அணிவகுப்பு மரியாதை நடந்தது. விழாவில் பங்கேற்ற அதிபர் மைக்கேல் டெமர் திறந்த ஜீப்பில் ஏறி அணி வகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மைக்கேல் டெமரின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக ‘ஓ’ வென…

Read More

உயர்ஸ்தானிகரை தாக்கியவர்களுக்கு விளக்கமறியல்

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த…

Read More

மொசம்பிக் நாட்டின் நட்சத்திர பாடகர், இஸ்லாத்தில் இணைந்தார்

மொசம்பிக் நாட்டின் பிரபல நட்சதிர பாடகர் அர்சீன் அண்மையில் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்தனது பெயரையும் யாசீன் என்று மாற்றி கொண்டார் தற்போது ஹஜ் செய்ய வந்திருக்கும் அவர் தான் இஸ்லாத்தை ஏற்று கொண்டது பற்றி குறிப்பிடும் போது, தன்னிடம் ஆரம்பத்தில் இஸ்லாத்தை பற்றி நல்ல எண்ணம் இருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சொல்வது போல் இஸ்லாம் தீவிரவாதத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சித்தந்தம் என்றே தாம் எண்ணியதாக கூறிய அவர் ஒரு நாள் கஃபாவை தனது கனவில்…

Read More

சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா

வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முன்னதாக அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் சீனாவைப் பற்றிய தனது கண்ணோட்டத்தை ஒபாமா பதிவு செய்துள்ளார். சர்வதேச சட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் நாம் கட்டுப்படுகிறோம் என்றால், அது நிர்பந்தத்தினால் அல்ல. ஆனால், சர்வதேச ஒழுங்குமுறையை நாம் ஏற்றுக் கொள்கிறோன்…

Read More

நூலகத்தில் புத்தகத்தை திருப்பி தராவிட்டால் ஜெயில் தண்டனை

நூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது. அமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை. சுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது. அமெரிக்காவை பொறுத்தவரை நாடு…

Read More

2050ல் பூமியில் பாதி காணாமல் போய்விடும்

-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – இப்போது உள்ள உயிரியல் சூழல் தொடர்ந்து வந்தால் 2050க்குள் பாதி உயிரினங்கள் பூமியிலிருந்து அழிந்து போய் விடும் என்று சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் நாம் 80 சதவீத எரிபொருள் சேவையை புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் மூலத்திற்கு மாற்றி விட வேண்டும். இப்போதிருந்தே இயற்கையைக் காக்கும் வேலையைத் தொடங்கி விட வேண்டும். அப்போதுதான் பூமி தப்பும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். இன்னும் 33 வருடங்களில் பூமியிலிருந்து 8 லட்சம் உயிரினங்கள்…

Read More

வடகொரியா உடன் அதிகப்படியான பதற்றத்தை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும்

கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய நாடான வடகொரியா, கடந்த 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சக்திவாய்ந்த அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுஆயுதங்களை நீண்டதூரம் சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணைகள் ஆகியவற்றை வடகொரியா அவ்வப்போது பரிசோதித்து வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா.வும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் பல்வேறு…

Read More

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டின் அதிபர் க்சி ஜின்பிங்-ஐ இன்று சந்தித்தார். இந்தியா – சீனா நாடுகளுக்கிடையிலான உறவுகளில் நீடிக்கும் சிக்கல் தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தினார்.

Read More

பூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்

பூமிக்கு மிக நெருக்கமாக ராட்சத விண்கல் ஒன்று நெருங்கி வந்து கொண்டிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் இதுவரை  விஞ்ஞானிகளின் ஆய்வு எல்லைக்குள் தென்படவில்லை எனவும், தற்போது திடீரென்று பூமிக்கு மிக அருகில் வந்து கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வழக்கத்துக்கு மாறாக பூமியை நெருங்கி செல்லவுள்ள இந்த விண்கல் ஆனது 35 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றது. இந்த விண்கல்லினால் பூமியிலிருப்பவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றாலும், பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தின் கால் மடங்கு தூரத்தில் பூமியிலிருந்து விலகிச் செல்லும்…

Read More